மோட்டார் வாகன வரியை உடன் குறைக்க வேண்டும் ; மோட்டார் வாகன இறக்குமதியாளர் சம்மேளனத்தின் தலைவர் கோரிக்கை

நடுத்தர மக்கள் கொள்வனவு செய்யும் மோட்டார் வாகனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை அரசாங்கம் குறைக்க வேண்டும் என சிலோன் மோட்டார் வாகன இறக்குமதியாளர் சம்மேளனத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்தார். கொழும்பில் உள்ள சிலோன்  மோட்டார் வாகன இறக்குமதியாளர் சம்மேளனத்தின் காரியாலயத்தில்  வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நாட்டில் அண்மையில் நிலவிய இயற்கை அனர்த்தங்களுக்கு பின்னர் வாகன கொள்வனவு வீதம் சடுதியாக குறைவடைந்துள்ளது.  வாகன இறக்குமதிக்காக முன்பதிவுகள் செய்தவர்கள் இயற்கை அனர்த்தங்களால்…

Read More

சுனாமி பேபி , பெற்றோர் அஞ்சலி செலுத்தினர்

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் அமைந்துள்ள சுனாமி பேபி அபிலாஷின் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபியின் முன்பாக ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளுக்காக அபிலாஷின் பெற்றோர் அஞ்சலியை இன்று வெள்ளிக்கிழமை (26) செலுத்தினர். தற்போது 21 வயதுடை சுனாமி பேபி 81 என அறியப்படும் ஜெயராசா அபிலாஷ் தனது உயர் படிப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார். இந்நிலையில் அவரது இல்லத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத் தூபியில் அவரது பெற்றோர் இன்று சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Read More

போராட்டங்களுக்கும் நாம் தயாரென எதிர்க்கட்சித் தலைவர் அறிவிப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார் அக்காணொளியில் அவர், பொலிஸ் அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி ஊடகங்களை ஒடுக்கி,  அடக்குமுறை ஆட்சியை உருவாக்க தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கின்றது. நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பிரதான தூண்களில் ஒன்றான  சுயாதீன ஊடகத்துறை மீது கை வைக்க வேண்டாமென  எச்சரிக்கை விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமாதாச தெரிவித்துள்ளார். இலங்கை ஜனநாயக நாடு. அதன் நான்கு பிரதான தூண்களான சட்டவாக்கம், நிறைவேற்றுத்துறை, நீதித்துறை மற்றும் சுயாதீன ஊடகங்கள்…

Read More

உழைக்கும் வர்க்கம் பேரழிவுக்கு பொறுப்பேற்க முடியாது – புபுது ஜயகொட

தித்வா சூறாவளியினால் ஏற்பட்ட பேரழிவுக்கு இந்நாட்டின் உழைக்கும் வர்க்கம் பொறுப்பேற்க முடியாது. ஏகாதிபத்திய நிதி மூலதனமும் முதலாளித்துவ வர்க்கமுமே இந்த அழிவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டு மென முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார். கொழும்பு லயன்ஸ் கிளப் மண்டபத்தில் ‘தித்வா சூறாவளியின் துயரத்துடன் முன்னோக்கி’ எனும் தொனிப்பொருளில் சோசலிச கட்சி ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உலகின் மொத்த கார்பன் வெளியேற்றத்தில் 37 சதவீதத்திற்கு  பெரும்…

Read More

வெளிநாட்டு நிவாரண உதவிகளுக்கான களஞ்சிய மேலாண்மை –அதிகாரிகளுக்கு ஆலோசனை

தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்தின்  மேலதிக செயலாளர் மற்றும் அதிகாரிகள், வெளிநாட்டு நிவாரண உதவிகளுக்கான களஞ்சிய மேலாண்மை பொறுப்புகளை ஒதுக்குதல், மேலும் நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொள்ளல் மற்றும் கண்காணிப்பிற்காக உருவாக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான சரக்கு முகாமைத்துவ அமைப்பை முறையாக கையளித்து பயன்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய செயல்பாட்டு விடயங்கள் தொடர்பில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். வெளிநாட்டு மனிதாபிமான நிவாரண உதவிகள் (விநியோகங்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர் மட்டக் குழுவின் …

Read More

நானுஓயா – பதுளை  புகையிரத சேவை இரண்டு மாதங்களில் ஆரம்பிக்கப்படும் – போக்குவரத்து பிரதி அமைச்சர்

இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த புகையிரத பாதைகள் கட்டம் கட்டமாக புனரமைக்கப்படுகின்றன. நானுஓயா –பதுளை  புகையிரத சேவை இன்னும் இரண்டு மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அனர்த்தத்தால் சேதமடைந்த வீதிகள் மற்றும் புகையிரத பாலங்களை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுகிறது.தற்போது வடக்கு மற்றும் கிழக்குக்கான புகையிரத சேவைகள் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  அனர்தங்களால் மலையகத்துக்கான புகையிரத சேவைகள் மிக…

Read More
DEATH

கல்தோட்ட பகுதியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

பலாங்கொடை – கல்தோட்ட பொலிஸ் பிரிவின் பின்னகெட்டிய பகுதியில் உள்ள வளவை ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு பேர் மீது கும்புக் மரத்தின் கிளை முறிந்து விழுந்து காயமடைந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்  பலாங்கொடை – கல்தோட்ட பகுதியைச்  சேர்ந்த 47 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக  தெரிவித்துள்ளனர்.

Read More

ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று புதன்கிழமை (24) ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படை தலைமையக அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரிடமிருந்து 310 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 60,000 ரூபாய் பணம் மற்றும் கார் என்பன கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபரை கைது செய்து கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Read More

எஹெலியகொடையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

எஹெலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்தினபுரி – அவிசாவளை வீதியின் மஹிங்கொட பகுதியில் நேற்று புதன்கிழமை (24) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரத்தினபுரியிலிருந்து அவிசாவளை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிர்திசையில் வந்த தனியார் பஸ்ஸூடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.  இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் குழந்தையொன்றும் பலத்த காயமடைந்து, எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

Read More
heroine_case_arrest

தபாலில் அனுப்பப்பட்ட 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றல் ; ஒருவர் கைது

தபாலில் அனுப்பப்பட்ட 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் பொதி ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த போதைப் பொருட்கள் தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு தபாலில் அனுப்பப்பட்டவைகள் எனத் தெரியவந்துள்ளது. இந்நிலையில், சுங்க அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் சுங்கத் திணைக்களப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவிக்கையில்,  போதைப்பொருளின் மொத்த எடை 6 கிலோ கிராம் 201 கிராம் ஆகும். விசேட சோதனை நடவடிக்கையின்…

Read More