பல மணி நேரம் ஆகாயத்தில் வட்டமிட்ட துருக்கி விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் :

கொழும்பில் இருந்து, துருக்கி, இஸ்தான்புல் நோக்கிப் பயணித்த துருக்கி ஏர்லைன்ஸ் (Turkish Airlines) விமானம் இலங்கை வான் பரப்பில் பல மணிநேரம் வட்டமிட்டபின் இன்று அதிகாலை 12.27 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது. விமானத்தில் இருந்த பயணிகள், ஊழியர்கள் எவருக்கும் எவ்வித சேதங்களும் இல்லையென விமானநிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.  விமானத்தின் தரையிறங்கும் கியரில் (Landing Gear) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அது இன்று அதிகாலை (டிசம்பர் 17, 2025) பண்டாரநாயக்க சர்வதேச…

Read More

போலியான செய்தி தொடர்பிலான அறிவிப்பு

‘கிராம சேவகர்கள் தொடர்பான முறைகேடுகளை துரிதமாக முறையிட நடைமுறை’ என்ற தலைப்பில், ஜனாதிபதி அலுவலகத்தினால் அறிவிக்கப்பட்டதாக போலி அவசர தொலைபேசி இலக்கமும் நேரடி இலக்கங்களும் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது. இந்தச் செய்தி போலியானது என்று ஜனாதிபதி அலுவலகம் அறிவிக்கிறது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Read More

விவசாயிகளுக்கான ஓய்வூதியம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், ஓய்வூதியம் வழங்குவதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது. விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. விவசாய ஓய்வூதியதாரர்கள் டிசம்பர் மாதம் முழுவதும் அரச வேலை நாட்களில் தமக்குரிய தபால் நிலையங்கள் அல்லது உப தபால் நிலையங்கள் ஊடாகத் தமது ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்…

Read More

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி : தாய்லாந்து பெண்கள் உட்பட ஏழு பேர் கைது!

கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் தாய்லாந்து பெண்கள் உட்பட ஏழு பேர் திங்கட்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். கொழும்பு தெற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, விபச்சார விடுதிக்கு உதவியதாக கூறப்படும் ஒரு சந்தேக நபரும் ஆறு தாய்லாந்து பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்…

Read More

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் பலர் கைது!

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுடன், இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று திங்கட்கிழமை (15) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 239 கிராம் ஹெரோயின், 678 கிராம் ஐஸ், 04 கிலோகிராம் 282 கிராம் கஞ்சா, 84 கஞ்சா செடிகள், 420…

Read More

IPO COUNTDOWN – 1 DAY

WTS ஆரம்ப பொதுப்பங்கு வழங்கல் நடவடிக்கை நாளை ஆரம்பம்   நாளை ஆரம்பமாகவுள்ள WealthTrust Securities Limited (WTS) நிறுவனத்தின் ஆரம்ப பொதுப்பங்கு வழங்கல் நடவடிக்கையின் மூலமாக பங்கொன்று ரூபா 7.00 என்ற விலைமதிப்பில் வழங்கப்படவுள்ள 71,548,244 சாதாரன, வாக்குரிமை கொண்ட பங்குகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது. இந்த வழங்கல் நடவடிக்கை மூலமாக ரூபா 500,837,708 தொகையைத் திரட்ட முடியும் என WTS எதிர்பார்ப்பதுடன், கொழும்பு பங்குச் சந்தையின் திரி சவி சபையில் நிறுவனத்தின்…

Read More

சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட அதி சொகுசு கப்பல் இலங்கையை வந்தடைந்தது!

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 135 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட அதி சொகுசு கப்பல் ஒன்று நேற்று திங்கட்கிழமை (15) நாட்டை வந்தடைந்துள்ளது. குறித்த அதி சொகுசு கப்பலானது நேற்றைய தினம் காலி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. மால்டா, அரசாங்க கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட  242 மீட்டர் நீளமுள்ள “லுமினாரா” என்ற அதி சொகுசு கப்பலே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 135 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட அதி சொகுசு கப்பல் ஒன்று நேற்று திங்கட்கிழமை…

Read More

பண்டிகை காலத்தில் வழிபாட்டுத் தலங்களில் – விசேட பொலிஸ் பாதுகாப்பு

பண்டிகை காலத்தில் வழிபாட்டுத் தலங்களில் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்,   பண்டிகை காலத்தில் நகர் பகுதிகளிலும் வழிபாட்டு தலங்களிலும் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும். மேல்மாகாணத்தில் மாத்திரம் சுமார் 2,500 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ்…

Read More

பொலிஸ் சார்ஜன்ட் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

அளுத்கம – மத்துகம வீதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மோட்டார் சைக்கிளில் மோதி  உயிரிழந்துள்ளதாக வெலிபென்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.  வெலிபென்ன பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

இலங்கைக்கும் கசகஸ்தான் குடியரசுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்த நடவடிக்கை

இலங்கைக்கான கசகஸ்தான் குடியரசின் தூதுவர் செர்கே விக்டோரோவ் (Sergey Viktorov) மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு  திங்கட்கிழமை (15)  அலரி மாளிகையில் இடம்பெற்றது. ‘திட்வா’ புயலைத் தொடர்ந்து இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் மீள்கட்டமைப்பு மற்றும் புனர்வாழ்வு முயற்சிகள் குறித்து இந்தச் சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.  இதன் போது அத்தியாவசிய உட்கட்டமைப்பு, வீட்டுவசதி மற்றும் விவசாய வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பது உள்ளிட்ட மீட்பு நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் முன்னுரிமைகளைப் பிரதமர் சுட்டிக் காட்டினார். 

Read More