போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்குக்கூட தயார் இல்லை – ஈரான்

இஸ்ரேலின் தாக்குதலுக்கு தற்போது போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இல்லை என்று ஈரான் மத்தியஸ்தர்களான கட்டார் மற்றும் ஓமானிடம் ஈரான் குழுவினர் தெரிவித்துள்ளனர். இரு நாடுகளும் புதிய தாக்குதல்களைத் தொடங்கி, பரந்த மோதல் ஏற்படும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ள நிலையில், தகவல் தொடர்புகள் குறித்து அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். இஸ்ரேலின் முன்கூட்டியே தாக்குதல்களுக்கு ஈரான் தனது பதில் தாக்குதலை முடித்த பின்னரே தீவிர பேச்சுவார்த்தைகளைத் தொடருவோம் என மத்தியஸ்தர்களிடம் தெரிவித்தனர். “தாக்குதலுக்கு உள்ளாகும்போது…

Read More

செயற்திறன் இல்லாவிட்டால் அரசாங்கத்தை வரட்டியடிக்கலாம் – சபாநாயகர்

ஒரு அரசாங்கம் செயற்திறன் அற்றதாக காணப்படுமிடத்து பொதுமக்கள் முன்வந்து அவ்வரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும் என்று சபாநாயகர் மருத்துவர் ஜகத் விக்கிரமரத்ன வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர், அரசாங்கம் சரியாக செயற்படாத நிலையில் அதனை விரட்டியடிப்பது ஒவ்வொரு பிரஜையின் கடமையாகும். அரசாங்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பொதுமக்களின் பொறுப்புகளில் ஒன்றாகும் அதனை பொதுமக்கள் விட்டுகொடுத்துவிடக் கூடாது என்று உரையாற்றினார்.

Read More

88 நபர்களின் சொத்துக்கள் முடக்கம்.

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 88 நபர்களின் சொத்துக்களை அண்மைக்காலத்தில் முடக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களுள் போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 26 நபர்களும் உள்ளடங்கியுள்ளனர். ஏனையவர்கள் பணச்சலவை சட்டத்தின் கீழ் வரும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணிகள், ஆடம்பர வீடுகள், வாகனங்கள், நகைகள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன. அவற்றின் பெறுமதி அண்ணளவாக நான்கு பில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகள் குழு.

சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட உதவி முகாமையாளர் கலாநிதி கீதா கோபிநாத் உள்ளிட்ட குழுவினர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ சுற்றுப் பயணமாக இலங்கை வந்துள்ளனர். இந்த விஜயத்தின் போது “இலங்கையின் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வருதல், கடன் மற்றும் நிர்வாகம்” என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள மாநாட்டின் முக்கிய அதிதியாகவும் அவர் கலந்துகொள்ளவுள்ளார். இந்த மாநாட்டை நிதியமைச்சு, மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ளன. அதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று(ஜூன் 16)…

Read More

MMCA Sri Lanka on the Move

The Museum of Modern and Contemporary Art Sri Lanka (MMCA Sri Lanka) is pleased to announce that it has moved from its temporary premises at Crescat Boulevard, Colombo 3 in order to focus on the next phase of the museum’s development. This new phase will accelerate the planning, training, and programming required to open, staff,…

Read More

DPMC expands reach with new Bajaj three-wheeler dealership in Embilipitiya

David Pieris Motor Company (Private) Limited (DPMC) has opened a new Bajaj three-wheeler dealership in Embilipitiya, marking a major milestone as this is the first Bajaj dealership since the reopening of vehicle imports after a five-year pause. With this new launch, DPMC is expanding its presence beyond Colombo, taking a bold step toward enhancing access…

Read More

சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை

அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…

Read More

சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதைக்கு பூட்டு

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நோர்டன் பிரிட்ஜில் இருந்து கினிகத்தேன, தியகல வழியாக ஸ்ரீபாத வரையிலான சாலை 10 நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது இப்பகுதியில் உள்ள பாலம் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால், புதிய பாலம் அமைப்பதற்காக இந்தச் சாலை மூடப்படுகிறது. அதன்படி, இன்று (14) முதல் ஜூன் 24 வரை, 10 நாட்களுக்கு சாலை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாலை மூடப்பட்டிருக்கும் காலத்தில், வாகன ஓட்டிகள் நோர்டன் பிரிட்ஜ் சாலை மற்றும்…

Read More

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என ட்ரம்ப் எச்சரிக்கை

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் அணு சக்தி தளங்கள், ராணுவ முகாம்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப் படை நேற்று தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் பதிலடி வழங்கியது. இதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அணு சக்தி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த நாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது….

Read More

ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்

ஈரான் சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டது இந்த தாக்குதல்களுக்கு, மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக ஈரானின் அரசுத் தகவல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது, இஸ்ரேல் வெள்ளிக்கிழமை காலை மேற்கொண்ட தாக்குதலுக்கான ஈரானின் “தீவிர பதிலடி நடவடிக்கையின் தொடக்கம்” என விளக்கப்பட்டுள்ளது. “தற்போதிய நிமிடங்களில், பலவகையான நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களை நோக்கி ஏவப்பட்டுள்ளன. இது இஸ்ரேல் நடத்திய வன்கொடுமையான…

Read More