நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
உலகக்கிண்ணத்தை பெற்றுக்கொடுத்த இலங்கை அணிவீரர்களை சந்தித்தார் மோடி
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 05) மாலை சந்தித்தார். 1996ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக சாம்பியன் பட்டத்தை சூடிய அணி வீரர்களான அரவிந்த டி சில்வா, சனத் ஜயசூரிய, சமிந்த வாஸ், ருமேஷ் களுவிதாரண, குமார் தர்மசேன, ரவீந்திர புஷ்பகுமார, மார்வன் அத்தபத்து, உபுல் சந்தன ஆகிய வீரர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

