பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டரங்கு வேண்டாம் ; கோப்பாயில் அரங்கினை அமைக்க எனது காணியை நன்கொடையாக தருகிறேன் – கௌரி பொன்னையா

யாழ்ப்பாணத்துக்கான உள்ளக விளையாட்டரங்கை அமைப்பதற்கான காணியை தான் நன்கொடையாக கொடுத்து உதவ தயாராக உள்ளதாக சமூக நலத்துறை முன்னாள் அமைச்சர் கந்தையா வைத்தியநாதனின் பேர்த்தியாரான கௌரி பொன்னையா தெரிவித்தார். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் புதன்கிழமை (17) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.  மேலும் அவர் கூறுகையில்,  யாழ். குடாநாட்டில் உள்ளக விளையாட்டு அரங்கத்தை  அமைப்பதற்கு முயற்சிக்கின்றார்கள் என கேள்வியுற்றேன். அதற்காக புராதன மரங்களை அழிக்கவுள்ளதாகவும் கேள்வியுற்றேன்.  இயற்கையை அழிக்காது, புராதன மரங்களை அழிக்காது,…

Read More

மருதங்கேணியில் 75 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது!

மருதங்கேணி, மணல்காடு கடற்கரைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் கேரள கஞ்சா பொதியுடன் சந்தேக நபர் ஒருவர் புதன்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் இருந்த படகொன்றில் 75 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பில் கலந்துரையாடல்!

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பில் கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் புதன்கிழமை (17) ஆராயப்பட்டது. இக்கூட்டம் நேற்று காலை, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது. டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நிவாரண நடவடிக்கைகள் மற்றும் எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்கவேண்டிய மீள்கட்டியெழுப்புப் பணிகள் குறித்து கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மேலும், மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதிகளின் பயன்பாடு, மத்திய மற்றும் மாகாண திணைக்களங்களின் திட்ட முன்னேற்றங்கள், புதிய திட்டங்களுக்கு…

Read More

119 என்ற அவசர இலக்கம் குறித்து பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவித்தல் !

119 அவசர இலக்கத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்தல் மற்றும் தேவையான குறுகிய தொலைபேசி இலக்கம்  குறித்து பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை பொலிஸ்துறையினர் விடுத்துள்ளனர். 119 அவசர இலக்கத்திற்கு அறிவிக்கப்பட்ட அழைப்புகளைக் கருத்தில் கொள்ளும்போது, உடனடி பொலிஸ் நடவடிக்கை தேவைப்படும் முறைப்பாடுகளுக்கு மேலதிகமாக, இந்த அவசர சேவை தவறாகப் பயன்படுத்தப்படும் சம்பவங்கள் காணப்படுகின்றன. தவறான முறைப்பாடுகள் மற்றும் பிற அவசர சேவைகளுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டிய முறைப்பாடுகள் இந்த இலக்கத்திற்கு அழைப்பெடுத்து தெரிவிக்கப்படுகின்றன.  அவசரகாலத்தில் பொலிஸ் 119 அவசர…

Read More

பேரிடர் காலத்தில் அரசாங்கம் எடுத்த சுகாதார நடவடிக்கைகளுக்கு உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் பாராட்டு!

பேரிடரினால் ஏற்படும் நோய் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மற்றும் சுகாதாரத் துறை மேற்கொண்டுவரும் முயற்சிகளை உலக சுகாதார அமைப்பின் (WHO) பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் பாராட்டியுள்ளார். பாரம்பரிய மருத்துவம் குறித்து உலக சுகாதார அமைப்பின் (WHO) இரண்டாவது உலகளாவிய உச்சி மாநாடு புதன்கிழமை (17) இந்தியாவின் புதுடில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஆரம்பமானது. அந்த வகையில் மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸவிற்கும் உலக சுகாதார அமைப்பின்…

Read More

காத்தான்குடியில் சிகை அலங்கார நிலையத்தில் கத்திக்குத்து : தாக்குதலை மேற்கொண்டவர் பொலிஸில் சரண்

காத்தான்குடியில் சிகை அலங்கார நிலையத்தில் சிகை அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞன் மீது மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட இளைஞன் அங்கிருந்து தப்பியோடி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (18) இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கை மக்களுடன் ஜப்பான் முழு ஒற்றுமையுடன் நிற்கும் – ஜப்பான் தூதுவர்

நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கை மக்களுடன் ஜப்பான் அரசு முழு ஒற்றுமையுடன் நிற்கிறது என ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா தெரிவித்தார். டித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட பேரிடருக்கு ஆதரவளிக்கும் வகையில், ஜப்பான் அரசு யுனிசெஃப் (UNICEF) ஊடாக இலங்கைக்கு சுகாதார உபகரணங்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது. இதனடிப்படையில், டிசம்பர் 18 ஆம் திகதி இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா, ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதி எம்மா பிரிகாம் ஆகியோருடன் இணைந்து, வீடமைப்பு, நிர்மாணம்…

Read More

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு யூரோ 2.35 மில்லியனுக்கும் அதிகமான மனிதாபிமான உதவி

இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வலுவான பங்குதாரர்கள் மற்றும், இலங்கையை மீட்டெடுக்கும் செயல்முறைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் வகையில், யூரோ 2.35 மில்லியனுக்கும் அதிகமான மனிதாபிமான நிவாரணப் பொருட்களை இந்நாட்டிற்கு அனுப்பியுள்ளது. இதில் IFRC இனால் யூரோ 500,000 மற்றும் DG-European Civil Protection and Humanitarian Aid Operations (ECHO) பங்குதாரர்கள் WFP மற்றும் UNICEF இனால் யூரோ1.85 மில்லியன் ஆகியவை அடங்கும். மேலும், Union Civil Protection Mechanism (UCPM) சேர்ந்த 37 நாடுகள்,…

Read More

‘சமூக சக்தி’ திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மாத்தறை மற்றும் மொனராகலை மாவட்ட அரச அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை

வறுமை ஒழிப்பை நோக்கமாகக் கொண்ட ‘சமூக சக்தி’ தேசிய திட்டத்தை அடிமட்ட அளவில் செயல்படுத்துவதற்கான அரச அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டம், ரன்மினிதென்ன டெலி சினிமா கிராமத்தில் (16) ஆரம்பமானது. (17) தொடரும் இந்தப் பயிற்சியில் மாத்தறை மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஒவ்வொரு கிராமத்திலும் சமூக அபிவிருத்தி சபைகளை நிறுவுவதன் மூலம் இத்திட்டத்தை முன்னெடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இதில் பிரதேச மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகளுக்குப் பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சமூக வலுவூட்டலுக்காக…

Read More

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் ஆர்ப்பாட்டம்!

அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியர்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் இணைந்து புதன்கிழமை (17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து தருமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அண்மையில், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையிலிருந்து பொலிஸாரால் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. இதனால் வைத்தியசாலையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.  எனவே, அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து தருமாறு வைத்தியர்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம்…

Read More