தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது , ஹெரோயின் போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
IPL இன் இன்றைய முக்கிய இரண்டு போட்டிகள்
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.
முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
கொல்கத்தாவில் நடைபெறும் குறித்த போட்டியானது, இன்று மாலை 3.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
இத்தொடரின் இன்றைய தினத்திற்கான இரண்டாவது போட்டியானது, இரவு 7.30 க்கு நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

