colombo municipal council

கொழும்பு மாநகர சபை வரவு–செலவு: வருமான இலக்குகள் நடைமுறைக்கு ஏற்றதா? – கூட்டு எதிர்க்கட்சி கேள்வி

கொழும்பு மாநகர சபையின் அடுத்த ஆண்டிற்கான வரவு–செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில எதிர்பார்க்கப்பட்ட வருமானங்கள் ஆவணத்தில் அழகாக தோன்றினாலும், அவை நடைமுறையில் சாத்தியமா என்பதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என மாநகர சபையின் கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளர் எச்.எம். மன்சில் தெரிவித்தார். இந்த வருமான இலக்குகளை அடைவதற்காக வரி செலுத்தும் மக்கள்மீது கூடுதல் சுமை விதிக்கப்படுமானால், அதற்கு தாம் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டிலுள்ள கொழும்பு மாநகர…

Read More

டெக்சாஸில் மெக்சிகன் கடற்படை விமான விபத்து: 5 பேர் உயிரிழப்பு

டெக்சாஸ் மாநிலத்தின் கால்வெஸ்டன் (Galveston) அருகே திங்கட்கிழமை (23) மெக்சிகன் கடற்படைக்குச் சொந்தமான சிறிய விமானம் விபத்துக்குள்ளானது. இளம் மருத்துவ நோயாளி ஒருவரை உட்பட மொத்தம் எட்டு பேரை ஏற்றிச் சென்ற இந்த விமான விபத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துக்குப் பின்னர், டெக்சாஸ் கடற்கரையை ஒட்டிய நீர்ப்பரப்பில் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மெக்சிகோ கடற்படை வெளியிட்ட அறிக்கையின் படி, விமானத்தில் நான்கு கடற்படை அதிகாரிகளும், ஒரு குழந்தை உட்பட…

Read More
imf

இலங்கையின் கடன் நெருக்கடிக்கு புதிய மறுசீரமைப்பு தேவை – 121 உலக பொருளியலாளர்கள் வலியுறுத்தல்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதிவசதி திட்டத்தின் கீழ் தற்போது நடைமுறையில் உள்ள இலங்கையின் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம், நாட்டின் கடன் நெருக்கடிக்கு நீடித்த தீர்வை வழங்கத் தவறியுள்ளதாக 121 உலக பொருளியலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நோபல் பரிசு பெற்ற பொருளியலாளர் ஜோசப் ஸ்டிக்ளிட்ஸ் உட்பட இலங்கை, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், இந்தியா, ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் கையெழுத்திட்ட கூட்டறிக்கையில், இலங்கையின் வெளியகக் கடன் மீள்செலுத்துதலை…

Read More

கொழும்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

நுகேகொடை மற்றும் கொஹுவல சந்திப்புக்கு இடையில் நேற்று இரவு(22.12.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, கொழும்பு நகரம் முழுவதும் பொலிஸார் கூடுதல் உத்தியோகத்தர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். இரவு 8:30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், 25 வயதுடைய இளைஞர் ஒருவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த இளைஞர் உடனடியாக கொழும்பு களுபொவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்துக்குப் பொறுப்பான சந்தேக நபர் முச்சக்கர வண்டியில்…

Read More

36 மில்லியன் ரூபா சொத்து வழக்கு: பெலியத்த முன்னாள் தவிசாளர் சிறில் முனசிங்க பிணையில் விடுதலை

பெலியத்த பிரதேச சபையின் தவிசாளராக பதவி வகித்த காலத்தில் தனது சட்டபூர்வ வருமானத்தை மீறி சுமார் 36 மில்லியன் ரூபா பெறுமதியுள்ள சொத்துகளை முறையற்ற வகையில் ஈட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் தவிசாளர் சிறில் முனசிங்க, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் திங்கட்கிழமை (22) பிணையில் விடுவிக்கப்பட்டார். சந்தேகநபரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டதுடன்,…

Read More

தேசபந்துவுக்கு எதிரான தனிப்பட்ட முறைப்பாடு : உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான தனிப்பட்ட முறைப்பாட்டை தள்ளுபடி செய்தமை சட்டத்திற்கு எதிரானது என கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2022 மே 9ஆம் திகதி காலி முகத்திடலில் நடந்த “Gotta go home” போராட்டத்தின்போது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, மேல் மாகாணத்தின் அப்போதைய சிரேஸ்ட பொலிஸ்  மாஅதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக போராட்டக்காரர் ஒருவர் தனிப்பட்ட வகையில் முறைப்பாடு தாக்கல் செய்தார்.  அந்த தனிப்பட்ட முறைப்பாட்டை தள்ளுபடி செய்ய அப்போதைய கொழும்பு தலைமை நீதிபதி எடுத்த தீர்மானம், சட்டத்திற்கு எதிரானது…

Read More

பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டரங்கு வேண்டாம் ; கோப்பாயில் அரங்கினை அமைக்க எனது காணியை நன்கொடையாக தருகிறேன் – கௌரி பொன்னையா

யாழ்ப்பாணத்துக்கான உள்ளக விளையாட்டரங்கை அமைப்பதற்கான காணியை தான் நன்கொடையாக கொடுத்து உதவ தயாராக உள்ளதாக சமூக நலத்துறை முன்னாள் அமைச்சர் கந்தையா வைத்தியநாதனின் பேர்த்தியாரான கௌரி பொன்னையா தெரிவித்தார். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் புதன்கிழமை (17) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.  மேலும் அவர் கூறுகையில்,  யாழ். குடாநாட்டில் உள்ளக விளையாட்டு அரங்கத்தை  அமைப்பதற்கு முயற்சிக்கின்றார்கள் என கேள்வியுற்றேன். அதற்காக புராதன மரங்களை அழிக்கவுள்ளதாகவும் கேள்வியுற்றேன்.  இயற்கையை அழிக்காது, புராதன மரங்களை அழிக்காது,…

Read More

மருதங்கேணியில் 75 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது!

மருதங்கேணி, மணல்காடு கடற்கரைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் கேரள கஞ்சா பொதியுடன் சந்தேக நபர் ஒருவர் புதன்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் இருந்த படகொன்றில் 75 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பில் கலந்துரையாடல்!

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பில் கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் புதன்கிழமை (17) ஆராயப்பட்டது. இக்கூட்டம் நேற்று காலை, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது. டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நிவாரண நடவடிக்கைகள் மற்றும் எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்கவேண்டிய மீள்கட்டியெழுப்புப் பணிகள் குறித்து கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மேலும், மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதிகளின் பயன்பாடு, மத்திய மற்றும் மாகாண திணைக்களங்களின் திட்ட முன்னேற்றங்கள், புதிய திட்டங்களுக்கு…

Read More

நாயாறு பகுதியில் உடைந்த இரண்டு பாலங்களில் ஒரு பாலம் மாத்திரமே நிர்மாணிக்கப்பட்டுள்ளது

முல்லைத்தீவு மாவட்டத்தின்  நாயாறு பாலத்தில் நடைபெறும் பணிகள் தொடர்பாக பொதுமக்களிடையே தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவி வருவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் தெரிவித்துள்ளர்.  இது குறித்து தெளிவுபடுத்துவதற்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நாயாறு பாலத்தில் உள்ள இரண்டு பாலங்களில் ஒரு பாலத்தின் பணிகள் மட்டுமே தற்போது நிறைவடைந்துள்ளன. மற்றொரு சேதமடைந்த பாலம் தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) மூலம் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன்,  அந்த பாலத்தின் புதிய…

Read More