ஜனாதிபதி செயலகத்திற்கு சென்ற இந்திய பிரதமர்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (05) காலை ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளார்.  ஜனாதிபதி செயலகத்திற்கு சென்ற பிரதமரை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சிறப்பாக வரவேற்றார்.  இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ‘நூற்றாண்டு கால நட்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்கான பிணைப்பு’ என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்த இலங்கைக்கு வந்துள்ள இந்தியப் பிரதமர், நாளை (6) நாட்டிலிருந்து புறப்படவுள்ளார்.

Read More

இந்திய – இலங்கை பாதுகாப்பு உறவு குறித்த விசேட அறிக்கை

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவுகள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இரு நாடுகளும் பல தசாப்தங்களாக நல்லுறவுப் பாதுகாப்பு உறவுகளைப் பேணி வருவதாக அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் கூட்டு இராணுவ மற்றும் கடற்படை பயிற்சிகள் ஆகியவற்றால் இருதரப்பு உறவுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, இலங்கை முப்படைகளின் சுமார் 750 அதிகாரிகளுக்கு இந்தியா ஆண்டுதோறும் விடயதானம் சார்ந்த பயிற்சியை வழங்குவதாக பாதுகாப்புச் செயலாளர்…

Read More

இந்திய பிரதமருக்கு இலங்கையில் அமோக வரவேற்பு.

இலங்கையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதவியேற்ற பின்னர் மோடியின் முதல் உத்தியோக பூர்வ இலங்கை விஜயமாக இது அமைந்துள்ளது. இந்த நிலையில் தனது எக்ஸ் தளத்தில் இந்திய சமூகத்தினரின் வரவேற்பு தொடர்பில் காணொளியொன்றை பதிவிட்டு “அவர்களது அன்பான அரவணைப்பு மற்றும் உற்சாகத்தினால் நான் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு எனது நன்றி!” எனவும் கூறியுள்ளார். அதேநேரம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸ்ஸாநாயக்க தலைமையில் இன்று (ஏப்ரல்…

Read More

இந்திய பிரதமரை வரவேற்க தயாராகியுள்ள இலங்கை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில், கொழும்பின் பல்வேறு பகுதிகளில் இந்திய தேசியக் கொடிகள் மற்றும் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மற்றும் மிக உன்னிப்பாக கண்காணிப்பும், முறையான செயற்திட்டமும் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அதிரடி வரி மற்றும் நிபந்தனைகளின் மாற்றத்தின் பின் நடைபெறும் முக்கிய சந்திப்பாகவும் உத்தியோக பயணமாகவும் இந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் சர்வதேசத்தினால் பார்க்கப்படுகின்றது.

Read More

வீர தீர சூரன் ஒரு வார அதிகாரபூர்வ வசூல்

விக்ரம் நடிப்பில் SU அருண் குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படம் கடந்த வியாழன் அன்று ரிலீஸ் ஆகி இருந்தது. நீதிமன்ற வழக்கு காரணமாக முதல் நாள் ரிலீசுக்கு தடங்கல் ஏற்பட்ட நிலையில் மாலையில் தான் முதல் காட்சியே திரையிடப்பட்டது. இந்நிலையில் வீர தீர சூரன் ஒரு வாரத்தில் செய்திருக்கும் வசூலை தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார். உலக அளவில் 52 கோடி ரூபாய் தற்போது வரை வசூல் வந்திருக்கிறதாம். இந்த வாரமும் பெரிதாக போட்டி…

Read More

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவமனை அமைத்த இந்திய ராணுவம்

நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேயில், 60 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையை இந்திய ராணுவம் அமைத்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு அவசர அறுவை சிகிச்சைகள், அத்தியாவசிய மருத்துவ சேவைகள் அங்கு அளிக்கப்படுவதாக ராணுவத்தினர் தெரிவித்தனர். இதுவரை 200 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Read More

கச்சத்தீவை மீட்கவேண்டும், பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தல்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஏற்கனவே தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அத்துடன் இலங்கை சிறையில் இருந்து தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களை விடுதலை செய்து மீட்டு வர வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதேநேரம் பாக் வளைகுடா பகுதியில் வாழும் இந்திய கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்கும் வகையில், கச்சத்தீவை திரும்பப் பெறுவது தொடர்பாக நேற்று (ஏப்ரல் 02) அன்று…

Read More

முதல் இந்திய விண்வெளி வீரரை சந்திரனுக்கு அழைத்து செல்ல திட்டம்

2040ம் ஆண்டுக்குள் முதல் இந்திய விண்வெளி வீரரை சந்திரனுக்கு அழைத்து செல்லும் “மூன் மிஷன்” திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், NGLV என பெயரிடப்பட்டுள்ளபெரிய ராக்கெட்டுகளை வடிவமைத்து தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.

Read More

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் ; மூடப்படும் வீதிகள் குறித்து அறிவித்தல்

பாரத பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 ஆம் திகதி இலங்கைக்கு வருகைத்தர உள்ள நிலையில், அவரது விஜயத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸாரால் விசேட போக்குவரத்து திட்டம் செயற்படுத்தப்பட உள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி புத்திக மனதுங்க இன்று(ஏப்ரல் 2) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். அதற்கமைய ஏப்ரல் 4ஆம் திகதி பிற்பகல் 6.00 மணி முதல் இரவு 10.00 மணிவரை கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும்…

Read More

IPL தொடரின் மேலும் 2 போட்டிகள் இன்று!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மேலும் 2 போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. இதன்படி இன்று பிற்பகல் 3.30க்கு இடம்பெறவுள்ள போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. இதேவேளை இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ள மற்றுமொரு போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Read More