அமெரிக்காவின் நடவடிக்கைகளை ஜனாதிபதி எதிர்ப்பாரென எதிர்பார்க்கின்றோம் – திலித் ஜயவீர

வெனிசுவேலாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்ப்பார் என்று தான் எதிர்பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இதில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்தால், அவருக்குத் தனது நிபந்தனையற்ற ஆதரவை ‘வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள திலித் ஜயவீர, வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் நகர்வுகளுக்கு இலங்கையின் சோசலிச ஜனாதிபதி எதிர்ப்புத் தெரிவிப்பார் என்று எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒரு இறையாண்மை கொண்ட நாட்டிற்கு எதிராக அமெரிக்க…

Read More

புதிய கல்விக் கொள்கை தொடர்பில் பிரதமருக்கு எதிரான தவறான பிரச்சாரங்கள் – அமைச்சர் விஜித்த ஹேரத் கண்டனம்

புதிய கல்விக் கொள்கை தொடர்பில் குறுகிய அரசியல் நோக்கமுடையவர்கள் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்து பிரதமர் மீது மிக மோசமான குற்றச்சாட்டுக்களையும், விமர்சனங்களையும் முன்வைக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பிரதமரை பதவி விலகுமாறு அரசாங்கத்தில் எவரும் குறிப்பிடவில்லை என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். 6ஆம் தர பாடப்புத்தகத்தில் தவறான விடயமொன்று உள்ளடக்கப்பட்டுள்ளமை பாரதூரமான பிழையாகும். தரவு தொகுதி அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது. உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எந்நோக்கத்துக்காக…

Read More

உழவு இயந்திரத்திலிருந்து கீழே விழுந்து ஒருவர் பலி!

அநுராதபுரம் – மகாவிலச்சிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட  உலுக்குளம் கிராம வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) இரவு பதிவாகியுள்ளது. உலுக்குளம் பகுதியிலிருந்து பேமடுவ நோக்கிப் பயணித்த உழவு இயந்திரம் ஒன்றில் பயணித்த நபர், உழவு இயந்திரத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானார்.  விபத்தில் காயமடைந்த நபர் பேமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பெமதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடையவர். உயிரிழந்தவரின் சடலம்…

Read More

அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அதிருப்தி – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகம் மற்றும் கொள்கை ரீதியான தீர்மானங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (04) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் பயங்கரமாகத் தோன்றுவதாகக் குறிப்பிட்டார். விசேடமாக, அரசாங்கம் தற்போது கல்வித்துறையையும் சீர்குலைத்துள்ளதாகக் குற்றம் சுமத்திய அவர், நாட்டின் அனைத்துத் துறைகளும் வீழ்ச்சியடைந்து வருவதாகத் தெரிவித்தார்.  அரசாங்கத் தரப்பினர் கடினமாக உழைப்பதாகக் கூறிக்கொண்டாலும், நடைமுறையில் மக்கள்…

Read More

FCIDக்கு முன்னிலையாகவில்லை என்றால் ஜோன்ஸ்டன் மீது பிடியாணை நடவடிக்கை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வரும் 5ஆம் திகதி திங்கட்கிழமை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் (FCID) முன்னிலையாகவில்லை என்றால், அவரை கைது செய்ய நீதிமன்ற பிடியாணை பெறப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை தவறாக பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இந்த விசாரணை நடைபெறுகிறது. இதே வழக்கில், சதொச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக ரத்னமலல கைது செய்யப்பட்டு, 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்….

Read More

எத்திமலையில் கஞ்சா செடிகள்,துப்பாக்கியுடன் இருவர் கைது!

மொனராகலையில் எத்திமலை – கொட்டியாகல பகுதியில் கஞ்சா செடிகள் மற்றும் துப்பாக்கியுடன் இரண்டு சந்தேக நபர்கள் எத்திமலை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது 31 கஞ்சா செடிகள் மற்றும் ஒரு உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை அடிப்படையாகக்கொண்ட முதன்மைப் பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதம் 2.1 %

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை அடிப்படையாகக்கொண்ட முதன்மைப் பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதம் 2.1 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது. கடந்த நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட ‘தித்வா’ சூறாவளி காரணமாகக் கடந்த டிசம்பரில் மாதத்துக்கு மாத விலைகளில் கணிசமானளவு அதிகரிப்பொன்று ஏற்பட்ட போதிலும், சாதகமான புள்ளிவிபரத் தளத்தாக்கம் இதற்குப் பிரதானமாகத் துணையளித்திருந்தது. உணவுப்பணவீக்கம் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் டிசம்பரில் 3 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்ட அதேவேளை, உணவல்லாப்பணவீக்கம் நவம்பரில் பதிவான 1.7 சதவீதத்திலிருந்து டிசம்பரில் 1.8 சதவீதமாக அதிகரித்தது….

Read More

பொதுப்படுகடன் திணைக்களம் மூடப்பட்டது – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு

ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்குவரும் வகையில் பொதுப்படுகடன் திணைக்களத்தை மூடி, அத்திணைக்களத்தின் ‘Lanka Secure ‘ பிரிவினை கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் திணைக்களத்துக்கு இடமாற்றுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினுள் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பொதுப்படுகடன் முகாமைத்துவ அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது. பொதுப்படுகடன் முகாமைத்துவ அலுவலகம் கடந்த ஆண்டு…

Read More

தையிட்டி விகாராதிபதி பதவி உயர்வுக்கு எதிராக போராட்டம்: 11 உறுப்பினர்களுக்கு அழைப்பு கட்டளை

தையிட்டி விகாராதிபதியின் பதவி உயர்வுக்கு எதிராக விகாரைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 11 உறுப்பினர்களுக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தினால் அழைப்பு கட்டளை அனுப்பபட்டுள்ளது. மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் பலாலி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கின்படி நீதிமன்ற பதிவாளரால் அழைப்புக் கட்டளை அனுப்பப்பட்டுள்ளது. எதிர்வரும் ஐந்தாம் திகதி பிரதேச சபை உறுப்பினர்கள் 11 பேரையும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்புக் கட்டளை வழங்கப்பட்டது. கடந்த டிசம்பர் 21ம் திகதி தையிட்டி விகாரையின்…

Read More

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு குறித்து மக்கள் போராட்ட முன்னணி நீதியமைச்சரிடம் அதிருப்தி

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கும் வகையிலான சரத்துக்களை உள்ளடக்கியதாக வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் அதிருப்தி வெளியிட்டிருக்கும் மக்கள் போராட்ட முன்னணியினர், பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படுவதுடன் அதனைப் பதிலீடு செய்வதற்காகப் புதிய சட்டம் கொண்டுவரப்படக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர். தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச் சட்டத்துக்குப் பதிலாக ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ எனும் புதிய…

Read More