நாட்டின் காலநிலை காரணமாக பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு.

நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வறண்ட காலநிலை காரணமாக, பல மாவட்டங்களில் 7,000ற்கும் அதிகமான மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் 2,295 குடும்பங்களைச் சேர்ந்த 7,258 பேர் குடிநீர் இல்லாமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக த தெரண ஊடகத்திற்கு இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய ஹேரத் தெரிவித்துள்ளார். அதன்படி, களுத்துறை மாவட்டத்தில் மதுகம பிரதேச செயலாளர் பிரிவிலும், இரத்தினபுரி மாவட்டத்தில் வெலிகெபொல, எஹெலியகொட, கலவான…

Read More

கனேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிப்பிரயோகம்.

புத்துக்கடையில் நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கனேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ சமரரத்ன என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ்பிரிவு தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் உடையில் மாறுவேடமிட்ட வந்த துப்பாக்கிதாரி ஒருவர் தாக்குதல் நடத்தியதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். துப்பாக்கிதாரி சுடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட ரிவால்வர் நீதிமன்றத்திற்குள் கண்டெடுக்கப்பட்ட்டுள்ளது. மேலும் தாக்குதலுக்குப் பின் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தப்பிச்சென்றுள்ளார். நீதிமன்றத்தில் வழக்குவிசாரணைக்காக சஞ்சீவ…

Read More

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்…!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 22.02.2025 மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 22.02.2025 அன்று காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது காங்கேசன்துறையை வந்தடைந்த பின்னர் மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தை சென்றடையவுள்ளது. செவ்வாய்க்கிழமையை தவிர ஏனைய 6 நாட்களும் கப்பல் பயணப்படும். குறித்த இணையத்தினூடாக பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

Read More

200 வருட வரலாற்றைக்கொண்ட மாத்தளை முத்துமாரி அம்மனுக்கு மாசி மக மஹோற்சவம் ஆரம்பம்.

கண்டியில் இருந்து 27 கிமீ தொலைவில் உள்ள மாத்தளை நகரப் பகுதியின் நடுவே மிடுக்காய் 108 அடி உயரமான இராஜகோபுரத்தோடு அமைந்துள்ளது மாத்தளை முத்துமாரி அம்மா. 200 வருட வரலாறு காணப்படும் முத்துமாரி அம்மனுக்கு மாசி மத மஹோற்சவம் இன்று (வெப்ரவரி 18) கொடியேற்றதோடு ஆரம்பமானது. அடுத்து 21நாட்கள் மஹோற்சவ காலை மாலை பூஜைகளோடு இனிதே நடைபெற திருவுளம் கொண்டுள்ளது. இவ்வாலயத்துக்கான பஞ்சரத பவனி மார்ச்மாதம் 12ம் திகதி நடைபெறவுள்ளது.இதன்போது முருகன், சிவன், அம்மன், பிள்ளையார், சண்டேசுவரர்…

Read More

2024 ஸ்கேன் ஜம்போ போனான்ஸா 55 விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு மவுன்டைன் சைக்கிள்கள் மற்றும் டெப் கணனிகளை பரிசளித்தது.

C.W. Mackie PLC நிறுவனத்தின் மிக விரைவாக நுகரப்படும் பாவனையாளர் பொருட்கள் (FMCG) பிரிவான ஸ்கேன் தயாரிப்புகள் பிரிவின் கீழ் உள்ள ஒரு முதன்மையான வர்த்தகநாமமான ஸ்கேன் ஜம்போ பீனட், “ஸ்கேன் ஜம்போ போனான்ஸா” மற்றும் “ஸ்கேன் டெப் ஜம்போ போனான்ஸா” ஆகிய நுகர்வோர் ஊக்குவிப்பு பிரசாரத்தின் 8ஆவது பதிப்பை நிறைவு செய்தது. இந்த நிகழ்வின் போது, ​​50 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு மவுன்டைன் சைக்கிள்கள் வழங்கப்பட்டதோடு, 5 வெற்றியாளர்களுக்கு டெப் கணனிகள் வழங்கப்பட்டன. இந்த பிரம்மாண்டமான நிகழ்வு…

Read More

புத்தளம் பகுதியில் இசைக்கலைஞர் சடலம் மீட்பு.

புத்தளம், ஆராச்சிகட்டுவ பகுதியில் சிலாபம், மணக்குளம் பகுதியை சேர்ந்த பாடகரும் இசைக்கலைஞருமான 42 வயதான இந்திக ரொஷான் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விஜயகுபாத பகுதியில் உள்ள ஒரு வீதியில் சடலம் ஒன்று கிடப்பதாக நேற்று(வெப்ரவரி 17) இரவு கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற ஆராச்சிகட்டுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவரின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என்பதுடன் , மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார்…

Read More

காற்றின் தரக்குறியீட்டில் மாற்றம்.

கடந்த சில நாட்களாக நிலவிய காற்றின் தரக்குறியீட்டில் ஏற்பட்ட எச்சரிக்கை மாற்றம் தற்பொழுது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மட்டத்தில் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.  இருப்பினும் இரத்தினபுரி மற்றும் எம்பிலிப்பிட்டிய நகரங்களில் சற்று மோசமாக காற்றின் தரம் நிலவுவதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், உணர்திறன் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

Read More

10 ரூபாவால் பாணின் விலை குறைப்பு

ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தையில் இணங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வர்த்தக அமைச்சு வளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதோடுஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைப்பதற்கும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More