தபால் ரயிலில் மேலதிக பெட்டிகளை இணைக்க நடவடிக்கை

இரண்டு நாள் தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததால், இன்று (01) முதல் இரவு தபால் ரயிலில் ஒரு தபால் பெட்டியை மேலதிகமாக இணைக்குமாறு ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு கோட்டை-பதுளை மற்றும் கோட்டை-காலி இரவு தபால் ரயில்களில் ஒரு தபால் பெட்டி மேலதிகமாக இணைக்குமாறு ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக இரண்டு நாட்களாக தபால் பெட்டிகள் தபால் ரயிலில் இருந்து அகற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2 thoughts on “தபால் ரயிலில் மேலதிக பெட்டிகளை இணைக்க நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *