வாகன இறக்குமதிக்காக கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளன.

வாகன இறக்குமதிக்காக இதுவரை 150 மில்லியன் டொலர் பெறுமதியான கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளதால் மீண்டும் வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை மீள நடைமுறைப்படுத்தும் எண்ணம் இல்லை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற இலங்கை இளம் தொழில்முனைவோர் பேரவையின் 26ஆவது கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வாகன இறக்குமதிக்காக வங்கிகள் திறக்கும் கடன் கடிதங்கள் தினசரி அறிக்கைகள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். பொருளாதாரம் பெரிய அதிர்ச்சியை…

Read More

பெண் நோயாளிக்கு பாலியல் வன்கொடுமை – சந்தேகநபர் கைது

தெல்லிப்பளை மனநல மருத்துவமனையில் ஒரு பெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 36 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மருத்துவமனையில் ஒரு தனியார் துப்புரவு சேவையின் மூலம் பணியமர்த்தப்பட்ட சந்தேக நபர், சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை மல்லாகம் நீதிமன்றத்தின் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும். மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Read More

யாழ். மாவட்ட செயலகத்தின் முக்கிய அறிவிப்பு!

பிறப்புச் சான்றிதழ் பதிவு செய்யாத பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடமாடும் சேவை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இம்மாதம் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பி. ப 3.00 மணிவரை அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெறவுள்ளது. இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தேவையான உரிய ஆவணங்களுடன் வருகைதந்து பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்று பயனடையுமாறு யாழ். மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

Read More

பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேகநபர் கைது.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியசாலை விடுதியில் கடந்த திங்கட்கிழமை (மார்ச் 10) இரவு பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (மார்ச் 12) கல்னேவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமையை கண்டித்தும் மற்றும் சந்தேக நபரை உடனடியாக கைது செய்யுமாறு கோரியும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில்…

Read More

தேசபந்து தென்னக்கோனை கைதுசெய்ய பகிரங்க பிடியாணை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கு இணங்க இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம – பெலென பகுதியிலுள்ள விடுதியொன்றுக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனை கைதுசெய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அண்மையில் பிடியாணை பிறப்பித்திருந்தது. இந்த விடயம் தொடர்பில் வெலிகம காவல்துறையினரால் நடத்தப்பட்ட விசாரணை…

Read More

புலமைப்பரிசில் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

ஐஸ்போதைப்பொருளுடன் மிரிஹான பகுதியில் ஒருவர் கைது.

மிரிஹான பொலிஸ் பிரிவின் பிடகோட்டே சந்தியில் நேற்று (மார்ச் 10) 10g 250mg ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு நடத்திய சோதனையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

Read More

பட்டலந்தை அறிக்கையில் உள்ள பலரின் பெயர்கள் கசிவு.

“பட்டலந்தை சித்திரவதைக் கூடம்” தொடர்பில் காவல்துறை அதிகாரிகளான டக்லஸ் பீரிஸ், நளின் தெல்கொட, மெரில் குணவர்தன ஆகியோர் உட்படப் பலரின் பெயர்கள் பட்டலந்தை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தொடர்பு உள்ளதாக பட்டலந்தை ஆணைக்குழுவின் அறிக்கையில் ஆதாரங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் குறித்த சித்திரவதைக் கூடம் செயற்பட்டு வந்த உரக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான பட்டலந்தை வீடமைப்பு தொகுதி கைத்தொழில் அமைச்சின் கீழ்…

Read More

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை கத்தி முனையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பவம் பற்றி தெரியவருவதாவது பாதிக்கப்பட்ட 32 வயது வைத்தியர் நேற்று (மார்ச் 10) தனது கடமைகளை முடித்துவிட்டு, அரசாங்கத்தால் வைத்தியர்களுக்காக வழங்கப்பட்ட அவரின் தங்குமிடத்திற்குச் சென்றுள்ளார். மாலை…

Read More

விலங்கு கணக்கெடுப்பை குறைந்த செலவில் நடத்த திட்டம்.

கால்நடை கணக்கெடுப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட செலவின அறிக்கைகள் குறித்து, வேளாண்மை, கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் செயலாளர் டி. பி. விக்கிரமசிங்க நேற்று (மார்ச் 10) ஒரு தெளிவுபடுத்தலை வெளியிட்டார். இந்தப் பணி மிகக் குறைந்த செலவில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், சேவைகளை வழங்கும் அதிகாரிகள் தன்னார்வத் தொண்டு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் மேலும், விவசாயத் துறையில் விலங்கு சேதம் குறித்த தகவல்கள் நீண்ட காலமாகப் பதிவாகியிருந்தாலும், இன்றுவரை இந்தப் பிரச்சினை குறித்த துல்லியமான மதிப்பீடு இல்லாததால், இந்தக்…

Read More