2025 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் 61,890 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நவம்பர் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 15,541 ஆகும். அத்துடன், ரஷ்யாவிலிருற்து 8,220 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 4,740 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,450 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 2,614 சுற்றுலாப் பயணிகளும்,…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நேற்று நடத்தப்பட்டது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த விசேட சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து இலங்கை வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து தகவல் கிடைத்ததாகவும் அவர் கூறினார். இதற்கமையவே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடாத்தப்பட்டதாக தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் இருந்து 5…

