கோலாகலமாக ஆரம்பமாகும் IPL திருவிழா

உலகின் பணக்கார கிரிக்கெட் லீக் என்று கருதப்படும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) இன்று (22) தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் முந்தைய சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி உள்ளூர் நேரப்படி இரவு 7.30 க்கு தொடங்குகிறது. கொல்கத்தா அணிக்கு அஜிங்க்யா ரஹானே தலைமை தாங்குவார் என்றும், பெங்களூரு அணிக்கு ரஜத் படிதார் தலைமை தாங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

Read More

வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு கடுமையான சட்டம்

வரி ஏய்ப்பு மற்றும் வரியை ஏமாற்றும் அனைத்து வர்த்தகர்களுக்கும் எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார் மேலும் லஞ்சத்திற்கு எதிராக கடுமையான முடிவு எடுக்கப்படும் என்றார். ஒவ்வொரு அரசாங்க உத்தியோகத்தரும் மேலதிகக் கட்டணங்கள் இன்றி ஒதுக்கப்பட்ட கடமையை நிறைவேற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

Read More

சியாம்பலாண்டுவில் ஒரு புதிய சூரிய மின் நிலையம்

சியாம்பலாண்டுவில் புதிய சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போதே இது இடம்பெற்றுள்ளது. மன்னாரில் காற்றாலை மின் நிலையத்தை ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Read More

ஹீத்ரோ விமான நிலைய சேவைகள் மீண்டும் ஆரம்பம்

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமானங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன . விமான நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் விமான நிலைய நிர்வாகம் நேற்று (21) பெரும்பாலான விமான சேவைகளை நிறுத்தியிருந்தது. ஹீத்ரோ விமான நிலையம் திடீரென மூடப்பட்டதால் சுமார் 2 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read More

நீர் இன்றி அமையாது உலகு – இன்று சர்வதேச நீர் தினம்

ஆண்டுதோறும், மார்ச் 22 ஆம் திகதி சர்வதேச நீர் தினம் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ அங்கீகாரத்துடன் மார்ச் 22 என்பது உலக நீர் தினம் எனத் தீர்மானிக்கப்பட்டு உலகெங்கும் கொண்டாடப்படுகிறது நாளாந்தம் பெரும் சவாலாக அமைந்து வருகின்ற நீர் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்ப்பதே உலக நீர் தினம் கொண்டாடப்படுவதன் பிரதான நோக்கம் ஆகும். நாடுகளின் புவியியல் அமைப்புக்கு ஏற்றவாறு அந்தந்த நாட்டின் நீர் வளப் பாதுகாப்பு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த…

Read More

2025 வரவு செலவு திட்டத்திற்கு சபாநாயகரின் சான்றிதழ்

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தனது சான்றிதழை பதிவு செய்துள்ளார். இதன்படி, 2025 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமாக இந்த ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது. வேலை நிறுத்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நேற்று (21) நடைபெற்றது. ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 114…

Read More

மாத்தறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

மாத்தறை – தேவேந்திரமுனை பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேன் ஒன்றில் பிரவேசித்த தரப்பினர் இவ்வாறு துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளதுடன் அவர்கள் தப்பிச் சென்று சிறிது தூரத்துக்குப் பின்னர் குறித்த வேனை தீ மூட்டியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மாத்தறை – தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 29 வயதுடைய இருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்துக்கு…

Read More

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது

கணேமுல்ல சஞ்ஜீவவின் படுகொலை சம்பவத்திற்கு உதவிய மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 23 வயதான ஜூலியன் மாதவன் என்ற கொழும்பு 15, ஹெலமுத்து செவண பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது மாதம்பிட்டிய பொலிஸ் பிரிவில் வைத்து, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் இந்த சந்தேக நபர் நேற்று (21) கைது செய்யப்பட்டார். நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்ற அறைகளை காட்டி, மனித படுகொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் இந்த சந்தேக நபர் கைது…

Read More

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்வதற்கான சாத்தியம்

மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேபோல், மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும்…

Read More

கியூபாவில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுகள்.. உதவும் சீனா, ரஷ்யா..

கியூபாவில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை சமாளிக்க, சீன அரசின் உதவியோடு சூரியசக்தி மின்சார பூங்காகளை அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளால், பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் இருக்கும் மின் நிலையங்கள் பழுதடைவதால் அடிக்கடி நாடு தழுவிய அளவில் மின்வெட்டுகள் ஏற்படுகின்றன. இந்தாண்டுக்குள், ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில், ஐம்பதுக்கும் மேற்பட்ட சூரியசக்தி மின்சார பூங்காகளை அங்கு அமைத்து தர சீனா முன்வந்துள்ளது.

Read More