இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

புத்தளம் பகுதியில் இசைக்கலைஞர் சடலம் மீட்பு.
புத்தளம், ஆராச்சிகட்டுவ பகுதியில் சிலாபம், மணக்குளம் பகுதியை சேர்ந்த பாடகரும் இசைக்கலைஞருமான 42 வயதான இந்திக ரொஷான் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விஜயகுபாத பகுதியில் உள்ள ஒரு வீதியில் சடலம் ஒன்று கிடப்பதாக நேற்று(வெப்ரவரி 17) இரவு கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற ஆராச்சிகட்டுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவரின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என்பதுடன் , மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார்…