அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…

உரமானியம் கிடைக்காததால் வேதனையில் விவசாயிகள்
சிறுபோகத்திற்கான விளைச்சல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தினால் வழங்கப்படும் உரமானியம் இதுவரையிலும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என விவசாயிகள் குற்றஞ்சுமத்துகின்றனர். தற்போது சிறுபோக நெற்செய்கைக்காக பதினைந்தாயிரம் மெற்றிக் டன் உரம் தேவைப்படுவதாக விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன. குறித்த உரத்தொகையானது ஒரு மாதத்துக்கு முன்பாகவே வழங்கப்பட்டிருக்க வேண்டுமென அந்த அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. இவ்வாறு உரிய காலப்பகுதிக்குள் உரம் வழங்கப்படாமையால் எதிர்பார்த்தளவு விளைச்சலைப் பெற முடியாது எனவும் விவசாய அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. மானிய விலையில் உரம் வழங்கப்படாமையினால் அதிக விலைக்கு உரத்தை…