இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI இனை அடிப்படையாகக் கொண்ட டயப்பர் நிபுணர் இனை அறிமுகம் செய்துள்ளது. இந்த முன்னோடி உதவிச் சேவையானது, பெற்றோரது நம்பகமான பங்காளி என்ற பேபி செரமி டயப்பர்களின் வகிபாகத்தை வலுப்படுத்துவதோடு, பெற்றோருக்கு குழந்தை டயப்பர் பராமரிப்பு குறித்த உடனடியானதும், நிபுணர்களால் உறுதிப்படுத்தபட்டதுமான வழிகாட்டுதல்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் தனிநபர் தேவைக்கேற்ப வழங்குவதன் மூலம் மொழி ரீதியான தடைகளை தகர்த்தெறிந்து, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு…

கேரள கஞ்சாவுடன் ஒருவரை செட்டிக்குளம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அழகாபுரி பகுதியில் 01 கிலோ 280 கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று (மார்ச் 02) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் செட்டிகுளம முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் இது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது