ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளி யார்? விரைவில் உண்மை வெளிவரும் – ஜனாதிபதி

ஏப்ரல் 21 ஆம் திகதி முன்னூறுக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்றன. மார்ச் 30 அன்று மாத்தறையின் தெய்யந்தர பகுதியில் ஜனாதிபதி அனுர திசாநாயக்க, தாக்குதலுக்குப் பொறுப்பான பலர் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்குள் வெளிப்படுவார்கள் என்று கூறினார். “ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதல்களின் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.” “பெரும்பாலும், குற்றப் புலனாய்வுத் துறை…

Read More

விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளினி பிரியங்காவிற்கு திருமணம் முடிந்தாச்சு.

விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை மிக கச்சிதமாக தொகுத்துவழங்கும் திறமையான தொகுப்பாளினியும், எப்போதும் துரு துரு என்றும் உறவு , நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவருமான பிரியங்கா தேஷ்பாண்டேக்கு கல்யாணம். வாழ்க்கையில் உண்மையான அன்புக்காக ஏங்கும் நபர் நான் என்று அடிக்கடி சொல்லுவதை நேர்காணலில் பார்த்திருக்கிறோம். இப்போதும் அவரின் அன்பை பெற்று அவர் ஏற்கும் அன்பைக்கொடுக்க மாப்பிள்ளை அமைந்தாச்சு. லண்டனில் வசித்துவரும் இலங்கை தமிழரான வசி என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் இறையருளோடு திருமணம் இன்று(ஏப்ரல் 16)…

Read More

நுவரெலியாவில் பேருந்து வசதியின்மையால் மக்கள் அவதி

நுவரெலியா பேருந்து நிலையத்தில் இருந்து குறுகிய தூர பேருந்து வசதி இல்லாததால் இன்று (15) பிற்பகல் நேரத்தில் பயணிகள் மற்றும் நுவரெலியா பிரதான நகருக்கு அன்றாட கூலிக்கு தொழில் நிமித்தம் வருபவர்கள் என பலரும் பெரும் அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்தனர். மேலும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நீண்ட தூரப் பயணச் சேவைகளுக்காக நுவரெலியாவிலிருந்து விசேட பேருந்து சேவையை இயக்கப்படுகின்ற போதிலும் நுவரெலியா பேருந்து நிலையத்தில் இருந்து குறுகிய தூர பேருந்து வசதி இல்லை என பயணிகள் குற்றம்…

Read More

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சை ஏற்க தயாராகும் சரத் பொன்சேகா

தற்போதைய அரசாங்கத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவியை வழங்கினால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இணைய வாயிலான நேர்காணலில் கருத்து வெளியிட்ட அவர், தனக்கு அத்தகைய பொறுப்பு வழங்கப்பட்டால் அதை ஏற்கத் தயங்க மாட்டேன் எனவும் குறிப்பிட்டார். இருப்பினும், ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு தான் பங்களிக்கவில்லை என்பதால், அத்தகைய பொறுப்பை கேட்க தனக்கு எந்த உரிமையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Read More

கம்மன்பிலவிடம் கதறியழுத பிள்ளையான் : ½ மணிநேரமாக என்ன பேசினார்கள்?

குற்றப்புலனாய்வுப் திணைக்களத்தின் விசாரணைகளில் போது தான் யார் மீதும் பழியைச் சுமத்தவில்லை அல்லது காட்டிக்கொடுப்புக்களைச் செய்யவில்லை என்றும் அப்படி செய்வதாகச் சொல்லி கூறி பலர் கைது செய்யப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் வந்த செய்திகள் தவறானவை என்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். இன்று (15) அவரை பார்வையிட்ட சட்டத்தரணி உதய கம்மன்பிலவிடம் அவர் இவ்வாறு தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உதய கம்மன்பில பிள்ளையானை சந்திக்கும்போது அரசாங்கத்தின் பழிவாங்கல்கள்…

Read More

அரசாங்கம் அனல்மின் நிலைய மாபியாக்களுக்கு ஆதரவாக செயற்படுகிறது – சஜித் கடும் சாடல்

புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை அளிப்பதாக உறுதியளித்த அரசாங்கம், டீசல் மற்றும் அனல் மின் நிலைய மாபியாக்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், மின்சாரத்தை அதிக விலைக்கு மக்களுக்கு விற்க அனுமதிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார். நீர்கொழும்பு பல்லன்சேனவில் நடந்த மக்கள் சந்திப்பில், அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து அவர் இதனை தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பாதுகாக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது உறுதியளித்தார். வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகள் இல்லாததால், மக்கள் தனியார் மருந்தகங்களில் உயிர்காக்கும்…

Read More

தேர்தல் சட்டங்களை 164 முறையாடுகள் பதிவு

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மார்ச் 03ம் திகதி முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 164 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 130 முறைப்பாடுகளும், தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் 34 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. இந்நிலையில், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 16 வேட்பாளர்களும் 57 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

வெற்றியை சுவீகரித்தது CSK : 5விக்கெட்டுகளில் லக்னோவை வீழ்த்தியது

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ்- லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தெரிவு செய்துள்ளது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 07 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை பெற்று சென்னை அணிக்கு 167 வெற்றியிலக்காக நிர்ணயித்தது. வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்கள்…

Read More

வெப்பநிலை கவனம் செலுத்தும் மட்டத்தில் : பாதுகாப்பாக இருங்கள்

வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும், வெப்பக் குறியீடு அல்லது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, வெப்பமான வானிலையால் சுகாதாரப் பிரிவினரால் அறிவுறுத்தப்படும் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

Read More

‘குட் பேட் அக்லி’ திரைப்படம் இலங்கையில் 2 கோடி வசூல் சாதனை

அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏப்ரல் 10, 2025 அன்று வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் இலங்கையில் முதல் நான்கு நாட்களில் 2 கோடி இலங்கை ரூபாய் (LKR) வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தத் தகவல் இலங்கையின் உள்ளூர் திரையரங்கு வட்டாரங்களில் இருந்து பெறப்பட்ட மதிப்பீடு அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் (ஏப்ரல் 10): இலங்கையில் உள்ள முக்கிய திரையரங்குகளில் இப்படம் 80% ஆக்கிரமிப்புடன் தொடங்கியது. முதல் நாள் வசூல் சுமார் 60-70…

Read More