மேஃபீல்ட் தோட்ட குளவிக்கொட்டுச் சம்பவம் தொடர்பில் தோட்ட நிர்வாகம் விளக்கம்

மேஃபீல்ட் தோட்டப் பிரிவில் நவம்பர் மாதம் புதன்கிழமை 26ஆம் திகதி இடம்பெற்ற குளவித் தாக்குதலில் ஒரு தொழிலாளி காயமடைந்த சம்பவம் தொடர்பில் தோட்ட நிர்வாகம் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளது. அந்த விளக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  குளவிக்கொட்டு சம்பவத்தின்போது நோயாளர் காவு வண்டி கிடைக்காததால் தோட்ட நிர்வாகம் உடனடியாக தோட்டத்திற்கு சொந்தமான லொறி மூலம் போக்குவரத்து வசதிக்கு ஏற்பாடு செய்தது. இருப்பினும்,  தற்காலிக வீதித் தடை காரணமாக  தொழிலாளி பின்னர் முச்சக்கரவண்டி மூலம் கொட்டகலை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்குச் சிகிச்சை…

Read More

பாலர் பாடசாலைகளையும் திறப்பது தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு 

அனைத்துப் பாலர் பாடசாலைகளும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களும் பாதுகாப்புடன் மீண்டும் திறக்கக்கூடிய நிலையில் இருப்பின், டிசம்பர் 16ஆம் திகதி முதல் மீளத் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவசரகால அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட, தற்போது பாதுகாப்புடன் செயற்படக்கூடிய நிலையில் உள்ள அனைத்துப் பாலர் பாடசாலைகளும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களும் டிசம்பர் 16ஆம் திகதி முதல் மீளத் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் ஊடகப் பிரிவின் ஊடாக…

Read More

யாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்ட பாலத்தை பார்வையிட்டார் இந்திய துணைத்தூதுவர்

இந்திய இராணுவத்தினரின் உதவியுடன் புனரமைக்கப்பட்டு வரும் பாலத்தினை யாழ் இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி பார்வையிட்டார். பரந்தன் முல்லைத்தீவு A-35வீதியின் பதினோராவது கிலோமீற்றரிலுள்ள பாலமானது கிளிநொச்சி  மாவட்டத்தின் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்திய இராணுவத்தினரின் பங்களிப்புடன் இலங்கை இராணுவம் ,வீதி அபிவிருத்தி அதிகார சபை இணைந்து புனரமைப்பு பணியில் இரண்டாவது நாளாக ஈடுபட்டுவருகின்ற நிலையில் யாழ் இந்தியத்துணைத்தூதுவர்  சாய் முரளி உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  (09)  பார்வையிட்டனர். ஒப்ரேஷன் சாகர் பந்து …

Read More

பறங்கி, பாலி ஆற்றின் தாழ்நில பிரதேசங்களுக்கு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை

பறங்கி, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை ஒன்றை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சற்றுமுன் விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் பேராறு குளத்தின் பாதுகாப்பு கருதி வான் கதவு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (9) திறக்கப்பட்டுள்ளது. இதனால் மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேசத்தினுடாக செல்லும் பறங்கி ஆறு, சிப்பி ஆறு மற்றும் பாலி ஆறு ஆகியவற்றின் நீர்மட்டம் குறிப்பிட்ட அளவு உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது….

Read More

உயர் கல்வி அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாடசாலை கட்டமைப்பிற்கு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அதனை மீள கட்டியெழுப்பல், 2025ம் ஆண்டின் இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்டத்தின் ஆரம்பம், க.பொ.த. உயர் தர பரீட்சையினை நடாத்துவது போன்ற அடிப்படை காரணங்கள் தொடர்பிலான பல விடயங்களை கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் கே.எம்.ஜி.எஸ். நாலக்க களுவெவ தெளிவுபடுத்தியுள்ளார். அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,  • பெயர் குறிப்பிடப்பட்ட பாடசாலைகளைத் தவிர, ஏனைய அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பாடசாலை ஆரம்பம்…

Read More

எதிர்க்கட்சி தலைவர் – ரஷ்ய தூதுவருக்கிடையில் விசேட சந்திப்பு

நாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச , இலங்கைக்கான ரஷ்ய தூதுவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.தாகரியன் , எதிர்க்கட்சித் தலைவருக்கிடையிலான இந்த சந்திப்பு செவ்வாய்கிழமை (09)  கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. தித்வா புயலால் ஏற்பட்ட பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரஷ்ய தூதுவருக்கு இதன் போது…

Read More

செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பேச்சு மற்றும் கேட்டல் திறனும் கற்றுக்கொடுத்த 10 ஆண்டுகள்: அமலியா ஆரம்பக் கற்றல் நிலையம் முன்னோடியாக செயல்படுகிறது

சிறப்பு ஆரம்பக் கற்றல் நிறுவனம் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளை பொதுவான கல்வி முறைக்கு வெற்றிகரமாக அழைத்துச் செல்கிறது முக்கிய சாதனைகள்: செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான அமலியா ஆரம்பக் கற்றல் நிலையம் (Amaliya Early Learning Centre – AELC), 2025 டிசம்பர் 2ஆம் திகதி தனது 10ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. பிறப்பு முதல் 5 வயதுக்குட்பட்ட செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான ஆரம்பகால தலையீடு, பேச்சு வளர்ச்சி மற்றும் சிறப்பு முன்பள்ளி கல்வி ஆகியவற்றில் ஒரு தசாப்த…

Read More

“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 868 பேர் கைது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று திங்கட்கிழமை (08) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 868 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 869 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, 01 கிலோ 229 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 433 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 193 கிராம் கொக்கேயின் போதைப்பொருளும்,  642 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 275705 கஞ்சா…

Read More

ஜனாதிபதி தலைமையில் நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது, நிவாரணம் வழங்குவது மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதன் காரணமாக குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்ட முடிந்ததாக தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மக்களின்  அன்றாட வாழ்க்கையை மீளமைக்கும் திட்டத்தை துரிதமாக முன்னெடுத்துச் செல்வதற்கும், இதுபோன்ற பேரழிவு மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும் தேவையான திட்டங்களைத் தயாரிப்பதில் அனைத்து தரப்பினரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நேற்று (08) காலை  நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து…

Read More

மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி மாயம் !

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி ஒன்று காணாமல் போயுள்ளது. இந்நிலையில், மிருகக்காட்சிசாலையில் வைக்கப்பட்டிருந்த மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி  காணாமல் போயுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளனர். இந்த மஞ்சள் அனகொண்டா உட்பட மூன்று பாம்பு இனங்களைச் சேர்ந்த ஆறு பாம்புகளை  பெண் ஒருவர் செப்டம்பர் 12 ஆம் திகதி தாய்லாந்திலிருந்து நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டு வந்தார்.  இதன்போது, குறித்த பாம்புகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்கத் திணைக்கள அதிகரிகளால்…

Read More