65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் நிலை ஜெயிலர்கள், சப்-ஜெயிலர்கள், ஜெய்லர் சார்ஜென்ட்கள், காப்பாளர்கள் (Guards), செவிலியர்கள் மற்றும் மருந்தாளர்கள் ஆகிய பதவிகளுக்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் ஏ. சி. கஜநாயக்க தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விபரங்களையும் விண்ணப்ப முறைகளையும் சிறைச்சாலைத் துறையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்துத் தெரிவுகளில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் வகையில் DPMC இனால் பஜாஜ் மின்சார முச்சக்கர வண்டி இலங்கையில் அறிமுகம்
டேவிட் பீரிஸ் மோட்டர் கம்பனி (பிரைவட்) லிமிடெட், (DPMC) நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும், இலங்கையின் நம்பிக்கையை வென்ற முச்சக்கர வண்டி வர்த்தக நாமமான பஜாஜ், தனது பஜாஜ் மின்சார முச்சக்கர வண்டியை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. அதனூடாக சிக்கனமான போக்குவரத்து தீர்வுகளை நோக்கிய நாட்டின் பயணத்தில் மற்றுமொரு முக்கிய மைல்கல் பங்களிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் மற்றும் சுற்றுச்சூழல் ரீதியான அக்கறைகள் போக்குவரத்துத் துறையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்தச் சூழலில்,…

