அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…

நகுலேஸ்வரப்பெருமானுக்கு வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்.
“வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவதுநாதன் நாமம் நமச்சிவாயவே” எம்பெருமான் சிவபெருமானை ஈசனாக தரிசிக்க ஈழத்தில் காணப்படுகின்றன பஞ்சஈஸ்வரங்கள். அதில் தலச்சிறப்பு அதிகம் பெற்ற யாழ்ப்பாண மாவட்டம் கீரிமலையில் அமைந்துள்ள நகுலேஸ்வரத்தில் இன்று(வெப்ரவரி 13) கொடியேற்றம் நிகழ்ந்து வருடாந்த மகோற்சவம் ஆரம்பமானது. நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரப்பெருமானுக்கு காலை 7மணிக்கு அபிஷேகம் இடம்பெற்று அதனை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை, ஸ்தம்ப பூஜைகள் நடைபெற்று பக்தர்களின் “அரோகரா” கோசத்தோடு மங்கள வாத்தியங்கள் ஒலிக்க துவஜாரோகணம் என அழைக்கப்படும் கொடியேற்றம் இனிதே நடைபெற்றது. மூர்த்தி,…