கொலம்பியா விமானங்களுக்கு தடை விதித்த வெனிசுலா

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த ஜூலை மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். தேர்தலில் மோசடி நடந்ததாகக்கூறி எதிர்க்கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். அப்போது எதிர்க்கட்சியினருக்கு கொலம்பியா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் ஆதரவு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கிடையே, வரும் 25-ம் தேதி அங்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை சீர்குலைக்கும் வகையில் நடைபெறும் போராட்டத்தில் தூதரகங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள்…

Read More

சுவிஸ் பொருளாதாரம் குறித்து வெளியான ஆய்வுத் தகவல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த புதிய வர்த்தகக் கட்டுப்பாடுகள் மற்றும் சுங்கக் கட்டணங்கள், உலக வர்த்தகத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையினால் சுவிட்சர்லாந்தின் பொருளாதார வளர்ச்சியை நெடுங்கால சராசரியைவிடக் குறைவாக காணப்படும் என UBS வங்கி வெளியிட்ட புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் அறிவித்த சுங்கக் கட்டணங்கள், உலகளாவிய பொருளாதார மந்தநிலையை உருவாக்கவில்லை என்றாலும், வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 2025ல் சுவிஸ் நாட்டின் வளர்ச்சி விகிதம் 1% மட்டுமே இருக்கும் என நிபுணர்கள்…

Read More

நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்

நேபாளத்தில் இன்று மாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 5.56 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 27.82 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 87.02 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

Read More

துருக்கிக்கு எதிராக வெடிக்கும் போராட்டம்.. நிறுத்தப்பட்ட அப்பிள் இறக்குமதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய பதட்டங்களுக்கு மத்தியில் துருக்கிக்கு எதிரான குரல்கள் எழுந்துள்ளன. ஆயுதங்கள் வழங்குவது உட்பட பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவான நிலைப்பாட்டுடன் செயல்படுவதால் ‘துருக்கியைத் தடை செய்’ என்ற ஹஷ்டேக் இணையத்தில் டிரண்ட் ஆகி வருகிறது. இதனிடையே மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த வியாபாரிகள் துருக்கி ஆப்பிள்களை இறக்குமதி செய்வதை கைவிட்டுள்ளனர். இதன் விளைவாக துருக்கிய ஆப்பிள்கள் புனே சந்தைகளில் இருந்து கிட்டத்தட்ட மறைந்துவிட்டன. துருக்கிய ஆப்பிள்களைப் புறக்கணிப்பது புனேவின் பழச் சந்தைகளில் பெரும் தாக்கத்தை…

Read More

சீனா மற்றும் அமெரிக்காவினால் வரிகள் தொடர்பான ஒப்பந்தம்

சீனா மற்றும் அமெரிக்காவினால் வரிகள் தொடர்பாக ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பிலான தெளிவுபடுத்தல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன

Read More

திபெத்தில் நில அதிர்வு

திபெத் நாட்டில் 5.7 மெக்னிடியூட் அளவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை 2.41 அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த நில அதிர்வில் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகின்றது.

Read More

ஆப்கானிஸ்தானில் சதுரங்க விளையாட்டுக்கு தடை

ஆப்கானிஸ்தானில் சதுரங்க விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து விளையாட்டு இயக்குநரக செய்தித் தொடர்பாளர் அடல் மஷ்வானி கூறுகையில், “இஸ்லாமிய ஷரியாவின் கீழ் சதுரங்கம் சூதாட்டத்தின் ஒரு வழிமுறையாக கருதப்படுகிறது. இது நாட்டின் நன்மையை ஊக்குவித்தல் மற்றும் தீமையைத் தடுப்பதற்கான சட்டத்தின் படி தடைசெய்யப்பட்டுள்ளது. சதுரங்க விளையாட்டிற்கு மத ரீதியான ஆட்சேபனைகள் உள்ள நிலையில் அது தீர்க்கப்படும் வரை, ஆப்கானிஸ்தானில் இந்த விளையாட்டு நிறுத்தி வைக்கப்படும்.” இவ்வாறு அவர் கூறினார். இந்த முடிவு சதுரங்க ஆர்வலர்கள் மற்றும்…

Read More

புதிய பாப்பரசர் தேர்விற்கான முதல் வாக்குப்பதிவு நிறைவு

கான்கிளேவ் அவையின் முதல் வாக்குப்பதிவில் புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை எடுத்துரைக்கும் வண்ணம் கரும்புகை வெளியிடப்பட்டதாக வத்திக்கான் ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது. குறித்த வாக்குப்பதிவானது நேற்று (07) இடம்பெற்றிருந்தது. வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் ஏறக்குறைய 45,000 மக்கள் புதிய பாப்பரசர் தேர்விற்கான முடிவுகளை அறிய ஆவலுடன் காத்திருந்த போது, இரவு 9 மணியளவில் (உரோம் உள்ளூர் நேரப்படி) கரும்புகை வெளியிடப்பட்டு புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற விடயம் அறிவிக்கப்பட்டது.

Read More

ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல்- இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நடத்தி உள்ளது.இந்த தாக்குதலை தொடர்ந்து, மத்திய மந்திரிசபை கூட்டம் அவசரமாக கூடியது. பிரதமர் மோடி தலைமை தாங்கினார். இந்திய படைகளின் ஏவுகணை தாக்குதல் பற்றி மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.பின்னர், பாதுகாப்புக்கான மந்திரிசபை குழு கூட்டமும் நடந்தது.மத்திய மந்திரிசபை கூட்டத்துக்கு முன்பாக, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்…

Read More

பயங்கரவாதிகளின் 9 முகாம்களைக் குறிவைத்து இந்திய இராணுவம் தாக்குதல்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்களைக் குறிவைத்து, இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியது. ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எனவும் இன்று புதன்கிழமை விவரங்கள் வெளியிடப்படும் என்று பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்களை மட்டுமே குறிவைத்து, தாக்குதல் நடத்தியதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது. எனினும் கோட்லி, முசாபர்பாத், பாவல்பூர் ஆகிய 3 இடங்களில் பயங்கரவாதிகளை குறிவைத்து இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் தெரிவித்துள்ளார்…

Read More