லண்டனுக்கு புறப்பட்ட விமானம் விபத்து – 242 பேர் விமானத்தில் இருந்ததாக தகவல்

இந்தியாவின் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (போயிங் 787-8) புறப்பட சில நிமிடங்களில் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையத்திற்கு அருகே மேதானி நகர் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்துள்ளதாகவும், விபத்துக்குள்ளான நிலையில் குறித்த விமானத்தின் வால்பகுதி BJ Medical College’s UG விடுதியில் மோதியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குடியிருப்புப் பகுதிகளில் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விமான விபத்து நடந்த…

Read More

IPL இன் இன்றைய முக்கிய இரண்டு போட்டிகள்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. கொல்கத்தாவில் நடைபெறும் குறித்த போட்டியானது, இன்று மாலை 3.30க்கு ஆரம்பமாகவுள்ளது. இத்தொடரின் இன்றைய தினத்திற்கான இரண்டாவது போட்டியானது, இரவு 7.30 க்கு நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

தோல்விக்கு நானே பொறுப்பு – தோனி

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்த நிலையில், இந்த தோல்விக்கு தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக அணியின் தலைவர் மஹேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். போட்டி நிறைவடைந்த பின்னர் தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் இதனை தெரிவித்தார். ”நான் துடுப்பாட்டம் செய்யத் தொடங்கிய போது அழுத்தத்தைக் குறைக்க இன்னும் வேகமாகத் துடுப்பெடுத்தாடியிருக்க வேண்டும். ஆனால்…

Read More

பாகிஸ்தான் வானொலிகளில் இந்திய பாடல்களுக்கு தடை

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் – இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் (PBA) நாடு முழுவதும் உள்ள பாகிஸ்தான் எஃப்எம் வானொலி நிலையங்களில் இந்திய பாடல்களை ஒளிபரப்ப தடை விதித்துள்ளதாக பிபிஏ பொதுச் செயலாளர் ஷகீல் மசூத் அறிவித்தார். பாகிஸ்தானின் தகவல்தொடர்புத் அமைச்சர் அட்டா தரார் இந்த நடவடிக்கையைப் பாராட்டினார். அவர் PBA-வின் முடிவை தேசபக்திக்கான எடுத்துக்காட்டு என்று விவரித்தார். இதுபோன்ற சோதனையான காலங்களில்…

Read More

ஐ.பி.எல் வரலாற்றில் இரண்டாவது அதிவேக சதம்! சாதனை படைத்த 14 வயது வைபவ் சூரியவன்ஷி

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் 14 வயது துடுப்பாட்ட வீரர் வைபவ் சூரியவன்ஷி மிக இளம் வயதில் 20 இற்கு 20 போட்டியொன்றில் சதத்தைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார். அத்துடன் ஐ.பி.எல். வரலாற்றில் இரண்டாவது மிக வேகமான சதத்தைப் பூர்த்தி செய்தவர் என்ற சாதனையையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பாடிய குஜராத்…

Read More

பஹல்காம் தாக்குதல்: ஐ.நா. பாதுகாப்பு சபை கண்டனம்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துக்கு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பயங்கரவாதம் அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிகவும் கடுமையான அச்சுறுத்தல்களில் ஒன்றாகும். இந்த பயங்கரவாதச் செயலுக்கு காரணமானவர்கள், நிதி அளிப்பவர்கள் மற்றும் ஆதரவாளர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும். எந்தவொரு பயங்கரவாதச் செயல்களும் நியாயப்படுத்த முடியாதவை….

Read More

14 இந்திய மீனவர்கள் விடுவிப்பு

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 14 இந்திய மீனவர்கள் சென்னை திரும்பியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.  தமிழகம் – இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் கடந்த மார்ச் 17ஆம் திகதி கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.  பின்னர் அவர்கள் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.  தொடர்ந்து ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 11 மீனவர்கள் கடந்த மார்ச் 26 ஆம் திகதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது…

Read More

பாகிஸ்தானின் தாக்குதல் – இந்தியாவின் பதிலடி

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளது.  இந்த நிலையில், எல்லை பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பந்திபோராவில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது.  எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான் இராணுவத்திற்கு இந்திய இராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது….

Read More

காஷ்மீரில் துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் -28 பேர் பலி

காஷ்மீர் – பஹல்கம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 28 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  முக்கிய சுற்றுலாத் தலமொன்றை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  பாகிஸ்தான் லஸ்கர் ஈ தாய்பாவின் நிழல் அமைப்பான ரெஸிஸ்டண்ட் முன்னணி, குறித்த தாக்குதலைப் பொறுப்பேற்றுள்ளது.

Read More

இன்னும் தனது அறிவுக்கு தீனி போடும் நடிகர் கமல்ஹாசன்.

நடிகர் கமல்ஹாசன், லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற NAB Show 2025 நிகழ்வில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி கலைத்துறை மற்றும் அதில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பற்றிய விடயங்களை அறிந்துகொள்ள உதவும்.. கமல், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளதோடு, அங்கிருக்கும் தொழில்நுட்ப கருவிகளில் தனது அனுபவ அணுகுமுறையினையும் செய்திருக்கின்றார். அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ படம் எதிர்வரும் ஜூன் 5ம் திகதி திரையரங்குகளில் வெளியாகின்றது. இந்த வயதிலும் அவருடைய…

Read More