புதிய வாகன பதிவுகளுக்கு TIN எண் கட்டாயம்

2025 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் புதிய மோட்டார் வாகன பதிவுகளுக்கு மாத்திரம் வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) கட்டாயமாக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தௌிவுபடுத்தியுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த நிபந்தனை மோட்டார் சைக்கிள்கள், கை இழுவை இயந்திரங்கள் (hand tractors), இழுவை இயந்திரங்கள் (tractors) மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் சேவைகள்…

Read More

தொழிலாளர்களுக்கு உயிர் காப்புறுதி

இலங்கையில் கித்துள், தென்னை மற்றும் பனை தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு உயிர் காப்புறுதி திட்டமொன்றை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இத்தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் புதுப்பிக்கக்கூடிய வகையில் இந்த திடீர் விபத்து உயிர் காப்புறுதி திட்டத்தை அமல்படுத்துவதற்கு தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த சபை கூறியுள்ளது. இந்த முன்மொழியப்பட்ட திட்டத்தின் கீழ், 500,000 ரூபாய், 1,000,000 ரூபாய் மற்றும் 2,000,000 ரூபாய் என்ற காப்புறுதி தொகைகள் மரணம் அல்லது முழுமையான…

Read More

தங்கத்தின் விலை பாரியளவில் அதிகரிப்பு

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் இதுவரை பதிவான மிக உயர்ந்த மதிப்பை எட்டியுள்ள நிலையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 3,100 டொலர்களை தாண்டியுள்ளது. நேற்று (31) 24 கெரட் தங்கத்தின் ஒரு அவுன்ஸ் விலை 3,128.06 டொலர்களாக பதிவாகியிருந்த நிலையில், இன்று (ஏப்ரல் 01) அது மேலும் உயர்ந்து 3,137 டொலர்களாக பதிவாகியுள்ளது. தங்கத்தின் விலை இவ்வாறு உயர்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த மற்றும் விதிக்க தயாராகும் சுங்க வரிகள் ஒரு கூடுதல்…

Read More

குட் பேட் அக்லி படம் எப்படி இருக்கு தெரியுமா? வெளிவந்த முதல் விமர்சனம்

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதுவரை இப்படத்திலிருந்து வெளிவந்த இரண்டு பாடல்களும் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது. அதுவும் இரண்டாவதாக வெளிவந்த பாடல் வெறித்தனமாக இருந்தது. கண்டிப்பாக ஏப்ரல் 10ம் திகதி அஜித் ரசிகர்களுக்கு செம…

Read More

5 நாட்களில் வீர தீர சூரன் படம் செய்துள்ள வசூல்

கடந்த வாரம் விக்ரம் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வீர தீர சூரன். இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தை HR Pictures தயாரித்திருந்தனர். ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா மற்றும் சுராஜ் ஆகியோர் நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். சியான் விக்ரம் ரசிகர்களுக்கு செம விருந்தாக வீர தீர சூரன் திரைப்படம் அமைந்தது. ஆனால், சில இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களை தெரிவித்தனர். இந்த நிலையில், உலகளவில் இப்படம் 5 நாட்களில் செய்துள்ள…

Read More

வேதன விடயத்தில் அரசாங்கம் இன்னும் அக்கறையுடன் செயற்ட்படவில்லை – ஜோசப் ஸ்டாலின்

பயங்கரவாத தடைச் சட்டத்தை இல்லாது ஒழிப்போம் எனக்கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது அந்தச்சட்டத்தைப் பயன்படுத்தி பலஸ்தீனப் போராட்டத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்களைக் கைது செய்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே இதனைத் தெரிவித்துள்ளார். அதிபர், ஆசிரியர் வேதன முரண்பாட்டிற்கு எதிரான போராட்டத்தின் காரணமாகவே தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறியது எனச் சுட்டிக்காட்டிய ஜோசப் ஸ்டாலின், ஆனாலும் இந்த விடயத்தில் அவர்கள் அக்கறையுடன்…

Read More

முச்சக்கரவண்டி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி

பேராதனை, ஏதடுவாவ பகுதியில் முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று (30) இரவு 8 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த முச்சக்கர வண்டி விளையாட்டு மைதானமொன்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் உயிரிழந்தவர்கள் போயகம மற்றும் ஹெந்தெனிய பகுதியைச் சேர்ந்த 46 மற்றும் 53 வயதுடைய இருவர் ஆவர். சாரதியின் கட்டுப்பாட்டடை இழந்து முச்சக்கரவண்டி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும், விபத்தின் போது நான்கு பேர் முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் பின்…

Read More

அதிவேக வீதியில் விபத்து இருவர் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கௌனிகம பகுதியில் இன்று (01) காலை இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு பாரவூர்தி இரண்டு வேன்கள் மற்றும் ஒரு மகிழுந்து ஒன்றோடொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த விபத்தினால் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு எந்தத் தடையும் இல்லை எனத் தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Read More

நாட்டை மீண்டும் ஊழல்வாதிகளிடம் கையளிக்க போவதில்லை – ஜனாதிபதி

ஊழல்வாதிகள் மீண்டும் நாட்டில் அரசாங்கங்களை அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு நேற்று புத்தல நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன் போது ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேலும் உரையாற்றுகையில், “முன்னதாக தொழிலொன்றைப் பெற்றுக்கொள்வதற்குப் பணம் செலுத்த வேண்டும். வீதியை அமைப்பதற்குப் பணம் செலுத்தவேண்டிய நிலை காணப்பட்டது. இந்த அனைத்துச் செயற்பாடுகளும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும்…

Read More

புகையிரத சேவைகளில் தாமதம்

பிரதான தொடருந்து மார்க்கத்தில் தொடருந்து சேவைகளில் தாமதமாகக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வல்பொல பகுதியில் தொடருந்து ஒன்று இயந்திர கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளது. பொல்கஹவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தே இவ்வாறு இயந்திர கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாகவே போக்குவரத்து தாமதமாகக் கூடும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More