அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு குறித்து ஜனாதிபதியுடன் சந்திப்பு

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த வரி விதிப்பு பின்னணி அடிப்படையிலும், சிறிய பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையைப் போன்ற நாடுகள் பாரிய அளவில் வரி விதிப்பதால் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது. ஏற்பட்டிருக்கும் நிலை தொடர்பில், ஒரு நாடு என்ற வகையில் எவ்வாறு செயற்படுவது மற்றும்…

Read More

ஹிக்கடுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

ஹிக்கடுவ – குமாரகந்த பகுதியில் இன்று (03) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் பலத்த காயமடைந்த கணவன், மனைவி இருவரும் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கணவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹிக்கடுவ – குமாரகந்த பகுதியில் இன்று (3) இரவு 7 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதிக்கு அருகில் உள்ள…

Read More

வவுனியாவில் மூவர் கஞ்சாவுடன் கைது…!

வவுனியாவில் கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது இன்று (ஏப்ரல் 03) விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா, கணேசபுரம் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதன்போதே மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 15 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதோடு அதனை வைத்திருந்த கணேசபுரம், கூமாங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25 – 32 வயதிற்குட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் ,கைப்பற்றப்பட்ட…

Read More

முறையற்ற காணொளி பகிர்வால், பதவி இழந்த அமெரிக்க நகர முதல்வர்

அமெரிக்காவில் உள்ள ஒரு மாநகர முதல்வர், உள்ளூர் நகர பெண் சட்டத்தரணி ஒருவருக்கு முறையற்ற ரீதியில் வெளிப்படையான காணொளியை அனுப்பிய நிலையில், தமது பதவியில் இருந்து விலகியுள்ளார். அமெரிக்காவின் வடக்கு டகோட்டாவின் மினோட்டின், பதவி விலகிய முன்னாள் முதல்வரான டேம் ரோஸ் என்பவர், தனது மதிய உணவு இடைவேளையின் போது முறையற்ற காணொளியை தனது நண்பி ஒருவருக்கு அனுப்புவதற்கு பதிலாக பெண் சட்டத்தரணி ஸ்டெபானி ஸ்டால்ஹெய்ம் என்பவருக்கு தவறுதலாக அனுப்பியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்தநிலையில், குறித்த தவறினை சுத்தகரித்தபோதும்…

Read More

தேசபந்து தென்னகோனுக்கு மீண்டும் விளக்கமறியல்.

தேசபந்து தென்னகோனை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2023 டிசம்பர் 31ஆம் திகதி மாத்தறை வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டல் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் பேரில் தேசபந்து தென்னகோனுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. இதனையடுத்து வெகு நாட்களாக தலைமறைவாகியிருந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றில் தேசபந்து தென்னகோன் சரணடைந்தார்….

Read More

எதிர்காலத்தில் தேசிய கலாசார நகரங்களாக உருவாக இருக்கும் 3 பெரிய நகரங்க. – அரசு திட்டம்.

எதிர்காலத்தில் இலங்கையின் அனுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய 3 நகரங்களையும் தேசிய கலாசார நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு எமது அரசு திட்டமிட்டுள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார். ஏப்ரல் முதலாம் திகதி பிரான்சிலுள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் இடம்பெற்ற சர்வதேச நிபுணர்களின் மாநாட்டில் ‘இலங்கையின் உலக மரபுரிமை சொத்தான அனுராதபுர புனித நகரத்தை பாதுகாப்பதற்கான ஒன்றிணைந்த மற்றும் நிலையான அணுகுமுறை’ என்ற தொனிப்பொருளில் உரையாற்றிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கலாசார முக்கோணம் நிறுவப்பட்டுள்ள அனுராதபுரம்…

Read More

அமெரிக்கா இலங்கைக்கு விதித்துள்ள புதிய பரஸ்பர வரி – சாதக, பாதகங்களை கண்டறிய குழுவொன்றை நியமித்தார் ஜனாதிபதி

இலங்கையில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி நேற்று (ஏப்ரல் 02) அறிவித்துள்ள நிலையில், இந்த வரித்திட்டமானது நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 05ம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த புதிய பரஸ்பர வரியினால் ஏற்படக்கூடிய தாக்கத்தை ஆய்வு செய்து பரிந்துரைகளை சமர்ப்பிக்க நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கி ஆளுநர், முதலீட்டு சபை…

Read More

பட்டலந்த வதைமுகாம் தொடர்பில் மனுவொன்று சமர்ப்பிப்பு

பட்டலந்த வதைக்கூடம் தொடர்பில் விசாரணை ஒன்றைக் கோரி முன்னிலை சோஷலிஸக் கட்சியின் நிர்வாக உறுப்பினர் இந்திரானந்த டி சில்வா குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று மனுவொன்றைச் சமர்ப்பித்து அவர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தார். பட்டலந்த வதைக்கூடம் தொடர்பில் கடந்த அரசாங்கத்தைப் போன்று தற்போதைய அரசாங்கமும் விசாரணைகளை மேற்கொள்ளாமல் இருப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன் அரசாங்கம் இவ்வாறு நடந்துகொள்கின்றமை மிகவும் வருத்தமளிப்பதாக முன்னிலை சோஷலிஸக் கட்சியின் நிர்வாக உறுப்பினர் இந்திரானந்த டி…

Read More

அம்பலாந்தோட்டை முக்கொலை சம்பவம் – ஒருவர் கைது

அம்பலாந்தோட்டை, எலேகொட மேற்கு பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி நடந்த மூன்று கொலைகளுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் மூன்று பேர் படுகாயமடைந்து, அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மூவரும் உயிரிழந்தனர். அதன்படி, சம்பவம் தொடர்பாக அம்பலாந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் போது, ​​பியகம பொலிஸ் பிரிவில் நேற்று (02) மாலை அம்பலாந்தோட்டை பொலிஸாரால் ஒரு சந்தேக…

Read More

தேசபந்து தென்னக்கோனை பதவிநீக்குவது தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் – ஏப்ரல் 8, 9 மற்றும் 10இல் பாராளுமன்றம் கூடுகின்றது.

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் ஏப்ரல் 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றுதற்காகச் சமர்ப்பிக்க சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று (ஏப்ரல் 02) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். பாராளுமன்றத்தை எதிர்வரும் ஏப்ரல் 8, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் கூட்டுவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. ஏப்ரல் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை…

Read More