அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு குறித்து ஜனாதிபதியுடன் சந்திப்பு

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த வரி விதிப்பு பின்னணி அடிப்படையிலும், சிறிய பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையைப் போன்ற நாடுகள் பாரிய அளவில் வரி விதிப்பதால் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது. ஏற்பட்டிருக்கும் நிலை தொடர்பில், ஒரு நாடு என்ற வகையில் எவ்வாறு செயற்படுவது மற்றும்…

Read More

ஹிக்கடுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

ஹிக்கடுவ – குமாரகந்த பகுதியில் இன்று (03) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் பலத்த காயமடைந்த கணவன், மனைவி இருவரும் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கணவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹிக்கடுவ – குமாரகந்த பகுதியில் இன்று (3) இரவு 7 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதிக்கு அருகில் உள்ள…

Read More

கச்சத்தீவை மீட்கவேண்டும், பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தல்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஏற்கனவே தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அத்துடன் இலங்கை சிறையில் இருந்து தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களை விடுதலை செய்து மீட்டு வர வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதேநேரம் பாக் வளைகுடா பகுதியில் வாழும் இந்திய கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்கும் வகையில், கச்சத்தீவை திரும்பப் பெறுவது தொடர்பாக நேற்று (ஏப்ரல் 02) அன்று…

Read More

கொழும்பில் அரசுக்கு எதிராக பாரிய போராட்டம்

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை தற்போதைய அரசாங்கம் நிறுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (ஏப்ரல் 03) நடைபெற்ற போராட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அநுர அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது ஜனநாயக ரீதியான பேசும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்காகவே.ஆனால் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது 27 பேரை கைது செய்துள்ளதுடன் இதுவரைக்கும் பல்கலைக்கழக ஒன்றியத்தின் தலைவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.அப்படியென்றால்…

Read More

வவுனியாவில் மூவர் கஞ்சாவுடன் கைது…!

வவுனியாவில் கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது இன்று (ஏப்ரல் 03) விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா, கணேசபுரம் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதன்போதே மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 15 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதோடு அதனை வைத்திருந்த கணேசபுரம், கூமாங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25 – 32 வயதிற்குட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் ,கைப்பற்றப்பட்ட…

Read More

முறையற்ற காணொளி பகிர்வால், பதவி இழந்த அமெரிக்க நகர முதல்வர்

அமெரிக்காவில் உள்ள ஒரு மாநகர முதல்வர், உள்ளூர் நகர பெண் சட்டத்தரணி ஒருவருக்கு முறையற்ற ரீதியில் வெளிப்படையான காணொளியை அனுப்பிய நிலையில், தமது பதவியில் இருந்து விலகியுள்ளார். அமெரிக்காவின் வடக்கு டகோட்டாவின் மினோட்டின், பதவி விலகிய முன்னாள் முதல்வரான டேம் ரோஸ் என்பவர், தனது மதிய உணவு இடைவேளையின் போது முறையற்ற காணொளியை தனது நண்பி ஒருவருக்கு அனுப்புவதற்கு பதிலாக பெண் சட்டத்தரணி ஸ்டெபானி ஸ்டால்ஹெய்ம் என்பவருக்கு தவறுதலாக அனுப்பியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்தநிலையில், குறித்த தவறினை சுத்தகரித்தபோதும்…

Read More

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு !

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எச். ஜே.எம்.சி அமித் ஜயசுந்த தெரிவித்தார். பரீட்சை ஆணையாளர் நாயகம் எச். ஜே.எம்.சி அமித் ஜயசுந்த மேலும் தெரிவிக்கையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை நாளை ஏப்ரல் 04 முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி நள்ளிரவு 12:00 வரை இணையவழி (online) ஊடாக விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எக்காரணம்…

Read More

பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் திடீர் மரணம்

வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்த இளைஞர் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். வெலிக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் அந்த இளைஞன் நுழைந்ததாக கூறி, அப்பகுதி மக்கள் 119 என்ற பொலிஸ் அவசர எண்ணுக்கு அழைத்துள்ளனர். அத்துடன் அவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்க மக்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். காவலில் இருந்தபோது அவர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், முல்லேரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக வெலிக்கடை பொலிஸ் அதிகாரிகள்…

Read More

ரஷ்யாவில் புதிய வைரஸ்!

ரஷ்யாவில் பரவி வரும் மர்மமான வைரஸ் காரணமாக அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் குழப்பமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கோவிட் தொற்றுக்கு பிறகு மக்களிடையே பல புதுவிதமான தொற்றுநோய்கள் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்பொழுது ரஷ்ய மக்களை இனம்கண்டுகொள்ளாத குறித்த வைரஸ் தாக்கி வருகிறது. இதன் அறிகுறிகள் அதிக காய்ச்சல் மற்றும் இரத்தம் கலந்த இருமல் உருவாகும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த வைரஸினால் பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 10 நாட்களுக்கு மேல் அதிக…

Read More

தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

நாட்டில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அதற்கமைய நேற்றைய தினத்துடன்(ஏப்ரல் 02) ஒப்பிடும் போது, இன்றையதினம் (ஏப்ரல் 03) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது. 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 32,970 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 263,750 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 30,230 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப்…

Read More