இதுவரை தங்கள் தேசிய அடையாள அட்டை உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெறாத விண்ணப்பதாரர்களுக்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 15 ஆம் திகதி (சனிக்கிழமை) காலை 8:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை ஆட்பதிவாளர் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் அல்லது காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியாவில் உள்ள கிளைகளில் அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது

நல்லூரான் தெற்கு வாசல் வளைவு
எம்பெருமான் முருகப்பெருமானுக்கே உரித்தான தைப்பூச(11.02.2025) நன்னாளில் தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12 மணியளவில் அலங்காரக்கந்தனாம் நல்லூர் கந்தசுவாமி ஆலய அமைப்பின் பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில் தெற்கு கோவில் வீதியில் அமைக்கப்பட்ட அலங்கார தோரண வாசலான “நல்லூரான் தெற்கு வாசல் வளைவு” காண்பிய விரிப்பு கண்டது. இந்த தெற்கு வாசல் வளைவு அமைப்பானது யாழ்ப்பாணத்து கந்தபுராண கலாச்சாரத்தை எடுத்தியம்புவதாக அமையப்பெற்றுள்ளது. புகைப்படம் – https://www.facebook.com/ingaran.sivashanthan?mibextid=ZbWKwL