நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்வதற்கான சாத்தியம்

மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேபோல், மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும்…

Read More

மட்டக்களப்பில் 4 பேருக்கு மரணதண்டனை

மட்டக்களப்பு சந்திவெளியில் 2017 ஆம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரான் மற்றும் சந்திவெளி பிரதேசங்களைச் சேர்ந்த 4 பேருக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். ஜெ. பிரபாகரன் இன்று (21) மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி, சந்திவெளியைச் சேர்ந்த மயில்வாகனம் ரவீந்திரன் என்பவரை, ரி-56 ரக துப்பாக்கியால் அப்பகுதியில் இயங்கி வந்த ஆயுதக் குழு…

Read More

62 வங்கிகளில் கொள்ளையடித்த மக்கள் விடுதலை முன்னனி

1985 ஆம் ஆண்டுகளில் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்கள்தான் வங்கிகளை கொள்ளையடித்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்தார். பாதீடு தொடர்பான விவாதத்தின் போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்தார். 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்கள் வங்கிகளைக் கொள்ளையடித்ததாக ரோஹினி குமாரி விஜேரத்ன குறிப்பிட்டார். மேலும் இந்தக் காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியினர் 62 வங்கிகளைக் கொள்ளையடித்ததாக அவர் தெரிவித்தார். இதன் போது வங்கிகளிலிருந்து…

Read More

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி தொடர்பான முறைப்பாடுகளை ஆராய புதிய குழு நியமனம்!

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.  அங்கு இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதைகள், ஆசிரிய மாணவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் உள்ளிட்ட விடயங்கள் தொர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.  குறித்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு கல்லூரியின் ஆணையாளருக்கு அறிவுறுத்தப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.  பெயரை வெளிப்படுத்த விரும்பாத மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால்…

Read More

இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பிரதமர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். அதே நேரத்தில் சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகளும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் ஸ்திரத்தன்மை காரணமாக அரச தலைவர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருவதாகவும் தெரிவித்தார்.

Read More

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்து மத்தியவங்கியின் அறிக்கை

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித் தொழில் சட்டத்தின் பிரிவு 83(c) ஐ மீறி, Pro Care (Pvt) Ltd. மற்றும் Shade of Procare (Pvt) Ltd ஆகிய நிறுவனங்கள் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டமொன்றில் ஈடுபட்டுள்ளது என இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.  மேலும், பின்வரும் கம்பனிகளும்/செயலிகளும், திருத்தப்பட்டவாறான 1988ஆம் ஆண்டின் 30ஆம்…

Read More

தீ அனைப்பு உபகரணங்கள் மேம்படுத்துவதற்காக ஜப்பானின் உதவியின் கீழ் விசேட திட்டம்

இலங்கை முதலீட்டு சபை (BOI)யின் கீழ் செயல்படும் ஏற்றுமதி வலயங்கள் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாடு முழுவதும் உள்ள 14 ஏற்றுமதி வலயங்களிள் உள்ள 285 நிறுவனங்களில் சுமார் 145,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்த வலயங்களில் தீயணைப்பு திறனை மேம்படுத்துவது ஊழியர்கள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மிக முக்கியமானதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே, ஜப்பானின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 4,000 லிட்டர் தண்ணீர் தொட்டி கொள்ளளவு…

Read More

மாத்தறை துப்பாக்கிச் சூடு – நீதிமன்றில் சரணடைந்த சந்தேகநபர்கள்

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியன்று மாத்தறை வெலிகம ஹோட்டலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட ஏனைய ஆறு சந்தேக நபர்களும் இன்று (21) சீராக்கல் மனு ஊடாக மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

Read More

விமானப்படைக்குச் சொந்தமான ஜெட் விமானம் விபத்து

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான K8 ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது.  கட்டுநாயக்க பகுதியில் இருந்து புறப்பட்ட இந்த ஜெட் விமானம், ரேடார் தொடர்பை இழந்து, பின்னர் வாரியபொல, மினுவன்கெட்டே பகுதியில் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.  விபத்து நடந்த நேரத்தில் விமானத்தின் இரண்டு விமானிகள் இருந்ததாகவும், அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது. 

Read More

வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

களுத்துறையில் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெலுவ – பெலவத்த வீதியில் லொறியுடன் முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது களுபோவிட்டிய பகுதியை சேர்ந்த 55 மற்றும் 27 வயதான பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More