2,000க்கும் மேற்பட்ட இலங்கை மின்சார சபை ஊழியர்கள் பாதிப்பு!

மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ் நிறுவப்பட்ட புதிய நிறுவனங்களில் இணைக்கப்படாத இலங்கை மின்சார சபையின் (CEB) ஊழியர்கள் குழு ஒன்று, அவர்களின் ஓய்வூதிய நிலை குறித்து எரிசக்தி அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. 2024 ஆகஸ்ட் 26 திகதியிட்ட அசாதாரண வர்த்தமானி எண். 2451/11 இன் படி CEB மறுசீரமைப்பைத் தொடர்ந்து, புதிதாக உருவாக்கப்பட்ட நிறுவனங்களில் உள்வாங்கப்படாத ஊழியர்களாக தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்திற்கு விண்ணப்பித்ததாக அந்தக் கடிதத்தில் ஊழியர்கள் கூறுகின்றனர். எனினும், தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்திற்கு விண்ணப்பித்த கிட்டத்தட்ட…

Read More

கொழும்பில் ரயில் தடம்புரள்வு

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கும் மருதானை ரயில் நிலையத்துக்கும் இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காலை 09.30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து மீரிகம நோக்கிச் சென்ற கடுகதி ரயில் தடம் புரண்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

தையிட்டி அமைதி வழி போராட்டத்தில் பொலிஸாரின் சித்திரவதை தொடர்பில் சர்வதேச தூதுவராலயங்களுக்கு முறைப்பாடு

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக அமைதி வழியில் ஜனநாயக ரீதியாக போராடிய எம்மை அரச அறிவுறுத்தலின் பேரில் பொலிஸார் கடுமையாக சித்திரவதை செய்துள்ளனர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவேண்டிய பொலிஸாரின் இம் மிலேச்சத்தனமான பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியான அணுகுமுறைகளுக்காக அழுத்தத்தினைப் பிரயோகிக்குமாறு வெளிநாட்டுத் தூதுவராலயங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் ரீதியிலான பொறிமுறைகளுக்கும் அரசுக்கு உதவி அளிக்கும் நிறுவனங்களுக்கும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா  நிரோஷ் கோரியுள்ளார். இலங்கையில் தமக்கு எதிராக…

Read More

களனி துருது பெரஹராவை முன்னிட்டு விசேட போக்குவரத்து

களனி ரஜ மஹா விஹாரையால் நடத்தப்படும் வருடாந்த துருது மஹா விழாவுடன் இணைந்து நடத்தப்படும் ஹெலேனா பாலிகா வித்தியாலய பெரஹெரா காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பெரஹெராவானது, இன்று செவ்வாய்க்கிழமை (23) பிற்பகல் 03.00 மணிக்கு ஹெலேனா ஆரம்பப் பாடசாலைக்கு அருகில் ஆரம்பமாகி, கல்பொரளை, வலன்கட சந்திக்கு அருகிலுள்ள விஹார மாவத்தைக்குள் நுழைந்து, பியகம வீதியூடாக சென்று களனி சிரி சுற்றுவட்டத்திற்கு அருகிலுள்ள களனி ரஜ மஹா விஹாரையின் பிரதான வாயிலுக்குள்…

Read More

வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு!

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நேற்று (22) இருவர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, முல்லேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அவிசாவளை – கொழும்பு பிரதான வீதியின் கல்வான பகுதியில், இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று திங்கட்கிழமை (22) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், வீதியைக் கடக்கும் பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.  இதன்போது, விபத்தில் காயமடைந்த பாதசாரி, முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்….

Read More

மீன்பிடிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

அச்சுவெளி –  தெற்கு கரத்தடி வாவியில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று திங்கட்கிழமை (22) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் புத்தூர் – ஆவரங்கல், பகுதியை சேர்ந்த 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சடலம் யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அச்சுவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

பொத்துவில் வனப்பகுதியில் கஞ்சா செய்கை முற்றுகை: துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

பொத்துவில் – பக்மிடியாவ வனப்பகுதியில் கஞ்சா செய்கைகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். நேற்று திங்கட்கிழமை (22) மதியம் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படை சாஸ்திரவேலி முகாமின் அதிகாரிகள் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 01¼ ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட 03 கஞ்சா செய்கைகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, 60,000 கஞ்சா செடிகள் மற்றும் இரண்டு உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு…

Read More

கொழும்பு – காங்கேசன்துறை புகையிரத  சேவை நாளை முதல் ஆரம்பம் – புகையிரத திணைக்களம்

பேரிடரால் இடைநிறுத்தப்பட்ட வடக்குக்கான புகையிரத சேவை நாளை புதன்கிழமை (24) முதல் முழுமையாக ஆரம்பிக்கப்படவுள்ளது என புகையிரதத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய யாழ்தேவி கடுகதி புகையிரதம் புதன்கிழமை (24) முதல் கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை வரை சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது. ண்ட இடைவெளிக்குப் பின்னர் யாழ் தேவி புகையிரதம் புதன்கிழமை (24) காலை 06.40 மணியவில் கொழும்பு கோட்டை  புகையிரத நிலையத்தை நோக்கி புறப்பட்டு, பகல் 02.32 மணியளவில் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை சென்றடையவுள்ளது. அதேபோல் புதன்கிழமை (24) காலை…

Read More

புதிய வரவு செலவுத்திட்ட சுற்றறிக்கை வெளியீடு

நாட்டில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கு 2025.12.05 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட வரவு செலவுத்திட்ட சுற்றறிக்கை மூலம் முன்மொழியப்பட்ட வலுவூட்டல் நிகழ்ச்சியில் முன்மொழியப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்தை மிகவும் திறமையாகவும், திறம்படவும் செயற்படுத்துவதற்காக புதிய சேர்த்தல்கள், தெளிவுப்படுத்தல்கள் மற்றும் திருத்தங்களை உள்ளடக்கிய வகையில் வரவு செலவுத்திட்ட சுற்றறிக்கை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. மீனவர்கள், கால்நடை வளர்ப்பாளர்கள், வணிக கட்டிட உரிமையாளர்கள்,…

Read More
colombo municipal council

கொழும்பு மாநகர சபை வரவு–செலவு: வருமான இலக்குகள் நடைமுறைக்கு ஏற்றதா? – கூட்டு எதிர்க்கட்சி கேள்வி

கொழும்பு மாநகர சபையின் அடுத்த ஆண்டிற்கான வரவு–செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில எதிர்பார்க்கப்பட்ட வருமானங்கள் ஆவணத்தில் அழகாக தோன்றினாலும், அவை நடைமுறையில் சாத்தியமா என்பதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என மாநகர சபையின் கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளர் எச்.எம். மன்சில் தெரிவித்தார். இந்த வருமான இலக்குகளை அடைவதற்காக வரி செலுத்தும் மக்கள்மீது கூடுதல் சுமை விதிக்கப்படுமானால், அதற்கு தாம் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டிலுள்ள கொழும்பு மாநகர…

Read More