அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!

திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் புதிதாக புத்தர்சிலை வைக்கும் வைபவம் இன்று திங்கட்கிழமை  (17) பிற்பகல் 1.35 மணிக்கு பௌத்த சம்பிரதாய அடிப்படையில் இடம்பெற்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இரவு அவசர அவசரமாக தற்காலிக கட்டடம் அமைத்து புத்தர்சிலை கொண்டு வந்து வைக்கமுற்பட்ட போது ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக மீண்டும் புத்தர்சிலை கொண்டு செல்லப்பட்டு இன்றையதினம் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இது தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் #ஆனந்த_விஜயபால அவர்கள் புத்தர்சிலைக்கு பாதுகாப்பு…

Read More

பெரிய வெங்காய விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நிரந்தர வேலைத்திட்டமொன்றை தயாரிப்பது குறித்து ஆராய்வு

உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குவது குறித்து விவசாயிகளுடனான கலந்துரையாடல் இன்று (17) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. நெல் பயிற்செய்கை தொடர்பில் நீண்ட காலமாக கவனம் செலுத்தி நெல் விவசாயியைப் பாதுகாக்க ஒரு குறிப்பிட்ட திட்டம் வகுக்கப்பட்டுள்ள…

Read More

ஷேக் ஹசீனா மீதான வழக்கில் இன்று சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பினை வழங்கியது

ஷேக் ஹசீனா மீதான வழக்கில் இன்று டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பினை வழங்கியது. ஷேக் ஹசீனா குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு முற்றிலும் பாரபட்சமானவை, அரசியல் ரீதியான தீர்ப்பு என ஷேக் ஹசீனா பரபரப்பு குற்றம்சாட்டினார். இது குறித்து அவர் கூறியதாவது:- “எனக்கு எதிரான இந்த தீர்ப்பு, ஜனநாயகமற்ற, தேர்ந்தெடுக்கப்படாத அரசால் நிறுவப்பட்ட ஒரு மோசடியான தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் பாரபட்சமானவை,…

Read More

யாழ். பல்கலைக்கழக மாணவன் போதைப்பொருளுடன் கைது – நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு

யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட மாணவன் போதைப்பொருளுடன் கைதான நிலையில் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட போதை தடுப்பு பொலிஸ் பிரிவினருக்குக்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (16)  கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மருத்துவ பீட இரண்டாம் வருட மாணவனை கைது செய்து சோதனையிட்ட போது , மாணவனின் உடமையில் இருந்து, 33 கிராம் 230 மில்லிக்கிராம் ஹசீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த மாணவன் ஊவா மாகாணத்தை சேர்ந்த பெரும்பான்மையின…

Read More

ஐந்து பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய்!

நாட்டில் ஐந்து பேரில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது 23% முதல் 30% வரை இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தேசிய கண் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் கபில பந்துதிலக்க கூறுகையில், நீரிழிவு நோயாளிகளில் மூன்றில் ஒருவர் கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். அவர்களில் பெரும்பாலோர் 40 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். நீரிழிவுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அவர்களில் 11% பேர் பார்வையற்றவர்களாக மாறக்கூடும் என்று…

Read More

அமெரிக்காவின் பல உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள் நீக்கம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மாட்டிறைச்சி மற்றும் COFFEE உள்ளிட்ட பல அமெரிக்க உணவுப் பொருட்களுக்கான வரிகளை நீக்கியுள்ளார். நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பால் பொருட்களின் விலைகள் உயர்ந்ததால் ஏற்படும் பிரச்சினைகள் காரணமாக ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வரிகள் குறைக்கப்பட்ட உணவுகளில் வாழைப்பழங்கள் மற்றும் தக்காளி ஆகியவை உள்ளடங்குகின்றன . வரிகள் நீக்கம் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன

Read More

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையே ஒரு சிறப்பு ஒப்பந்தம்

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக நேற்று (14) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் மற்றும் மொன்டானா தேசிய காவல்படையின் செயல் ஜெனரல் பிரிகேடியர் ட்ரென்டன் கிப்சன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இலங்கை அரசாங்கத்தின் சார்பாக பாதுகாப்புச் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தா இதில் கையெழுத்திட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், அமெரிக்க பாதுகாப்புத் துறையின் மாநில…

Read More
Delhi bomb blast

ஸ்ரீநகரில் வெடிப்பு! 7 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் காவல் நிலையத்தில் (14) இரவு வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டது. காவல் நிலையத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை ஆய்வு செய்யும் போது இந்த வெடிப்பு ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய ஊடகங்கள் மேலும் கூறுகையில், இந்த வழியில் ஏராளமான வெடிபொருட்கள் வெடித்ததாகவும், இதனால் 07 பேர் இறந்ததாகவும், 27 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளன.

Read More
fine

கழிவு நீரை வெளியேற்றிய உணவக உரிமையாளர் உள்ளிட்ட மூவருக்கு அபராதம்

15 Nov, 2025 | 03:14 PM யாழில் உணவக கழிவு நீரினை வீதிக்கு வெளியேற்றிய உணவக உரிமையாளருக்கும், காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்திய உரிமையாளர்களிற்கும் ஒரு இலட்ச ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.  பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட  வியாபார நிலையங்களில் சுகாதார பரிசோதகரினால், மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இரு வர்த்தக நிலையங்களில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தியிருந்தமை, உணவகம் ஒன்றின் கழிவு நீரினை வீதிக்கு அப்புறப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் மூவருக்கும் எதிராக பருத்தித்துறை நீதவான்…

Read More

சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகள் தயாரிக்க ஆலோசனை

பொலிஎதிலின் (சிலிசிலி) பைகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தக் கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளைத் தயாரிக்க சுற்றாடல் அமைச்சு தலைமைத்துவம் வகிக்க வேண்டும் என சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியது. பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது சிலிசிலி பைகளுக்கு கட்டணம் அறவிடும் தீர்மானம் தொடர்பில் குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலம் பொலிஎதிலின் பயன்பாடு குறைக்கப்படுமா என்பதை பரிசீலிக்க வேண்டும் என்றும் குழுவின்…

Read More