dengue

2026 ஆம் ஆண்டின் முதல் 05 நாட்களில் 793 பேருக்கு டெங்கு!

2026 ஆம் ஆண்டின் முதல் 05 நாட்களில் மாத்திரம் சுமார் 793 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரம், கடந்த ஆண்டு டெங்கு நோயினால் 26 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக நிபுணர் வைத்தியர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கடந்த ஆண்டு சுமார் 51,438 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்பட்ட டித்வா சூறாவளிக்குப் பின்னர், இதுவரை…

Read More

2025ஆம் ஆண்டில் 409க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழப்பு!

2025ஆம் ஆண்டில்  இலங்கையில் 409க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆனந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.   பத்தரமுல்லையில் ஞாயிற்றுக்கிழமை (4) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆனந்த திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். கடந்த 2024ஆம் ஆண்டில்  இலங்கையில் 388க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளன. 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டில் யானைகளின் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டில் துப்பாக்கிச் சூட்டுக்க இலக்காகி  71 யானைகளும், மின்சாரம் தாக்கி 56 யானைகளும்,…

Read More
Department of examinations

நாளை நள்ளிரவு முதல் உயர்தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்குத் தடை

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சையில் இன்னும் நடத்தப்படாத பாடங்களுக்கு, மேலதிக வகுப்புகள் நடத்துவதற்கு  செவ்வாய்க்கிழமை (06) நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் கீழ், மேலதிக வகுப்புகள், பாடவாரியான கருத்தரங்குகள், மாதிரி வினாத்தாள் அச்சிடல் மற்றும் விநியோகம், பரீட்சை வினாக்களை ஒத்த உள்ளடக்கங்களை விளம்பரப்படுத்துதல் போன்ற அனைத்தும் தடை செய்யப்படும். இந்த உத்தரவை மீறுவோர் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படும் என்றும், நடத்தப்படாத…

Read More

மாகாண சபைத் தேர்தல்களுக்கான பாராளுமன்ற விசேட குழு பிரேரணை சமர்ப்பிப்பு

மாகாண சபைத் தேர்தல்கள் எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும் அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு’ ஒன்றை நியமிப்பதற்கான பிரேரணையை பொதுநிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார். மாகாண சபைத்  தேர்தலை விரைவாக நடத்துவதற்காகவே  புதிய குழு ஒன்றை   நியமிக்கும் யோசனை முன்வைக்கப்படவுள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். காணப்படும்  குறைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகள் ஊடாக…

Read More

திருகோணமலை வீர நகர் பகுதியில் மூன்று வீடுகள் சேதம்

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீர நகர் கரையோர பகுதியில் கடும் சீரற்ற கால நிலை காரணமாக செவ்வாய்க்கிழமை (05) மூன்று வீடுகள் கடலுடன் தாழ் இறங்கியுள்ளது. குறித்த வீட்டில் வசிக்கும் 19 நபர்கள் உறவினர்கள்களின் வீடுகளில் வசித்து வருகின்றனர். தொடர்ந்தும் கடலின் அலை அதிகமான தாக்கம் காரணமாக குறித்த வீடுகள் மேலும் பாதிப்பினை ஏற்படுத்தும் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். எதிர் வரும் காலங்களில் இவ்வாறான சீரற்ற கால நிலை மோசமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்…

Read More

மின்சார சபை இலாபமடைகிறது ஆகவே மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதியளிக்க கூடாது ; மின்பாவனையாளர் சங்கம் வலியுறுதல்

மின்கட்டண அதிகரிப்புக்காக இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள பரிந்துரைகள் மற்றும் அதற்கான தரவுகளில் உண்மைத்தன்மை கிடையாது. மின்சார சபை இலாபமடைகிறது ஆகவே மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதியளிக்க கூடாது என்று மின்பாவனையாளர் சங்கம் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது. மின்கட்டணத்தை திருத்தம் செய்வதை மீள்பரிசீலனை செய்யும் 03 மாத காலத்தில் பிரதான நீர்மின்னுற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்நிலைகளுக்கு கிடைக்கப்பெறும் மழை வீழ்ச்சி குறைந்தமை, இலங்கை மின்சார சபையின் கடன்,எரிபொருள் விலையின் மாற்றம்,புதிய மின்சார சபைச் சட்டத்தின் பிரகாரம் சேவையில் இருந்து…

Read More

மருந்து தட்டுப்பாடு மத்தியில் இந்தியாவுடனான சுகாதார ஒப்பந்தம் ஆபத்தானது – ராஜித்த சேனாரத்ன

நாட்டில் இன்று பாரியளவில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள சுகாதாரம் தொடர்பான திருட்டு ஒப்பந்தம் நாட்டுக்கு பாரிய ஆபத்தாகும் என முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (4) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். நாட்டில்  400க்கும் அதிக மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் மயக்கமூட்டும் மருந்துகளுக்கும் வைத்தியசாலைகளில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருக்கிறது.அதேநேரம் சுகாதாரம் தொடர்பில்…

Read More
mahinda rajapaksa

அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அதிருப்தி – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகம் மற்றும் கொள்கை ரீதியான தீர்மானங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (04) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் பயங்கரமாகத் தோன்றுவதாகக் குறிப்பிட்டார். விசேடமாக, அரசாங்கம் தற்போது கல்வித்துறையையும் சீர்குலைத்துள்ளதாகக் குற்றம் சுமத்திய அவர், நாட்டின் அனைத்துத் துறைகளும் வீழ்ச்சியடைந்து வருவதாகத் தெரிவித்தார்.  அரசாங்கத் தரப்பினர் கடினமாக உழைப்பதாகக் கூறிக்கொண்டாலும், நடைமுறையில் மக்கள்…

Read More

எத்திமலையில் கஞ்சா செடிகள்,துப்பாக்கியுடன் இருவர் கைது!

மொனராகலையில் எத்திமலை – கொட்டியாகல பகுதியில் கஞ்சா செடிகள் மற்றும் துப்பாக்கியுடன் இரண்டு சந்தேக நபர்கள் எத்திமலை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது 31 கஞ்சா செடிகள் மற்றும் ஒரு உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

பொதுப்படுகடன் திணைக்களம் மூடப்பட்டது – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு

ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்குவரும் வகையில் பொதுப்படுகடன் திணைக்களத்தை மூடி, அத்திணைக்களத்தின் ‘Lanka Secure ‘ பிரிவினை கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் திணைக்களத்துக்கு இடமாற்றுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினுள் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பொதுப்படுகடன் முகாமைத்துவ அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது. பொதுப்படுகடன் முகாமைத்துவ அலுவலகம் கடந்த ஆண்டு…

Read More