இறந்து 8 நிமிடங்களில் மீண்டும் உயிர் பெற்ற பெண்

கொலராடோவைச் சேர்ந்த 33 வயது பிரியானா லாஃபர்டி, மயோக்ளோனஸ் டிஸ்டோனியா எனும் உயிருக்கு ஆபத்தான நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டவர், சுமார் 8 நிமிடங்கள் மருத்துவ ரீதியாக உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், தனது நினைவு மறுபக்கத்தில் இருந்த அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார். பிரியானா, தனது உடல் “கைவிட்ட” நிலையில், மருத்துவ ரீதியாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். அப்போது, “தயாராக இருக்கிறீர்களா?” என்று கேட்கும் ஒரு குரலை கேட்டதாகவும், பின்னர் முழு இருளில் மூழ்கியதாகவும் கூறினார். அவரது ஆன்மா உடலில் இருந்து பிரிந்து,…

Read More

கொலராடோ தாக்குதலுக்கு இஸ்ரேலின் ஐ.நா தூதர் கண்டனம்

ஹமாஸ் சிறையிலிருந்து பணயக்கைதிகளை பாதுகாப்பாக மீட்டுத் தருமாறு அழைப்பு விடுத்து அமைதியான பேரணியில் பங்கேற்றவர்கள் மீது மோலோடோவ் காக்டெய்ல்களை ஒருவர் வீசிய சம்பவத்தைத் தொடர்ந்து, கொலராடோவின் போல்டரில் யூத ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேல் தூதர் டேனி டானன் ஒரு பயங்கரவாதச் செயலாகக் கண்டித்துள்ளார். 45 வயதான முகமது சப்ரி சோலிமான் என அடையாளம் காணப்பட்ட தாக்குதல் நடத்தியவர், தாக்குதலைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார், இதனால் பலர் காயமடைந்தனர்….

Read More

மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றத்திற்கு ஒப்புக்கொண்ட உக்ரைன் மற்றும் ரஷ்யா

இதுவரை நடந்த மிகப்பெரிய போர்க் கைதிகள் பரிமாற்றத்துடன், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை துருக்கிய பெருநகரத்தில் முடிவடைந்தது. ஆனால் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. ரஷ்ய மற்றும் உக்ரைனிய பிரதிநிதிகள் இன்றைய சந்திப்பை முடித்தனர். இது வெளிப்படுத்தப்படாத காரணங்களுக்காக குறைந்தது இரண்டு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. இந்த புதிய சுற்று தொடர்புகளில் இரு தரப்பினரும் சுமார் 6,000 போர்க் கைதிகளையும் போரில் கொல்லப்பட்ட வீரர்களின் உடல்களையும் பரிமாறிக்…

Read More

பாரிஸ் கால்பந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் கலவரம் – நூற்றுக் கணக்கானோர் காயம்

பிரான்சில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி வெற்றி கொண்டாட்டங்களில் வன்முறை வெடித்ததில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். சாம்பியன்ஸ் லீக் போட்டியில் PSG கால்பந்து கிளப் அணி, இன்டர் மிலனை தோற்கடித்தது. ஆயிரக்கணக்கான PSG ரசிகர்கள், தலைநகர் பாரிஸின் தெருக்களில் இறங்கி பெரிய அளவிலான கொண்டாட்டங்களைத் தொடங்கினர். இந்நிலையில் கூட்டத்தில் எதிர் அணிகளின் ரசிகர்களுக்கும் PSG ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் வெடித்தன. இது கடுமையான மோதல்களுக்கு வழிவகுத்தது. இந்த வன்முறை சம்பவங்களில் இரண்டு பேர்…

Read More

நைஜீரியா: பேருந்து விபத்தில் 21 தடகள வீரர்கள் உயிரிழப்பு

நைஜீரியாவின் ஓகுன் மாகாணத்தில் தேசிய விளையாட்டு விழா நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற தடகள வீரர்கள் ஒரு பஸ்சில் கானோ நகருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அந்த பஸ், தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்தில் சிக்கியது. இதில் 21 தடகள வீரர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து டிரைவரின் சோர்வு அல்லது அதிக வேகத்தின் காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நைஜீரியாவின் மோசமான சாலைகளினாலும் போக்குவரத்து விதிகளை மதிக்காமலும் வேகமாக…

Read More

ரஷ்யாவில் இடிந்து விழுந்த பாலம் : 07 பேர் பலி

ரஷ்யா முழுவதும் தனித்தனி சம்பவங்களில் பாலங்கள் இடிந்து விழுந்ததில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரையன்ஸ்க் பகுதியில் ஒரு நெடுஞ்சாலை பாலம் இடிந்து விழுந்ததில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலில் பயணித்த ஏழு பேர் உயிரிழந்தனர். மற்றும் 69 பேர் காயமடைந்தனர் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. அதேநேரம் இது குறித்து உக்ரைன் தரப்பில் இருந்து…

Read More

இந்தியாவின் கொட்டி தீர்த்த அடைமழை : இருபத்திற்கும் மேற்பட்டோர் பலி

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் பெய்து வரும் பருவமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அஸ்ஸாம் மாநிலத்தின் குவஹாத்தி நகரில் சனிக்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் வீடுகள் புதைந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ வெள்ள அறிக்கை தெரிவித்துள்ளது. சீனாவின் எல்லையை ஒட்டிய அண்டை மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில், வெள்ளிக்கிழமை வாகனம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். மாநிலத்தில்…

Read More

ராஜஸ்தானில் 9 பேருக்கு கொரனோ பாதிப்பு

தெற்காசியாவில் கொரனோ தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் அதன் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுள்ளதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்து 16 நாட்களே ஆன குழந்தை உட்பட 9 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்….

Read More

விளம்பரங்களால் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

சமூக ஊடக விளம்பரம் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் உணவுப் பழக்கத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் டிக்டாக் போன்ற சமூக ஊடகங்களில் தொடர்ந்து பார்க்கும் விளம்பரங்களால் பல சிறுவர்கள் தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இசபெல் ஹேன்சன் நடத்திய ஆய்வில், இந்த விடயம் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில், 13-17 வயதுடையவர்கள் சமூக ஊடகங்களில் ஒரு மணி நேரத்திற்கு 17 விளம்பரங்களைப்…

Read More

சீனாவில் மணப்பெண் தட்டுப்பாடு – ஏக்கத்தில் 30 இலட்சம் இளைஞர்கள்

சீனாவில் சுமார் 30 இலட்சம் இளைஞர்களுக்கு மணப்பெண் தட்டுப்பாடு என்ற சூழல் நிலவி வரும் நிலையில்,பங்களாதேஷில் இருந்து மணப்பெண்களைக் கடத்தி சட்டவிரோதமாக திருமணம் செய்ய சீன மணமகன்கள் முன்வருகின்றனர். தரகர்கள், ஒன்லைன் விளம்பரங்கள் மூலம் இதுபோன்ற திருமணங்கள் நடக்கின்றன. இதனால் பங்களாதேஷில் உள்ள சீன இளைஞர்கள் யாரும் வெளிநாட்டு பெண்களை மணக்க வேண்டாம் என அந்நாட்டு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

Read More