துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை முயற்சி செய்த குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி மாலை, கொஸ்கொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றால், லேலிஹெத்துவ சந்திக்கு அருகில் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடமிருந்து 6 கிராம் 826 மில்லிகிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர், 28 வயதுடைய ஊரகஸ்மன்ஹந்திய பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். மேலதிக விசாரணைகளில், கடந்த ஏப்ரல் 17…

4.7 கோடி ஆண்டுகள் பழமையான பாம்பு கண்டுபிடிப்பு
குஜராத்தில் சமீபத்தில் நடந்த ஒரு ஆராய்ச்சியின் போது விஞ்ஞானிகளால் ஒரு பழங்கால ராஜ நாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் கட்ச் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவங்கள் உலகின் மிகப்பெரிய பாம்பின் கதையில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. வாசுகி இண்டிகஸ் என்று பெயரிடப்பட்ட இந்த வரலாற்றுக்கு முந்தைய பாம்பு 49 அடி நீளமும் 1,000 கிலோகிராம் எடையும் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இதுவரை இருந்த மிகப்பெரிய பாம்பான டைட்டனோபோவாவை கூட மிஞ்சும். ரூர்க்கியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி)…