பாம்பை விட்டு கணவரை கடிக்கவிட்டு கொலை செய்த மனைவி

குடும்ப உறவுகளில் பரவி வரும் இருண்ட அடித்தளங்களை நினைவூட்டும் விதமாக, இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் உள்ள அக்பர்பூர் கிராமத்தில் மற்றொரு கொடூரமான வாழ்க்கைத் துணை கொலை சம்பவம் வெளிவந்துள்ளது. அண்மையில் தனது கணவனை, மனைவி அவரின் சட்டத்திற்கு புறம்பான உறவில் இருந்த காதலனின் உதவியுடன் கொலை செய்து சிமெந்து நிரப்பப்பட்ட கொள்கலனில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது மீரட்டின் பஹ்சுமா பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் தனது மனைவியால் மர்மமான…

Read More

கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்த 24 மணி நேர விசேட அவசர தொலைபேசி இலக்கம்

கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தும் முகமாக இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் 24 மணி நேர விசேட அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் (SLCG), அதன் செயல்பாட்டு அறையுடன் நேரடியாக இணைக்கப்பட்ட 24 மணி நேர விசேட அவசர தொலைபேசி இலக்கமான ‘106’ ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இலக்கத்தினூடாக, கடல்சார் அவசர சூழ்நிலைகளில் பதிலளிக்கும் நேரத்தைக் குறைப்பதையும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் எதிர்ப்பிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு, மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாகக் கொண்ட…

Read More

2028 ஒலிம்பிக்கின் போது ஃபேர்கிரவுண்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி

2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கின் போது தெற்கு கலிபோர்னியாவின் போமோனாவில் உள்ள ஃபேர்கிரவுண்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்பதை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) உறுதிப்படுத்தியுள்ளது. 128 வருட இடைவெளிக்குப் பின்னர் கிரிக்கெட் மீண்டும் ஒலிம்பிக்கில் இடம்பெறும் என்பது உறுதி செய்யப்பட்டதிலிருந்து, கிரிக்கெட்டின் ஒலிம்பிக் மறுபிரவேசம் குறித்த உற்சாகம் அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் ஒன்பதாம் திகதி சர்வதேச ஒலிம்பிக் பேரவையின் (ஐ.ஓ.சி) நிர்வாகக் குழு 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டிற்கான வீரர் ஒதுக்கீடுகள் மற்றும் பங்கேற்கும்…

Read More

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்த அனைவரும் தமிழின துரோகிகள் – இளங்குமரன்

நாளைய தினம் (ஏப்ரல் 17ஆம் திகதி) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளதுடன், மக்கள் சந்திப்பிலும் கலந்துகொள்ளவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரியில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்துச் சபைகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும். எங்களின் வெற்றியை மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்….

Read More

பிள்ளையான் நாட்டிற்காகப் போராடிய உண்மையான தேசபக்தர் – உதயகம்மன்பில

தமிழீழ விடுதலைப் புலிகள் வலுக்கட்டாயமாக சிறுவர் போராளிகளை இணைத்துக்கொண்டமைக்கு பிள்ளையான் ஒரு வாழும் சான்றாக உள்ளார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பிள்ளையான் என்கின்ற சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்தது குறித்து இன்று (16) பிவித்துரு ஹெல உறுமய கட்சி தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இன்று நான் நடத்தும் செய்தியாளர் சந்திப்பு என் வாழ்நாளில் நான் ஒருபோதும் எதிர்பார்க்காத ஒன்று. நான் பிள்ளையானை ஒரு…

Read More

ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளி யார்? விரைவில் உண்மை வெளிவரும் – ஜனாதிபதி

ஏப்ரல் 21 ஆம் திகதி முன்னூறுக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்றன. மார்ச் 30 அன்று மாத்தறையின் தெய்யந்தர பகுதியில் ஜனாதிபதி அனுர திசாநாயக்க, தாக்குதலுக்குப் பொறுப்பான பலர் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்குள் வெளிப்படுவார்கள் என்று கூறினார். “ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதல்களின் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.” “பெரும்பாலும், குற்றப் புலனாய்வுத் துறை…

Read More

நுவரெலியாவில் பேருந்து வசதியின்மையால் மக்கள் அவதி

நுவரெலியா பேருந்து நிலையத்தில் இருந்து குறுகிய தூர பேருந்து வசதி இல்லாததால் இன்று (15) பிற்பகல் நேரத்தில் பயணிகள் மற்றும் நுவரெலியா பிரதான நகருக்கு அன்றாட கூலிக்கு தொழில் நிமித்தம் வருபவர்கள் என பலரும் பெரும் அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்தனர். மேலும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நீண்ட தூரப் பயணச் சேவைகளுக்காக நுவரெலியாவிலிருந்து விசேட பேருந்து சேவையை இயக்கப்படுகின்ற போதிலும் நுவரெலியா பேருந்து நிலையத்தில் இருந்து குறுகிய தூர பேருந்து வசதி இல்லை என பயணிகள் குற்றம்…

Read More

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சை ஏற்க தயாராகும் சரத் பொன்சேகா

தற்போதைய அரசாங்கத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவியை வழங்கினால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இணைய வாயிலான நேர்காணலில் கருத்து வெளியிட்ட அவர், தனக்கு அத்தகைய பொறுப்பு வழங்கப்பட்டால் அதை ஏற்கத் தயங்க மாட்டேன் எனவும் குறிப்பிட்டார். இருப்பினும், ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு தான் பங்களிக்கவில்லை என்பதால், அத்தகைய பொறுப்பை கேட்க தனக்கு எந்த உரிமையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Read More

கம்மன்பிலவிடம் கதறியழுத பிள்ளையான் : ½ மணிநேரமாக என்ன பேசினார்கள்?

குற்றப்புலனாய்வுப் திணைக்களத்தின் விசாரணைகளில் போது தான் யார் மீதும் பழியைச் சுமத்தவில்லை அல்லது காட்டிக்கொடுப்புக்களைச் செய்யவில்லை என்றும் அப்படி செய்வதாகச் சொல்லி கூறி பலர் கைது செய்யப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் வந்த செய்திகள் தவறானவை என்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். இன்று (15) அவரை பார்வையிட்ட சட்டத்தரணி உதய கம்மன்பிலவிடம் அவர் இவ்வாறு தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உதய கம்மன்பில பிள்ளையானை சந்திக்கும்போது அரசாங்கத்தின் பழிவாங்கல்கள்…

Read More

அரசாங்கம் அனல்மின் நிலைய மாபியாக்களுக்கு ஆதரவாக செயற்படுகிறது – சஜித் கடும் சாடல்

புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை அளிப்பதாக உறுதியளித்த அரசாங்கம், டீசல் மற்றும் அனல் மின் நிலைய மாபியாக்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், மின்சாரத்தை அதிக விலைக்கு மக்களுக்கு விற்க அனுமதிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார். நீர்கொழும்பு பல்லன்சேனவில் நடந்த மக்கள் சந்திப்பில், அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து அவர் இதனை தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பாதுகாக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது உறுதியளித்தார். வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகள் இல்லாததால், மக்கள் தனியார் மருந்தகங்களில் உயிர்காக்கும்…

Read More