பொசொன் தினத்தில் பொது மக்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி

ஒழுக்கமான சமூகத்தை கட்டியெழுப்புவதன் மூலமே, நாம் எதிர்பார்க்கும் சமூக, பொருளாதார, மற்றும் அரசியல் மாற்றங்களை நடைமுறையில் சாத்தியமாக்க முடியும். இந்த கூட்டு முயற்சிக்காக அனைவரும் ஒன்றிணையுமாறு, பொசொன் தினத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். பொசொன் வாழ்த்துச் செய்தியை வௌியிட்டு ஜனாதிபதி இதனை தெரிவித்தார். ஜனாதிபதியின் பொசொன் தின வாழ்த்துச் செய்தி பின்வருமாறு பொசொன் தினம் இலங்கையர்களான எமக்கு பல்வேறு சிறப்பான நிகழ்வுகள் நிகழ்ந்த நாளாகும். எமது நாடு தேரவாத பௌத்தம் மற்றும்…

Read More

தபால் ரயிலில் மேலதிக பெட்டிகளை இணைக்க நடவடிக்கை

இரண்டு நாள் தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததால், இன்று (01) முதல் இரவு தபால் ரயிலில் ஒரு தபால் பெட்டியை மேலதிகமாக இணைக்குமாறு ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு கோட்டை-பதுளை மற்றும் கோட்டை-காலி இரவு தபால் ரயில்களில் ஒரு தபால் பெட்டி மேலதிகமாக இணைக்குமாறு ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக இரண்டு நாட்களாக தபால் பெட்டிகள் தபால் ரயிலில் இருந்து அகற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

காத்தான்குடி நகர வர்த்தக நிலையத்தில் பாரிய தீ விபத்து

காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள பிரபல சூப்பர் மார்கட் வர்த்தக கட்டிடத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஏற்பட்ட பாரிய தீயினை தீயணைப்புப் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதிலும் குறித்த வியாபார நிறுவனம் முற்றிலும் சேதமடைந்துடதுடன் பல இலட்சக்கணக்கான ரூபா பெறுமதியான பொருட்களும்,உடைமைகளும் சேதமடைந்துள்ளன..

Read More

கொலையில் முடிந்த குடும்ப பிரச்சினை

வெல்லவாய, ஊவா குடாஓயா, எதிலிவெவ பகுதியில் தாக்குதலுக்க இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிழந்த நபர் தனது தாயாரை கோடரியால் தாக்க முயன்றதாகவும், கோடரியை அவரது கழுத்தில் வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதைப் பார்த்த தாயின் மருமகன் (மகளை மணந்தவர்) தடியொன்றை எடுத்து அவரைத் தாக்கியுள்ளார். குறித்த தாக்குதலில் அந்த நபர் வீட்டுக்குள்ளேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார். உயிரிழந்த நபர் வீட்டில் வசிப்பவர்களுடன் தொடர்ந்து சண்டையிட்டு…

Read More

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முக்கிய அறிவிப்பு

வீட்டு வேலைக்கு அல்லாத தனிப்பட்ட ரீதியில் வௌிநாடு செல்லும் அனைத்து தொழிலாளர்களும் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவினைப் பெறுவதற்கு முன்னதாக தாம் தொழில்புரிய உத்தேசித்துள்ள நாட்டின் இலங்கை தூதரகம், உயர்ஸ்தானிகராலயம் அல்லது துணை தூதரகம் ஆகியவற்றால் உறுதிப்படுத்திக் கொள்வது கட்டாயமாகும். வீட்டு வேலைக்கு அல்லாத வெளிநாடுகளுக்குச் செல்லும் போது தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கைத் தூதரகங்கள் இயங்காத…

Read More

இலங்கையில் நாளுக்கு நாள் குறைந்து வரும் தங்க விலை!

இலங்கையில் நாளுக்கு நாள் தங்க விலை குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய, கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 263,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 241,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் பவுண் ஒன்று 197,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 32,875 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு…

Read More

ராஜஸ்தானில் 9 பேருக்கு கொரனோ பாதிப்பு

தெற்காசியாவில் கொரனோ தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் அதன் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுள்ளதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்து 16 நாட்களே ஆன குழந்தை உட்பட 9 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்….

Read More

விளம்பரங்களால் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

சமூக ஊடக விளம்பரம் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் உணவுப் பழக்கத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் டிக்டாக் போன்ற சமூக ஊடகங்களில் தொடர்ந்து பார்க்கும் விளம்பரங்களால் பல சிறுவர்கள் தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இசபெல் ஹேன்சன் நடத்திய ஆய்வில், இந்த விடயம் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில், 13-17 வயதுடையவர்கள் சமூக ஊடகங்களில் ஒரு மணி நேரத்திற்கு 17 விளம்பரங்களைப்…

Read More

சீனாவில் மணப்பெண் தட்டுப்பாடு – ஏக்கத்தில் 30 இலட்சம் இளைஞர்கள்

சீனாவில் சுமார் 30 இலட்சம் இளைஞர்களுக்கு மணப்பெண் தட்டுப்பாடு என்ற சூழல் நிலவி வரும் நிலையில்,பங்களாதேஷில் இருந்து மணப்பெண்களைக் கடத்தி சட்டவிரோதமாக திருமணம் செய்ய சீன மணமகன்கள் முன்வருகின்றனர். தரகர்கள், ஒன்லைன் விளம்பரங்கள் மூலம் இதுபோன்ற திருமணங்கள் நடக்கின்றன. இதனால் பங்களாதேஷில் உள்ள சீன இளைஞர்கள் யாரும் வெளிநாட்டு பெண்களை மணக்க வேண்டாம் என அந்நாட்டு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

Read More

வெற்றிகரமாக நடந்து முடிந்த மனித இயந்திரக் குத்துச் சண்டை போட்டி

உலகில் முதல்முறையாக மனித இயந்திரக் குத்துச் சண்டை போட்டி சீனாவின் ஹாங்சாவ் (Hangzhou) நகரில் நடைபெற்றுள்ளது. China Media Group (CMG) குழுமம் ஏற்பாடு செய்த குறித்த போட்டியில் பல சுற்றுகள் நடைபெற்றன. அதில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த மனித இயந்திரங்கள் பார்ப்போரை வியக்கச் செய்யும் அளவுக்குகுத்துச் சண்டையில் ஈடுபட்டன. இறுதியில் “AI Strategist” என்கிற இயந்திரமே வெற்றிபெற்றது. CMG உலக இயந்திரப் போட்டியின் ஓர் அங்கமாக அந்தக் குத்துச் சண்டை போட்டி நடந்ததாக CGTN தெரிவித்தது….

Read More