கேரள கஞ்சாவுடன் ஒருவரை செட்டிக்குளம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அழகாபுரி பகுதியில் 01 கிலோ 280 கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று (மார்ச் 02) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் செட்டிகுளம முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் இது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Read More