Delcy Rodriguez

வெனிசுலா இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ்

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டதை அடுத்து, அந்நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodriguez) நியமிக்கப்பட்டதை ரஷ்யா வரவேற்றுள்ளது.  இது குறித்துப் பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சகம், அமெரிக்காவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், “நவீன காலனித்துவ அச்சுறுத்தல்களை” கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது. வெனிசுலா தனது எதிர்காலத்தை வெளிநாட்டுக் குறுக்கீடு இன்றித் தீர்மானிக்க வேண்டும் என்றும், அந்நாட்டிற்குத் தேவையான அனைத்து ஆதரவுகளையும் ரஷ்யா தொடர்ந்து வழங்கும் என்றும் மாஸ்கோ உறுதி அளித்துள்ளது.

Read More

50 பேருடன் பயணித்த நேபாளம் விமானம் விபத்து!

காத்மாண்டுவில் இருந்து சுமார் 50 பேருடன் பயணித்த நேபாளம் விமானம் ஒன்று நேபாளத்தின் பத்ராபூர் விமான நிலையத்தில் வைத்து வெள்ளிக்கிழமை (02) இரவு 9 மணியளவில் தரையிறங்கியபோது ஓடுபாதையைத் தாண்டிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். நேபாளம் விமானம் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் பத்ராபூர் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, விமானம் ஓடுபாதையில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரம் வழுக்கிச் சென்று, அங்கிருந்த…

Read More

கிரான்ஸ்-மொன்டானாவில் நிகழ்ந்த தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது

ஜனவரி 1 அன்று கிரான்ஸ்-மொன்டானாவில் நிகழ்ந்த தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இதில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 22 பேர், பிரான்ஸ் (8), இத்தாலி (6) உட்படப் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து முதன்முறையாகப் பேசிய ‘Le Constellation’ பாரின் உரிமையாளர்கள், இது ஒரு பயங்கரமான துயரம் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தங்களின் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளனர். 2020 முதல் 2025 வரை அந்த பாரில் முறையான பாதுகாப்பு ஆய்வுகள் நடத்தப்படவில்லை…

Read More

இலங்கைக்கு தங்களை மீள அனுப்புமாறு இந்திய முகாமில் வசிக்கும் மன்னார் பெண் கோரிக்கை

இலங்கைக்கு தங்களை மீள அனுப்புமாறு இந்திய முகாமில் வசிக்கும் மன்னாரைச் சேர்ந்த ராஜினி கோரிக்கை விடுக்கின்றார்.  இது தொடர்பில் நேற்று (5) மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துவிட்டு இந்திய ஊடகங்களிடம் தனது நிலை தொடர்பாக தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். தாங்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் போதியளவு அடிப்படை மற்றும் உணவு வசதிகள் இல்லாததால் தங்களை சொந்த நாட்டுக்கு அனுப்புமாறு மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை தம்மை அனுப்பி வைக்காததால் மிகுந்த…

Read More

இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெறுவது மிக அவசியம் – ட்ரம்ப்

வாஷிங்டனில் குடியரசுக் கட்சி எம்பிக்கள் மத்தியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெறுவது மிக அவசியம் என்று வலியுறுத்தினார். “நாம் வெற்றி பெறாவிட்டால், ஜனநாயகக் கட்சியினர் ஏதாவது ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து என்னைப் பதவி நீக்கம் (Impeachment) செய்ய முயல்வார்கள்” என்று அவர் எச்சரித்தார். வரலாற்று ரீதியாக, ஆட்சியில் இருக்கும் கட்சி இடைத்தேர்தலில் பின்னடைவைச் சந்திக்கும் வழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும், விலைவாசி உயர்வு…

Read More

 28 வயது ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இளைஞர் சுவிட்சர்லாந்தில் உயிரிழந்தார்

சுவிட்சர்லாந்தின் லாடர்ப்ரூனன் (Lauterbrunnen) பகுதியில் உள்ள கிம்மல்வால்டில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பேஸ் ஜம்பிங் (Base jumping) விளையாட்டில் ஈடுபட்டிருந்த 28 வயது ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். தனது நண்பருடன் இணைந்து ‘நேபாளப் பாலத்தில்’ இருந்து குதித்தபோது, எதிர்பாராதவிதமாக மலையின் தரைப்பகுதியில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மீட்புப் படையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் அவரது உடலை மீட்டனர். இவ்விபத்து குறித்து சுவிஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் மூவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை  (06) 500 மில்லியன் ரூபா மதிப்புள்ள “குஷ்” என்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இன்றைய தினம் காலை விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள ‘கிரீன் செனல்’ வழியாக தப்பிச் செல்ல முயன்ற மூன்று வெளிநாட்டு பயணிகள் குஷ்  போதைப்பொருளுடன் சுங்க போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் எனவும்  27 வயதுடைய அந்த நபர் மும்பையில் உள்ள…

Read More

கிரான்ஸ்-மொன்டானா பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் காணமல் போனோரை இனம் காண முடியாத நிலை ; உடல்கள் கடுமையாகச் சிதைந்துள்ளதாக தெரிவிப்பு

கிரான்ஸ்-மொன்டானா பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 16 முதல் 26 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என தெரிவிக்கப்படுள்ளது . உயிரிழந்தவர்களின் உடல்கள் கடுமையாகச் சிதைந்துள்ளதால், அவர்களை அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்குச் சில நாட்கள் ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இதனால் உறவினர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் உடன்பிறப்புகள் மற்றும் நண்பர்களின் புகைப்படங்களைப் பகிர்ந்து, அவர்கள் குறித்த தகவல்களைத் தேடி வருகின்றனர்.

Read More

கிரான்ஸ்-மொன்டானா தீ விபத்து ; போதிய தீயணைப்பு வசதிகள் இன்மை என குற்றசாட்டு

கிரான்ஸ்-மொன்டானாவில் சுமார் 40 பேரை பலிகொண்ட தீ விபத்து  2003-ல் அமெரிக்காவின் ‘தி ஸ்டேஷன்’ கிளப்பில் நடந்த துயரத்தை நினைவுபடுத்துகிறது என தெரிவிக்கப்படுள்ளது . ஷாம்பெயின் பாட்டிலில் இருந்த பட்டாசுப் பொறிகள், மேற்கூரையில் இருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய ஒலித்தடுப்பு அட்டைகள் மீது பட்டதே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க விபத்திலும் இதேபோல் பட்டாசுப் பொறிகளால் நுரை பஞ்சுகள் (polyurethane foam) தீப்பற்றி 100 பேர் உயிரிழந்தனர் இத்தகைய விபத்துகளில் இருந்து பாடம்…

Read More

தைவான் ஆயுத விற்பனை: அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்களுக்கு

தைவானுக்கு ஆயுதங்கள் விற்றதற்காக அமெரிக்காவின் 20 பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் 10 முக்கிய நபர்களுக்கும் சீனா தடை விதித்துள்ளது.  போயிங் உள்ளிட்ட நிறுவனங்களின் சீனாவில் உள்ள சொத்துகள் முடக்கப்பட்டு, சீன நிறுவனங்களுடன் வணிகம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.  கடந்த வாரம் அமெரிக்கா அறிவித்த 11.1 பில்லியன் டாலர் ஆயுத ஒப்பந்தமே இதற்குக் காரணம். தைவான் விவகாரம் சீனாவின் முக்கிய நலன் என பெய்ஜிங் எச்சரித்துள்ளது.

Read More