கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் டிட்வா சூறாவளியால் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டது, அதனனால் தனது ஊழியர்கள் தங்கள் வீடுகளை புதுப்பித்துக் கொள்வதற்கு HNB FINANCE PLC நிதி நன்கொடைகளை வழங்கியுள்ளது. டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட HNB FINANCE ஊழியர்களுக்கு இரண்டு கட்டங்களாக நிவாரணம் வழங்கப்பட்டது, மற்றும் அவசர உதவி உணவு உட்பட 8 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது. பதுளை, கண்டி, நுவரெலியா, நாவலப்பிட்டி, கடுவலை மற்றும் வலபனை ஆகிய பகுதிகளில் முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்த…
வீதிகளில் குவியும் அனர்த்தத்தால் பழுதடைந்த உணவுப் பொருட்கள்
கண்டி மாவட்ட அனர்த்தம் காரணமாக பலகோடி ரூபா பெறுமதியான பழுதடைந்த உணவுப் பொருட்கள் கம்பளை, கெலிஓயா, கஹட்டபிட்டிய முதலான பகுதிகளில் உள்ள பிராதன வீதிகளில் குவிந்துள்ளன. அவற்றை அகற்றுவது கூட பாரிய சிரமமாக உள்ளதாகத் தெரியவருகிறது. பல்லாயிரக்கணக்கான தொன்கள் எடை கொண்ட இப்பொருட்களை எங்கு எடுத்துச் செல்வது? எங்கே? கொட்டுவது என்பன கூட பாரிய சவாலாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரிசி, மாவு, பருப்பு, வெங்காயம், மருந்துப் பொருட்கள், கட்டிடப் பொருட்கள், ஆடை அணிகள், வீட்டுத்தளபாடங்கள் என விதம்…

