வெலிக்கடை சிறையில் உயிரிழந்த இளைஞன் – முழுமையாகப் பிரேத பரிசோதனைக்கு உத்தரவு

வெலிக்கடை பொலிஸாரின் காவலில் இருந்தபோது இறந்த இளைஞரின் சடலத்தை தோண்டி எடுக்குமாறு கொழும்பு தலைமை நீதித்துறை மருத்துவ அதிகாரிக்கு (JMO) கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மூன்று சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு மூலம் இளைஞரின் சடலத்தை முழுமையாகப் பிரேத பரிசோதனை செய்து, நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு தலைமை நீதித்துறை மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பினரால் செய்யப்பட்ட மேன்முறையீட்டை பரிசீலித்த பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா இன்று (ஏப்ரல் 09)…

Read More

அட்லீ இயக்கவிருக்கும் 6வது படம் 600 கோடி ரூபா பட்ஜெட்டா???

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்தின் உச்சம் என்ற அது இயக்குனர் சங்கர்தான். அவரோட திரை வீட்டில் இருந்து வந்து இன்று பான் இந்தியா முழுவதும் கலக்கும் இயக்குனர் நாயகன் அட்லீயின் 6வைத்து படத்துக்கான அறிவிப்பு நேற்று (ஏப்ரல் 8) வெளியாகி சக்கை போடு போடுது… புஷ்பா மற்றும் புஷ்பா 2 திரைப்படங்களின் வெற்றிக்கு பின் அல்லு அர்ஜுன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லீயுடன் இணையும் படத்தின் அறிவிப்பு தான் இது.அதுவே வழக்கமான பணியில் இருந்து வேறுபாட்டிற்கு. நல்ல இருக்கு…

Read More

5 கோடி பெறுமதி கேரள கஞ்சா கடத்திய இருவர் கைது

மீன்களை ஏற்றிச் செல்லும் லொறியில் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் துன்கல்பிட்டிய பொலிஸாரால் இன்று (ஏப்ரல் 09) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். துன்கல்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நீர்கொழும்பு, லெல்லம பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த லொறி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சோதனையின் போது லொறியிலிருந்து 200 கிலோ கிராம் கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி 5 கோடியே…

Read More

அமெரிக்காவின் வரிக்கொள்கை நாட்டில் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும் – சஜித்

அமெரிக்க அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட வரிக்கொள்கை நாட்டில் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.  ரம்புக்கனை பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  அமெரிக்க ஜனாதிபதி இலங்கை ஏற்றுமதிகளுக்கு 44 சதவீத தீர்வை வரியினை விதித்துள்ளார்.  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் உலக நாடுகளின் ஏற்றுமதிகளுக்கு இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்குமென முன்னதாகவே நாம் அரசாங்கத்திற்கு அறியப்படுத்தினோம்.  அதற்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை.  நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை…

Read More

CIDக்கு அழைத்து வரப்பட்டுள்ள பிள்ளையான்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.  மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  நபர் ஒருவர் கடத்தப்பட்டு காணாமல் போனமை குறித்த விசாரணையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.  இந்தநிலையில் அவர் இன்று அதிகாலை கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

Read More

உலக வர்த்தகத்தில் ஏற்பட்ட நெருக்கடி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு எதிராக 104% சுங்க வரியை உயர்த்தும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இந்த உத்தரவு, இன்று நள்ளிரவு 12:01 மணி முதல் உடனடியாக அமலுக்கு வரும் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர். டிரம்ப் நிர்வாகம், சீனாவுடனான வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்யும் நோக்கில் இந்த “பரஸ்பர சுங்க வரி” கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனா, அமெரிக்காவின் முந்தைய சுங்க வரி உயர்வுக்கு பதிலடியாக 34% கூடுதல் வரியை அமெரிக்க…

Read More

சீனப்பொருட்களுக்கு இன்று முதல் 104% வரி

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 104% வரியை விதித்துள்ளது. இது இன்று (09) முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read More

4 இலட்சம் பயனர்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு

அமெரிக்காவின் வரி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தையினூடாக தீர்வை எட்ட முடியும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொட்டாவ பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பண்டிகை காலத்தில் நாட்டு மக்களுக்கு சதொச ஊடாக நிவாரண விலையில் பொருட்களை வழங்குவதற்கு நாம் எதிர்பார்த்திருந்தோம். எனினும் எதிர்வரும் மே மாதம் தேர்தல் நடைபெறவுள்ளமையினால் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதேநேரம், எதிர்வரும் ஜூன் மாதம் முதல் 4 இலட்சம்…

Read More

மண்மேட்டில் சிக்கி உயிரிழந்த தொழிலாளி

பெல்மடுல்ல, புலத்வெல்கொட பகுதியில் நேற்று (08) மாலை மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் புட்டுஹபுவ பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கட்டிடம் ஒன்றின் பின்புறத்தில் சுவர் ஒன்றை அமைப்பதற்காக வந்திருந்த கட்டுமானத் தொழிலாளி ஒருவர் மீதே இவ்வாறு மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர் அந்தக் கட்டிடத்தின் உரிமையாளர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காயமடைந்த நபர் தற்போது கஹவத்தை வைத்தியசாலையில்…

Read More

நாட்டில் கடும் மழைக்கு வாய்ப்பு

தென் மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மாகாணத்திலும் புத்தளம் மாவட்டத்திலும் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, தென், கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும்…

Read More