நோயாளிகள் சிகிச்சைகளை பெறும் நடைமுறைகளை கண்காணிக்க சுகாதார துணை அமைச்சர் ஆய்வு விஐயம்!

சுகாதார துணை அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி சமீபத்தில் களுபோவிலவில் உள்ள கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைக்கு விசேட ஆய்வு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.  சுகாதார அமைச்சினால் ஆரமபிக்கப்பட்ட  விசேட திட்டத்தின் கீழ், வைத்தியசாலைகளில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதன் மூலம், அரசாங்க வைத்தியசாலைகளை உரிய முறையில் பராமரிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு, இந்த விசேட ஆய்வு விஜயத்தை சுகாதார துணை அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி மேற்கொண்டார்.  இங்கு, வைத்தியசாலையின் வார்டுகள்,…

Read More

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைகின்ற இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த இந்திய அரசு முயற்சிக்கவில்லை – என்.எம்.ஆலம்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைகின்ற இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த இலங்கை அரசு, குறிப்பாக இலங்கை கடற்படை  தொடர்ந்து துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றபோதும், இந்திய அரசு தமது மீனவர்களை எல்லை தாண்டாதிருக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார். மன்னாரில் உள்ள இவ்விணைய சேவை அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (5) பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்திய மீனவர் விடயங்கள் தொடர்பாகவும்  அவர்களின்…

Read More

“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 941 பேர் கைது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் ஞாயிற்றுக்கிழமை (4) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 941 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 952 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, 397 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 566 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 31  கிலோ  776 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 156311 கஞ்சா செடிகளும், 001 கிராம் குஸ் போதைப்பொருளும்,…

Read More

அரச வைத்தியசாலையில் முதல் முறையாக “உணவு பிரிவு” ஆரம்பிக்க நடவடிக்கை!

அரசாங்க வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உரிய சத்தான மற்றும் சுவையான உணவை வழங்குவதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம், இலங்கை ஊட்டச்சத்து நிபுணர்கள் நிறுவனம் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் சங்கத்துடன் இணைந்து ஒரு விசேட திட்டத்தை ஆரம்பித்து உள்ளது. மேலும் அதன் முன்னோடி திட்டம் நாளை செவ்வாய்க்கிழமை (06) மஹரகம வைத்தியசாலையில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் ஆரம்பிக்கபட உள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சம்,…

Read More

தீவிரமடையும் தாழமுக்கம், கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு பகுதியில் தற்போது காணப்படும் தாழ்வு நிலை வலுப்பெறுகின்றது. இன்றைய நிலையில் இது இலங்கையின் கிழக்கு கரையூடாக வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வடக்கு மாகாணத்தை மிக அண்மித்து தமிழ்நாட்டை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார். மேலும் அவர், இந்த தாழமுக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய, தென் மாகாணங்கள் கன மழையைப்…

Read More

2026 ஆம் ஆண்டின் முதல் 05 நாட்களில் 793 பேருக்கு டெங்கு!

2026 ஆம் ஆண்டின் முதல் 05 நாட்களில் மாத்திரம் சுமார் 793 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரம், கடந்த ஆண்டு டெங்கு நோயினால் 26 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக நிபுணர் வைத்தியர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கடந்த ஆண்டு சுமார் 51,438 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்பட்ட டித்வா சூறாவளிக்குப் பின்னர், இதுவரை…

Read More

பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கு இடையில் தகராறு ; நால்வர் வைத்தியசாலையில் அனுமதி!

கொழும்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி கற்கும் இரு தரப்பு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் நால்வர் காயமடைந்துள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  காயமடைந்தவர்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  கொழும்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் நான்காம் ஆண்டு மாணவர்கள் பரீட்சைக்கு தயாராகி வரும் நிலையில் தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தொடர்ந்து சில நாட்களாக பல்கலைக்கழக விடுதியில் பட்டாசு வெடித்து விளையாடியுள்ளனர்.  இதனால் கொழும்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் நான்காம் ஆண்டு…

Read More

2025ஆம் ஆண்டில் 409க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழப்பு!

2025ஆம் ஆண்டில்  இலங்கையில் 409க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆனந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.   பத்தரமுல்லையில் ஞாயிற்றுக்கிழமை (4) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆனந்த திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். கடந்த 2024ஆம் ஆண்டில்  இலங்கையில் 388க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளன. 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டில் யானைகளின் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டில் துப்பாக்கிச் சூட்டுக்க இலக்காகி  71 யானைகளும், மின்சாரம் தாக்கி 56 யானைகளும்,…

Read More

இலஞ்சக் குற்றச்சாட்டில் இரு உயர் பொலிஸ் அதிகாரிகள் கைது

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகளின் பேரில், நுவரெலியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.பி ஒருவரும், கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கான பரிந்துரையை வழங்குவதற்காக கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ரூ.72,000 பணத்தை இலஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் நுவரெலியா மற்றும் கல்முனை நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Read More

நாளை நள்ளிரவு முதல் உயர்தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்குத் தடை

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சையில் இன்னும் நடத்தப்படாத பாடங்களுக்கு, மேலதிக வகுப்புகள் நடத்துவதற்கு  செவ்வாய்க்கிழமை (06) நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் கீழ், மேலதிக வகுப்புகள், பாடவாரியான கருத்தரங்குகள், மாதிரி வினாத்தாள் அச்சிடல் மற்றும் விநியோகம், பரீட்சை வினாக்களை ஒத்த உள்ளடக்கங்களை விளம்பரப்படுத்துதல் போன்ற அனைத்தும் தடை செய்யப்படும். இந்த உத்தரவை மீறுவோர் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படும் என்றும், நடத்தப்படாத…

Read More