“புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம்” பெப்ரவரி 04 ஆம் திகதி ஆரம்பம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டின் கீழ் இந்திய அரசாங்கத்தின் முழு அனுசரணையுடன் இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ள “புத்த பெருமானின் புனித சின்னங்கள்” தரிசனம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை ஏழு நாட்கள் கொழும்பு, ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையில்  நடைபெறும். அதன், ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் ஜனாதிபதியின் செயலாளர்…

Read More

கல்வி மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும்போது நிபுணர்களைக் கொண்ட பொறிமுறை நிறுவப்படும் – ஜனாதிபதி

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் எழுந்துள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களையும் ஒன்றிணைத்த, முறையான சட்டக் கட்டமைப்புடன் கூடிய  பொறிமுறையை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்துடன் இன்று புதன்கிழமை (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். தற்போதுள்ள சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி, தேசிய கல்வி நிறுவகத்தை…

Read More

ஜனாதிபதி இனவாதம் பேசக்கூடாது – நாமல் ராஜபக்ஷ!

விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக நாங்கள் போராடினோமே தவிர தமிழர்களுக்கு எதிராக போராடவில்லை. கதிர்காமத்துக்கு செல்வதற்கு தமிழர்களுக்கு முழுமையான சுதந்திரம் உள்ளது. வடக்குக்கு சென்று ஜனாதிபதி இனவாதம் பேசக்கூடாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) நடைபெற்ற தித்வா புயலின் பின்னர் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.போராட்டத்தில்…

Read More

அஸ்வெசும திட்டத் தகவல் சேகரிப்பில் முறைகேடு : ஆயிரக்கணக்கான ஏழைகள் புறக்கணிப்பு – எம்.எஸ். உதுமாலெப்பை குற்றச்சாட்டு

அஸ்வெசும திட்டத்தின் பயனாளர்களின் தகவல்களை பெறுவதற்காக இளைஞர் குழு ஒன்றை நியமனம் செய்து அஸ்வெசும திட்டத்தில் ஒரு வீட்டின் தகவல்களை தருபவருக்கு 300 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெறப்பட்ட தகவல்களினால் அம்பாறை மாவட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (21)   இடம் பெற்ற நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரி நன்மைகள்…

Read More

ஒரே தேசமாக ஒன்றிணையும்போதே அந்நாட்டில் முன்னேற்றம் ஏற்படும் – சபாநாயகர்

பாராளுமன்றத்தில் அனைவருடனும் இணைந்து உண்மையான உற்சாகத்துடன் தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடுவதன் ஊடாக மனிதகுலத்தின் உண்மையான அழகும், இலங்கை தேசத்தின் ஒற்றுமையும் பிரதிபலிக்கின்றது என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார். ஒரு நாட்டில் அதன் மக்கள் தங்களுடைய கலாசார பன்முகத் தன்மையைப் பாதுகாத்து ஒரே தேசமாக ஒன்றிணையும்போதே அந்நாட்டில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் குறிப்பிட்டார். கடந்த 15ஆம் திகதி கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தைப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டுஉரையாற்றும்போதே சபாநாயகர் மேற்கண்டவாறு…

Read More

வரியை குறைப்பதாகக் கூறிவிட்டு, 500 சதவீதத்தால் அரசாங்கம் வரியை அதிகரித்துள்ளது – சமிந்திரானி கிரியெல்ல

மக்களின் வரிச் சுமையை குறைப்பதாகக் கூறிவிட்டு, வரியை 500 சதவீதத்தால் அரசாங்கம் அதிகரித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திரானி கிரியெல்ல தெரிவித்தார்.  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திரானி கிரியெல்ல செவ்வாய்க்கிழமை (06) எதுல்கோட்டேயிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றினார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அதிகப்படியான வரிகளை ஆட்சிக்கு வந்தவுடன் நீக்குவதாக தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால்,…

Read More
santhirasekar

வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம் – அமைச்சர் சந்திரசேகர்

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடு தொடர்பில் நாம் முறைமையொன்றை பின்பற்றி வருகின்றோம். அவர்களது படகுகள் தொடர்பிலும் நாம் முறைமையொன்றை பின்பற்றுகின்றோம். எவ்வாறெனினும் வெளிநாடுகளில் பின்பற்றப்படும் சட்டங்களில் நாம் கை வைக்க முடியாது. வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது மீனவர்களை விடுவிப்பதற்கு நாம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம் என கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (6) நடைபெற்ற கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே…

Read More

நோயாளிகள் சிகிச்சைகளை பெறும் நடைமுறைகளை கண்காணிக்க சுகாதார துணை அமைச்சர் ஆய்வு விஐயம்!

சுகாதார துணை அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி சமீபத்தில் களுபோவிலவில் உள்ள கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைக்கு விசேட ஆய்வு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.  சுகாதார அமைச்சினால் ஆரமபிக்கப்பட்ட  விசேட திட்டத்தின் கீழ், வைத்தியசாலைகளில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதன் மூலம், அரசாங்க வைத்தியசாலைகளை உரிய முறையில் பராமரிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு, இந்த விசேட ஆய்வு விஜயத்தை சுகாதார துணை அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி மேற்கொண்டார்.  இங்கு, வைத்தியசாலையின் வார்டுகள்,…

Read More

மாகாண சபைத் தேர்தல்களுக்கான பாராளுமன்ற விசேட குழு பிரேரணை சமர்ப்பிப்பு

மாகாண சபைத் தேர்தல்கள் எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும் அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு’ ஒன்றை நியமிப்பதற்கான பிரேரணையை பொதுநிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார். மாகாண சபைத்  தேர்தலை விரைவாக நடத்துவதற்காகவே  புதிய குழு ஒன்றை   நியமிக்கும் யோசனை முன்வைக்கப்படவுள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். காணப்படும்  குறைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகள் ஊடாக…

Read More

அமெரிக்காவின் நடவடிக்கைகளை ஜனாதிபதி எதிர்ப்பாரென எதிர்பார்க்கின்றோம் – திலித் ஜயவீர

வெனிசுவேலாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்ப்பார் என்று தான் எதிர்பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இதில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்தால், அவருக்குத் தனது நிபந்தனையற்ற ஆதரவை ‘வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள திலித் ஜயவீர, வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் நகர்வுகளுக்கு இலங்கையின் சோசலிச ஜனாதிபதி எதிர்ப்புத் தெரிவிப்பார் என்று எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒரு இறையாண்மை கொண்ட நாட்டிற்கு எதிராக அமெரிக்க…

Read More