முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை!

ரமழான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. முன்னதாக, ரமழான் பண்டிகைக்காக முஸ்லிம் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 31 ஆம் திகதி விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் ஏப்ரல் முதலாம் திகதியும் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Read More

பாடசாலைகளுக்கு முதலாம் தவணை விடுமுறை.

2025 ஆண்டுக்கான அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, முதலாம் தவணைக்காக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்டம் ஏப்ரல் 1 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மீண்டும் ஆரம்பமாகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More