மோசமான வானிலையால் 4 மாவட்டங்களில் 716 பேர் பாதிப்பு

இலங்கையின் சில பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் சீரற்ற காலநிலையினால் 4 மாவட்டங்களில் 176 குடும்பங்களைச் சேர்ந்த 716 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கடும் வெப்ப நிலை காரணமாக 2 மாவட்டங்களில் 1282 குடும்பங்களைச் சேர்ந்த 3834 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்ட மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் கைது

செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெரலுகஹ பகுதியில் 146 சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எம்பிலிப்பிட்டிய பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இந்த கைது இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர் செவனகல பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 34 வயதுடைய கொளர வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

உப்பு விலையைக் குறைக்க உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை

நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் உப்பு உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் கடந்த 25 ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தொழில்துறை மற்றும் உணவுப் பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் உயர்தர உப்பை நியாயமான விலையில் சந்தையில் வெளியிடுவதற்குத் தேவையான ஒழுங்குமுறைகளைச் செய்வதே இந்தக் கலந்துரையாடலின் நோக்கமாகும். சந்தையில் விற்கப்படும் உப்பின் விலைகள் தொடர்பில் அதிகாரசபை முன்னெடுத்துவரும் கணக்கெடுப்பின் படி, கடந்த காலத்தில் பல்வேறு விலைகளில் உப்பு விற்பனை, பருவகால உப்பு பற்றாக்குறை மற்றும்…

Read More

வழமைக்கு திரும்பிய மலையக ரயில் சேவை

மலையகப் ரயில் பாதையில் இன்று (01) காலை ரயில் போக்குவரத்து தடைப்பட்டது. பதுளை மற்றும் ஹாலி-எல புகையிரத நிலையங்களுக்கு இடையில் மண்சரிவு ஏற்பட்டமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது அது புனரமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

02 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக 02 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதுளை மாவட்டத்தின் கந்தகெட்டிய, பசறை, ஹாலி அல, பதுளை, ஹப்புத்தளை, மீகஹகிவுல, ஊவா பரணகம மற்றும் சொரணதொட்ட மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை ஆகிய பிரதேசங்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று மதியம் 12.30 மணி முதல் நாளை மதியம் 12.30 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி…

Read More

ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

ஹெரோயின் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று (28) கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பி.சி.சி பலாம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Read More

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை

இலங்கையில் எரிபொருள் இருப்புக்களில் தட்டுப்பாடு இல்லை என்று தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார் எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் உருவாகியுள்ள வரிசைகள் குறித்து இன்று (1) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். தற்போது நாட்டில் எரிபொருள் நெருக்கடி இருப்பதாகக் காட்ட சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் ஒரு செயற்கை எரிபொருள் நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதாக அனில் ஜயந்த சுட்டிக்காட்டினார்.

Read More

Laugfs எரிவாயு குறித்து வெளியான அறிவிப்பு

மார்ச் மாதத்திற்கான laugfs எரிவாயு விலையில் எந்தவொரு திருத்தமும் செய்யப்படாது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் இதனை தெரிவித்தார். அதன்படி, தற்போது 12.5 கிலோகிராம் எடை கொண்ட லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று 3,680 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 20,000 சிகரெட்டுகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போதே குறித்த கைது இடம் பெற்றுள்ளது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

Read More

இலங்கை மின்சார சபைக்கு உயர் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

மின்சார இணைப்புகளை வழங்கும்போது அனைத்து நுகர்வோரிடமிருந்தும் பெறப்படும் பாதுகாப்பு வைப்புத்தொகைக்கான வருடாந்த வட்டியை செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏ.எஸ்.துறைராசா, உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதியரசர்கள் ஆயத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவிற்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Read More