இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெறுவது மிக அவசியம் – ட்ரம்ப்

வாஷிங்டனில் குடியரசுக் கட்சி எம்பிக்கள் மத்தியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெறுவது மிக அவசியம் என்று வலியுறுத்தினார். “நாம் வெற்றி பெறாவிட்டால், ஜனநாயகக் கட்சியினர் ஏதாவது ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து என்னைப் பதவி நீக்கம் (Impeachment) செய்ய முயல்வார்கள்” என்று அவர் எச்சரித்தார். வரலாற்று ரீதியாக, ஆட்சியில் இருக்கும் கட்சி இடைத்தேர்தலில் பின்னடைவைச் சந்திக்கும் வழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும், விலைவாசி உயர்வு…

Read More
thiruboshaaaaa

திரிபோஷா திட்டத்தை வலுப்படுத்த அமைச்சரவை அனுமதி

எமது நாட்டின் தேசிய போசாக்குப் பற்றிய பங்களிப்புக்களின் ஒரு பகுதியாக திரிபோசா வேலைத்திட்டத்தைக் கட்டியெழுப்புவதற்கு உலக உணவுத் திட்டம் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது.  அதற்கமைய, திரிபோசா உற்பத்திக்குத் தேவையான சோளத்தின் தரப்பண்பை அதிகரிப்பதற்கும், மற்றும் திரிபோசா விநியோகத்தை பலப்படுத்தும் நோக்கிலும் ‘இலங்கையில் மேம்படுத்தப்பட்ட திரிபோசா வேலைத்திட்டத்திற்கான தாங்குதிறன் கொண்ட தரப்பண்புடன் கூடிய சோளத்தை அடிப்படையாகக் கொண்ட உணவு முறைமையைக் கட்டியெழுப்பல்: பயிரிடுவோம் கட்டியெழுப்புவோம்’ எனும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் கருத்திட்ட முன்மொழிவொன்று தயாரிக்கப்பட்டுள்ளது….

Read More

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி

இலங்கை பல்கலைக்கழகங்களை உலகளாவிய தரப்படுத்தல் குறிகாட்டிகளுக்கமைய தரமுயர்த்துவதற்கும், சர்வதேசமயப்படுத்துவதற்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் உயர்கல்வி ஒத்துழைப்புக்களை ஏற்படுத்திக் கொள்வது அவசியமானதென அடையாளங்காணப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை பல்கலைக்கழகங்களுக்கும்; வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் இடையில் ஐந்தாண்டு காலப்பகுதிக்கு கீழ்வரும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது 

Read More

குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகளை விரிவாக்கம் செய்வதற்காக அரச – தனியார் பங்குடமை மாதிரியை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

அரச வைத்தியசாலைகளில் தற்போது குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகள் காணப்பட்டாலும், அதிகரித்துவரும் சிகிச்சைக்கான கேள்விகளைப் பூர்த்தி செய்வதற்கு தற்போதுள்ள வசதிகள் போதுமானதாக இல்லையென அவதானிக்கப்பட்டுள்ளது.  அதனால், சிறுநீரக நோயாளிகள் எதிர்கொள்கின்ற சிரமங்களைக் கருத்தில் கொண்டு, குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகளை விரிவாக்கம் செய்வதற்கான தேவை அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்காக தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற முறை மூலம் பெற்றுக்கொண்டுள்ள அனுபவங்களின் அடிப்படையில், அடையாளங்காணப்பட்டுள்ள அரச வைத்தியசாலைகளில் குருதிக் கூழ்மப்பிரிப்புக்கு அரச – தனியார் பங்குடமை முறையின் கீழ்…

Read More

 28 வயது ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இளைஞர் சுவிட்சர்லாந்தில் உயிரிழந்தார்

சுவிட்சர்லாந்தின் லாடர்ப்ரூனன் (Lauterbrunnen) பகுதியில் உள்ள கிம்மல்வால்டில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பேஸ் ஜம்பிங் (Base jumping) விளையாட்டில் ஈடுபட்டிருந்த 28 வயது ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். தனது நண்பருடன் இணைந்து ‘நேபாளப் பாலத்தில்’ இருந்து குதித்தபோது, எதிர்பாராதவிதமாக மலையின் தரைப்பகுதியில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மீட்புப் படையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் அவரது உடலை மீட்டனர். இவ்விபத்து குறித்து சுவிஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More
santhirasekar

வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம் – அமைச்சர் சந்திரசேகர்

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடு தொடர்பில் நாம் முறைமையொன்றை பின்பற்றி வருகின்றோம். அவர்களது படகுகள் தொடர்பிலும் நாம் முறைமையொன்றை பின்பற்றுகின்றோம். எவ்வாறெனினும் வெளிநாடுகளில் பின்பற்றப்படும் சட்டங்களில் நாம் கை வைக்க முடியாது. வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது மீனவர்களை விடுவிப்பதற்கு நாம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம் என கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (6) நடைபெற்ற கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே…

Read More

விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் மூவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை  (06) 500 மில்லியன் ரூபா மதிப்புள்ள “குஷ்” என்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இன்றைய தினம் காலை விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள ‘கிரீன் செனல்’ வழியாக தப்பிச் செல்ல முயன்ற மூன்று வெளிநாட்டு பயணிகள் குஷ்  போதைப்பொருளுடன் சுங்க போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் எனவும்  27 வயதுடைய அந்த நபர் மும்பையில் உள்ள…

Read More

முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கும் மேலதிகமாக 25,000 வீடுகளை நிர்மாணிக்க வேண்டியுள்ளது – அரசாங்கம்

டித்வா புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் 6056 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. ஆனால் இவற்றுக்கு மேலதிகமாக மேலும் 25 000 வீடுகளை நிர்மாணிக்கவேண்டிய தேவை இனங்காணப்பட்டுள்ளது. எனினும் விரைவில் அரசாங்கம் அதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அத்தோடு இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அறிவிக்கப்பட்ட 25,000 ரூபா மற்றும் 50 000 ரூபா கொடுப்பனவுகள் முழுமையாக வழங்கப்பட்ட பின்னர் ஏனைய கொடுப்பனவுகளை வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும்…

Read More

டித்வா தொடர்பில் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க தவறியமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை

டித்வா புயல் அனர்த்தம் தொடர்பில் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க தவறியமை தொடர்பில்  ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க அமைக்கவுள்ள விசேட செயற்குழுவின் தலைமைப் பொறுப்பு  எதிர்க்கட்சிக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க கோரிக்கை  விடுத்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (6) விசேட கூற்றொன்றை முன்வைத்து  குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்ட  டித்வா புயல் அனர்த்தம் தொடர்பில் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதா அல்லது நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதா என தேடிப் பார்த்து அறிக்கை …

Read More
DEATH

மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு!

பொலன்னறுவை, வெலிகந்த, ரணவிரு கிராமத்தில் உள்ள வீடொன்றுக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (4) மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக வெலிகந்த வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க காட்டு யானை ஒன்றே உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள்…

Read More