தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது , ஹெரோயின் போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அமைதியான தேர்தல் – பிமல் ரத்நாயக்க
முன்னொருபோதும் இல்லாதவாறு அமைதியான தேர்தல் ஒன்றை அரசாங்கம் நடத்திக் காட்டியுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குருநாகல் சென். ஜோன்ஸ் கல்லூரியில் தன் குடும்பத்தினர் சகிதம் வாக்களிக்க வந்திருந்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார். அவர் மேலும் கடந்த காலங்களை விட நாட்டில் ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. தேர்தல் ஒன்று நடைபெறுகின்றதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு இன்று அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அரசாங்கம் அந்தளவுக்கு அமைதியான தேர்தல் ஒன்றை நடத்திக்…

