48 மணி நேர ரோலர் கோஸ்டர் அனுபவம்.. கப்பலில் காத்திருந்த அதிர்ச்சி

அன்டார்டிகா மற்றும் ஆர்ஜன்டினாவின் தெற்கு முனை இடையிலான கடல் பகுதியில் சொகுசு கப்பலில் பயணித்தவர்கள், 40 அடி உயரத்துக்கு எழும்பிய அலைகளால் பீதி அடைந்தனர். அன்டார்டிகாவிற்கும் தென் அமெரிக்க கண்டத்தின் தெற்கு முனைக்கும் இடையிலான கடல் பகுதி, பயங்கர அலைகளுடன் எப்போதும் கொந்தளிப்புடன் இருக்கும். இந்த கடலில் ஒரு சொகுசு பயணக் கப்பலில் பயணித்த பயணிகள், 40 அடி உயர அலைகள் கப்பலைத் தாக்கியபோது, ​​மிகப்பெரிய திகிலூட்டும் அனுபவத்தைப் பெற்றனர். அவர்கள் எடுத்த காணொளியில், கப்பலின் பிரமாண்டமான…

Read More

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் எனவும் அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய, சப்ரகமுவ,…

Read More

இன்று இலங்கை வரவுள்ள இந்தியப் பிரதமர்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) மாலை இலங்கை வரவுள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில்,இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்த விஜயத்தில் இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர்மட்ட இந்தியக் குழுவும் இணைய உள்ளது….

Read More

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது

கிரிபாவ பொலிஸ் பிரிவில் வீடொன்றிற்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் மாத்தறை பிரதேசத்தில் வைத்து நேற்று (03) கைது செய்யப்பட்டதாக கிரிபாவ பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் கடந்த 2ஆம் திகதி வீடொன்றுக்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி 157,000 ரூபா பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக கிரிபாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கமைய, கல்கமுவ…

Read More

வீர தீர சூரன் ஒரு வார அதிகாரபூர்வ வசூல்

விக்ரம் நடிப்பில் SU அருண் குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படம் கடந்த வியாழன் அன்று ரிலீஸ் ஆகி இருந்தது. நீதிமன்ற வழக்கு காரணமாக முதல் நாள் ரிலீசுக்கு தடங்கல் ஏற்பட்ட நிலையில் மாலையில் தான் முதல் காட்சியே திரையிடப்பட்டது. இந்நிலையில் வீர தீர சூரன் ஒரு வாரத்தில் செய்திருக்கும் வசூலை தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார். உலக அளவில் 52 கோடி ரூபாய் தற்போது வரை வசூல் வந்திருக்கிறதாம். இந்த வாரமும் பெரிதாக போட்டி…

Read More

சமூக ஊடகங்களை ஆளும் “ஜிப்லி”

சமூக ஊடகங்களில் திரும்பிய பக்கமெல்லாம் ஜிப்லி காா்ட்டூன் படங்களே நிறைந்திருக்கின்றன. மக்கள் அனைவரும் தங்களின் புகைப்படங்களை ஜிப்லி காா்ட்டூன் பாணியிலான அனிமேஷன் (வரைகலை) படங்களாக மாற்றி, தங்கள் சமூக ஊடகக் கணக்குகளில் பதிவிட்டு வருகின்றனா். பலரது சுயவிவரப் படங்களிலும் இந்த ஜிப்லி காா்ட்டூன் படங்கள் அலங்கரிக்கின்றன. ‘ஓபன் ஏஐ’ நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவியான ‘சாட்ஜிபிடி’ உள்ளிட்ட சில தகவல் உதவி செயலிகள்தான் மக்களுக்கு இந்த ஜிப்லி காா்ட்டூன் படங்களை இலவசமாக உருவாக்கித் தருகின்றன. சமூக…

Read More

மெக்சிகோ எல்லையை கண்காணிக்க குதிரைகளைப் பயன்படுத்தும் வீரர்கள்

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மற்றும் மெக்சிகோவின் ச்சிவாவா எல்லையில், கண்காணிப்புப் பணிகளுக்கு அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையினர் குதிரைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். பல்வேறு நிலப்பரப்புகளில் தொலைதூரப் பகுதிகளில் ரோந்துப் பணிகளை மேற்கொள்ளவும், அவசர உதவிகளை விரைவாக கொண்டு செல்லவும் குதிரைகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். சட்டவிரோத குடியேறிகள் மீதான நடவடிக்கை காரணமாக, அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் மார்ச் மாதத்தில் பிடிபட்டவர்களின் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

Read More

உக்ரைன் போரை நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் – டிரம்ப்

உக்ரைன் மீதான போரை நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ரஷ்ய – உக்ரைன் போர் அர்த்தமற்ற போர் என்றும், அதை நிறுத்துவதற்கான அனைத்துவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். போரில் சராசரியாக வாரம்தோறும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பதாகவும், அவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றாலும், அவர்களும் மனிதர்கள்தான் என்றும் அவர் தெரிவித்தார்.

Read More

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவமனை அமைத்த இந்திய ராணுவம்

நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேயில், 60 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையை இந்திய ராணுவம் அமைத்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு அவசர அறுவை சிகிச்சைகள், அத்தியாவசிய மருத்துவ சேவைகள் அங்கு அளிக்கப்படுவதாக ராணுவத்தினர் தெரிவித்தனர். இதுவரை 200 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Read More

விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள் அதிகரிப்பு

இந்த வருடம் ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்களில் மாத்திரம் 565 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக 592 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டில் வாகன விபத்துகளைக் குறைப்பதற்காக கொழும்பில் இன்று (3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பிரதானி, பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்திக ஹபுகொட இதனைத் தெரிவித்தார். பல்வேறு தேவைகளுக்காக வீடுகளை விட்டு வெளியேறிச் செல்லும் 7 முதல் 8 பேர் வரை நாளாந்தம்…

Read More