நானுஓயா – பதுளை  புகையிரத சேவை இரண்டு மாதங்களில் ஆரம்பிக்கப்படும் – போக்குவரத்து பிரதி அமைச்சர்

இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த புகையிரத பாதைகள் கட்டம் கட்டமாக புனரமைக்கப்படுகின்றன. நானுஓயா –பதுளை  புகையிரத சேவை இன்னும் இரண்டு மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அனர்த்தத்தால் சேதமடைந்த வீதிகள் மற்றும் புகையிரத பாலங்களை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுகிறது.தற்போது வடக்கு மற்றும் கிழக்குக்கான புகையிரத சேவைகள் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  அனர்தங்களால் மலையகத்துக்கான புகையிரத சேவைகள் மிக…

Read More

கல்தோட்ட பகுதியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

பலாங்கொடை – கல்தோட்ட பொலிஸ் பிரிவின் பின்னகெட்டிய பகுதியில் உள்ள வளவை ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு பேர் மீது கும்புக் மரத்தின் கிளை முறிந்து விழுந்து காயமடைந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்  பலாங்கொடை – கல்தோட்ட பகுதியைச்  சேர்ந்த 47 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக  தெரிவித்துள்ளனர்.

Read More

ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று புதன்கிழமை (24) ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படை தலைமையக அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரிடமிருந்து 310 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 60,000 ரூபாய் பணம் மற்றும் கார் என்பன கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபரை கைது செய்து கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Read More

எஹெலியகொடையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

எஹெலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்தினபுரி – அவிசாவளை வீதியின் மஹிங்கொட பகுதியில் நேற்று புதன்கிழமை (24) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரத்தினபுரியிலிருந்து அவிசாவளை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிர்திசையில் வந்த தனியார் பஸ்ஸூடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.  இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் குழந்தையொன்றும் பலத்த காயமடைந்து, எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

Read More

தபாலில் அனுப்பப்பட்ட 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றல் ; ஒருவர் கைது

தபாலில் அனுப்பப்பட்ட 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் பொதி ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த போதைப் பொருட்கள் தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு தபாலில் அனுப்பப்பட்டவைகள் எனத் தெரியவந்துள்ளது. இந்நிலையில், சுங்க அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் சுங்கத் திணைக்களப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவிக்கையில்,  போதைப்பொருளின் மொத்த எடை 6 கிலோ கிராம் 201 கிராம் ஆகும். விசேட சோதனை நடவடிக்கையின்…

Read More

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பெத்லகேமில் நத்தார்: நம்பிக்கையும் மீட்சியும்

காஸா பகுதியில் போர்நிறுத்தம் நிலவும் நிலையில், இயேசு கிறிஸ்து பிறந்த பெத்லகேமில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நத்தார் கொண்டாட்டங்கள் மீண்டும் உற்சாகமாக தொடங்கியுள்ளன. ஜெருசலேமின் திருச்சபை பேராயர் கர்தினால் பியர்பாட்டிஸ்டா பிஸாபல்லா, பாரம்பரிய ஊர்வலமாக ஜெருசலேமிலிருந்து பெத்லகேம் வந்தார். காஸா கத்தோலிக்க தேவாலயத்திலிருந்து மக்களின் அன்பும் தைரியமும் செய்தியாக கொண்டு வரப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்த விழா மத நிகழ்வாக மட்டுமல்லாமல், சுற்றுலாவை சார்ந்த பெத்லகேமின் பொருளாதார மீட்சிக்கான அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. உள்ளூர் மக்கள் மீண்டும் வாழ்வாதார…

Read More

கார் ஒன்றிலிருந்து T-56 ரக துப்பாக்கி மீட்பு – பொலிஸார் விசாரணை!

ராகம, பஹலவத்த பகுதியில் பாழடைந்த நிலையில் காணப்பட்ட கார் ஒன்றை பொலிஸார் சோதனையிட்ட போது, T-56 ரக துப்பாக்கியும் ஒரு தொகை தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன. நேற்று செவ்வாய்க்கிழமை (23) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது குறித்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, வாகனத்திற்குள் இருந்து T-56 ரக துப்பாக்கி, தோட்டாக்கள் நிரப்பப்பட்ட இரண்டு மெகசின்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் வாகனத்தை அந்த இடத்திலேயே கைவிட்டுச் சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக ராகம பொலிஸார் மேலதிக…

Read More

முச்சக்கரவண்டி – லொறி மோதி விபத்து ; குழந்தை உட்பட மூவர் காயம்!

காலி – பெரெலிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (23) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டி ஒன்று லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த குழந்தை உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

“குடு ரொஷான்” துப்பாக்கியுடன் கைது!

பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமாக “குடு ரொஷான்” என்பவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது “குடு ரொஷான்” என்பவரிடமிருந்து மில்லிமீற்றர் 9 ரக துப்பாக்கி ஒன்றும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

பண்டிகை நாட்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை

வரவிருக்கும் பண்டிகை நாட்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்துவதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இதன்படி, மத சேவைகள் மற்றும் பண்டிகையுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகள் நடைபெறும் கத்தோலிக்க தேவாலயங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மதத் தலைவர்கள் மற்றும் நிகழ்வு ஏற்பாட்டாளர்களுடன் பொலிஸார் ஒருங்கிணைந்துள்ளனர். . தகவல்களைச் சேகரிக்கவும் தேவைப்பட்டால் விரைவான நடவடிக்கை எடுக்கவும் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் சிவில் பொலிஸார் நகர்ப்புற மையங்களில்…

Read More