உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…
90ஸ் கிட்ஸ்சின் கிரிக்கட் ஆதர்ச நாயகர்கள் கலந்து கலக்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (IML) வெப்ரவரி 22ம் திகதி ஆரம்பமாகின்றது.

விளையாட்டுகளில் கணவான்கள் விளையாட்டாக அறியப்படும் கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் என்றும் குறைவதில்லை. குறிப்பாக 90ஸ் கிட்ஸ் ஆதர்ச நாயகர்கள் என்று அழைக்கப்படும் தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வேபெற்ற வீரர்கள் மீண்டும் களத்தில் கலக்குவதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றார்கள்.
இதனை அறிந்தே சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (IML) கிரிக்கெட் போட்டி தொடர் நடத்தப்படவுள்ளது. டி20 பாணியில் நடத்தப்படும் இந்த தொடரில் ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். 2025ம் ஆண்டுக்கான சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் வெப்ரவரி 22ம் தேதி முதல் மார்ச் 16ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது.
இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், மற்றும் இங்கிலாந்து ஆகிய 6 அணிகளில் கிரிக்கட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்காரா, ஜாக் காலிஸ், பிரையன் லாரா, ஷேன் வாட்சன் உள்ளிட்ட பல்வேறு வீரர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இலங்கை அணி ஆரம்ப சுற்றில் 5 போட்டிகளில் விளையாட உள்ளது. 22 ஆம் திகதி தொடரின் ஆரம்பநாள் ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக களமிறங்குகின்றது இலங்கை அணி. இந்தப்போட்டி மும்பையில் இரவு 7.30 ஆரம்பமாகின்றது.

இலங்கை அணி எதிர்வரும் 26 ஆம் திகதி தென்னாப்பிரிக்காவையும், 28 ஆம் திகதி அவுஸ்திரேலியாவையும், மார்ச் 6 ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகளையும், மார்ச் 10 ஆம் திகதி இங்கிலாந்து அணியையும் எதிர்கொள்ளவுள்ளது .