1000 ஆங்கில வார்த்தைகளை கூறி 21/2 வயது சிறுமியின் சாதனை.

சாவகச்சேரியை சேர்ந்த ஜெயகரன் தர்ஷ்விகா என்ற இரண்டரை வயது சிறுமி நாள்,காலநிலை, விலங்குகள், மின்னியல் சாதனங்கள், தொழில்கள், அன்றாட நடவடிக்கை உள்ளிட்ட 1000ம் தமிழ் சொற்களுக்கான ஆங்கில சொற்களை மிக லாவகமாக கூறி அசத்துகின்றார். சிறுமியின் இந்த அசாத்திய திறமையினை கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவதற்கான முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டுள்ளனர். சிறுமியின் தந்தையார் முச்சக்கரவண்டி சாரதியாகவும் தாயார் இல்லத்தரசியாகவும் உள்ளனர். சிறுமியின் எதிர்காலத்திற்க்காக அம்மா கல்வி கற்க ஆரம்பித்தார். அதனை கேட்டே வளர்ந்த சிறுமி அம்மா சில…

Read More

யாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (மார்ச் 29) இடம்பெற்றுள்ளது. இதில் ஏழாலை தெற்கை சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். கந்தரோடை பகுதியில் வேகமாக பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும்…

Read More

300 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா தொகை யாழில் பறிமுதல்

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் 154 பொதிகளில் 300 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இராணுவம் மற்றும் கடற்படையினர் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையில் இந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மீன்பிடிப் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரை எந்த நபர்களும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை…

Read More

தேசிய மக்கள் சக்தி யாழில் வேட்புமனு தாக்கல்.

யாழ் மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்கள் இன்று (மார்ச் 20) மாவட்ட செயலகத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான ம.பிரதீபன் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் தேசிய மக்கள் சக்தி தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தது. இங்கு பாராளுமன்ற உறுப்பினர்களாகிய வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜா, ஜெ.ரஜீவன் உள்ளிட்ட 17 சபைகளுக்கான முதன்மை வேட்பாளர்கள் வருகைதந்தனர். அத்தோடு,உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யும்…

Read More

யாழ். மாவட்ட செயலகத்தின் முக்கிய அறிவிப்பு!

பிறப்புச் சான்றிதழ் பதிவு செய்யாத பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடமாடும் சேவை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இம்மாதம் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பி. ப 3.00 மணிவரை அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெறவுள்ளது. இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தேவையான உரிய ஆவணங்களுடன் வருகைதந்து பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்று பயனடையுமாறு யாழ். மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

Read More

காற்றின் தரக் குறியீட்டின் சமீபத்திய நிலை

காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, மட்டக்களப்பு மற்றும் அனுராதபுரம் ஆகிய நகரங்களில் நேற்று (09) காற்றின் தரக் குறியீடு (SL AQI) சற்று மோசமான நிலையில் இருந்ததாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலவும் வானிலை நிலையைப் பொறுத்து, இன்றைய காற்றின் தரக் குறியீடு நாள் முழுவதும் 40 முதல் 64 வரை இருக்கலாம் என்று அந்த அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது. தீவின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு மிதமான மட்டத்திலும், யாழ்ப்பாணம், வவுனியா,…

Read More

அநாகரிகமாக செயற்பட்ட யூடியூப்பர் உள்ளடங்கலாக நால்வருக்கு 14 நாட்களுக்கு விளக்கமறியல்.

அண்மையில் யூடியூப்பர் ஒருத்தர் உதவி செய்வதாக கூறி அநாகரிகமாக நடந்துகொண்ட காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து குறிப்பிட்ட யூடியூப்பர் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் வெளியிட்ட காட்சி சர்ச்சைக்குள்ளானதை தொடர்ந்து அந்த குழு மீண்டும் அந்த குறிப்பிட்ட வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) சென்றவேளை ஊர் இளைஞர்கள் அவர்களை மடக்கி பிடித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையிலேயே…

Read More

கோட்டைக்கேணியிருந்து அக்கரைவெளிவரையான பிரதான வீதியை பார்வையிட்டார் வடக்கு மாகாண ஆளுநர்.

கொக்குத்தொடுவாய், கோட்டைக்கேணி பிள்ளையார் கோயிலிருந்து அக்கரைவெளி வரை மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரதான வீதியை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேற்று (மார்ச் 08) நேரில் சென்று பார்வையிட்டார். கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுகேணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களின் 3,000 ஏக்கர் வரையிலான வயல் நிலத்துக்கு உள்ளீடுகளையும், விளைச்சலையும் கொண்டு சென்று வருவதற்கு பயன்படுத்தும் பிரதான வீதியாக காணப்படும் இந்த வீதி பயன்படுத்த முடியாத நிலைமையில் இருப்பதாக விவசாயிகள் ஆளுநருக்கு சுட்டிக்காட்டினார்கள். இந்த கண்காணிப்பில் இணைந்து கொண்ட புதுக்குடியிருப்பு…

Read More

இலங்கையில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடிக்கப்பலின் முன்னோட்ட பயணம்.

இலங்கையின் உற்பத்தியாளர்களின் அறிவு, திறன் என்பவற்றால் நவீன தொழில்நுட்பத்துடன் Dhanusha Marine நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட “maanya mooya” எனும் பெயர் கொண்ட கப்பலுக்கான அதற்கான முன்னோட்ட பயணம் இடம்பெற்று , சோமாலியாவிலுள்ள அரச நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரும் கலந்துகொண்டார். இலங்கையில் உற்பத்தி பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான பயணத்தில் இது முக்கிய மைல்கல்லாகும்.

Read More

தினக்குரல் பத்திரிக்கையின் ஸ்தாபகர் காலமானார்.

‘தினக்குரல்’ பத்திரிகையின் ஸ்தாபகரும் தொழிலதிபருமான எஸ்.பி. சாமி வயது மூப்பு காரணமாக தனது 89 ஆவது வயதில் நேற்று காலமானார். வயது மூப்பின் காரணமாக எஸ்.பி. சாமி நேற்று (வெப்ரவரி 19) இரவு யாழ்ப்பாணத்தில் காலமானார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்.

Read More