தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது , ஹெரோயின் போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பதுளை – ஹப்புத்தளை நகர சபைக்கான தேர்தல் முடிவு.
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை – ஹப்புத்தளை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், சுயேட்சைக் குழு ஒன்று 1038 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி 844 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

