கொழும்பு மாநகர சபை மேயர் தெரிவில் எந்தச் சதியும் நடக்கவில்லை. தோல்வியடைந்த சஜித் அணியினர் பொய்களைக் கூறிப் புலம்புவதை நிறுத்த வேண்டும் என்று கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள விராய் கெலீ பல்தசார்(Vraie Cally Balthazaar) தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் தலைவரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சதியாலேயே கொழும்பு மாநகர சபையை ஐக்கிய மக்கள் சக்தி இழந்தது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

யாழ். மாவட்ட செயலகத்தின் முக்கிய அறிவிப்பு!
பிறப்புச் சான்றிதழ் பதிவு செய்யாத பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடமாடும் சேவை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இம்மாதம் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பி. ப 3.00 மணிவரை அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெறவுள்ளது. இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தேவையான உரிய ஆவணங்களுடன் வருகைதந்து பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்று பயனடையுமாறு யாழ். மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.