மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக இரண்டு, மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. சபாநாயகர் “ஜகத் விக்ரமரத்ன” தலைமையிலான அரசியலமைப்பு பேரவை அண்மையில் கூடி, தலைமை நீதியரசர் “முர்து பெர்னாண்டோவின்” பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி “அநுர குமார திசாநாயக்க” சமர்ப்பித்த பரிந்துரைகளை அங்கீகரித்துள்ளது. இதன்படி, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி “ஆதித்ய பட்டபெந்திகே” மற்றும் நீதிமன்ற சிவில் மேல்முறையீடுகள் நீதிமன்ற நீதிபதி “பிராங்க் குணரத்ன” ஆகியோரை மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது….

தெற்காசிய கூடைப்பந்தாட்ட சங்க கழக சம்பியன்ஷிப் போட்டியில் கொழும்பு கூடைப்பந்தாட்டக் கழகம் பங்கேற்பு.
இந்திய கூடைப்பதாட்ட சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட சங்கம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள முதலாவது தெற்காசிய கூடைப்பந்தாட்ட சங்க கழக சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சார்பாக கொழும்பு கூடைப்பந்தாட்ட கழக அணி பங்குபற்றுகிறது. இலங்கை, பூட்டான், இந்தியா, மாலைதீவுகள், நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஐந்து கழகங்கள் பங்குபற்றும் தெற்காசிய கூடைப்பந்தாட்ட சங்க கழக சம்பியன்ஷிப் இன்று முதல் எதிர்வரும் 7ஆம் திகதிவரை தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது….