வளிமண்டலவியல் திணைக்களத்தினால் மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்.

முன்னொருபோதும் இல்லாதவகையில் தினமும் வெப்பநிலையில் தாக்கம் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. அது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அது எச்சரிக்கை மட்டத்தை அடையவுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அடுத்துவரும் 24மணிநேரத்துக்கும் இது நலவக்கூடிய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.அதன்படிவடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், இரத்தினபுரி மாவட்டத்திலும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பமான காலநிலையை கருத்தில் கொண்டு அவசர தேவைகள் மற்றும் இதர முக்கிய கரணங்கள் இன்றி வெளியில் நடமாடுதல் தவிர்க்குமாறும், வெயிலில் வேலையெய்ப்பவர்கள் எச்சரிக்கையோடு நடந்துகொள்ளவேண்டும்…

Read More

கலாசூரி தேச நேத்ரு கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் அம்மா காலமானார்

இலங்கையின் இசை ஆளுமையும் ஊடக துறையில் நெடுங்காலமாக கோலோச்சிய கலாசூரி தேச நேத்ரு கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் அம்மா சற்று முன்னர் ஆஸ்திரேலியாவில் காலமாகிய செய்தியை அவர் மகன் சியாமலங்கன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். அவரால் கலைத்துறையில் இன்னுமோர் தளத்திற்குச்சென்றவர்கள் அதிகதிகம். கடந்த சில வருடங்களாக அவுஸ்ரேலியாவில் சுகவீனமுற்று இருந்தவேளையிலும் தனது மாணவர்கள் இலங்கையில் செய்யும் கச்சேரிகளை தொலைத்தொடர்பு மூலம் வழிநடத்தியவர். இவரின் இழப்பு ஈடு செய்யமுடியாத ஒன்றாககும். அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்.

Read More

புதிய அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெற்ற ஏற்றமும் இரக்கமும்

“வளமான நாட்டுக்கான முதற்படி” என்ற தொனிப்பொருளில் நிதியமைச்சர் என்ற வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்தார் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க புதிய வரவுசெலவுத்திட்டத்தை முன்வைக்க முன் “2028 ஆம் ஆண்டு கடன்களை கடனை மீளச் செலுத்தும் வகையில் நாட்டை அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் 2025 ஆம் ஆண்டில் 5% பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்ப்பதாகவும்” தெரிவித்தார். 2025 ஆண்டிற்க்கான புதிய அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள். இந்த ஆண்டு எம்.பி.க்களின்…

Read More

திலிண களுதொடகேவினால்வேகத்தில், தூரத்திலும் வித்தியாசப்பட்ட இரண்டு அம்சங்கள் ஒரு புகைப்படத்தில் – இலங்கை புகைப்பட கலைஞரின் கைவண்ணம்.

இலங்கை புகைப்பட கலைஞர் திலிண களுதொடகேவினால் பெப்ரவரி 4ம் திகதி கொழும்பில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தை இரண்டு நாட்களுக்கு முன் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் பதிவிட்டபின் தற்போது அந்த புகைப்படம் பேசுபொருளாகியுள்ளது. பூமியில் இருந்து சந்திரனுக்கு 3,97,000 கிலோமீற்றர் தூரம் இடைவெளி, அதேநேரம் Airbus A330 விமானமொன்று பூமியில் இருந்து 38 ஆயிரம் அடி உயரத்தில், மணித்தியாலத்துக்கு 915 கிலோமீற்றர் வேகத்தில் பறக்கும். இவ்விரண்டையும்ஒரே கமெராவுக்குள் மிக லாவகமாக அடக்கி அட்டகாசம் படம்பிடித்துள்ளார். இவரது இன்ஸ்டா…

Read More

அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை அச்சுறுத்துகிறார்கள் – எதிர்கட்சிதலைவர்.

தற்போதைய அரசாங்கம் என்னவாறான பொய்களை எல்லாம் கூற முடியுமோ அத்தனையையும் கூறி, மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச களனி பிரதேசத்தில் நேற்று (வெப்ரவரி 16) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.  சொன்னவற்றை செய்ய முடியாமல் தடுமாறும் அரசாங்கத்தை விமர்சிக்கும் தரப்பினரை அவர்கள் அச்சுறுத்துகிறார்கள் எனவும், இந்த அரசாங்கம் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்பனவற்றை மீறி செயட்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Read More

இலங்கை தமிழரசு கட்சியின் புதிய பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று(வெப்ரவரி 16) மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் உள்ள கட்சியின் பதில் தலைவர் C.V.K.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் மத்திய குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது நீண்டகாலமாக கட்சியின் பொதுச்செயலாளரக கடமையாற்றிய வைத்தியர் சத்தியலிங்கம் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்ததை அடுத்து கட்சியின் துணைச்செயலாளராக கடமையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் இத்தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்படவில்லை என்பதனையும் பகிரங்கமாக ஊடகங்களுக்கு கட்சியின்…

Read More

“பிடியளவு கமநிலத்துக்கு” திட்டம் தற்போது உப்புவேலி முத்துநகரில் ஆரம்பம்.

இலங்கை முழுவதுமாக வினைத்திறன் மிக்க விவசாயத்தை ஊக்குவிக்கும் முகமாக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தேசிய வேலைத்திட்டமான “பிடியளவு கமநிலத்துக்கு”எனும் திட்டம் நேற்று (வெப்ரவரி 15) திருகோணமலை மாவட்ட உப்புவேலி கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்களத்திற்கு உற்பட்ட முத்துநகர் பகுதியில் ஆரம்பமானது. உப்புவேலி கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்களம் மற்றும் முத்துநகர், தகரவெட்டுவான், மத்தியவேலி, அம்மன்குலம் ஆகிய விவசாய சம்மேளனங்களின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வானது உப்புவேலி கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் டி.தர்ஷானந்தன் தலைமையில் இடம்பெற்றது. விவசாயத்தை ஊக்குவிக்கும் இத்திட்டத்தின்…

Read More

புதிதாக உதயமான அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்.

இலங்கையில் அச்சு, இலத்திரனியல்,இணையத்தளம் மற்றும் பதிவு செய்யப்பட்ட சமூக ஊடகங்களில் பணிபுரியும் தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள் மற்றும் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு சட்டரீதியாகவும், திறமையை வளர்க்கும் பங்காற்றலோடும், சரீர உதவிகளை வழங்குவதற்கும், சமூக மற்றும் தனிப்பட்ட ரீதியிலான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் நோக்கோடும் இந்த புதிய அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இன்று (வெப்ரவரி 16) காலை 10 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. ஆரம்ப நிகழ்வாக அண்மையில் மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி அய்யாவுக்கான…

Read More

இலங்கையில் சாபக்கேடாக மாறும் சிறுநீரக நோய்!

இலங்கையில் பல்வேறு காரணங்களால் ஏற்படும் சிறுநீரக நோயினால்ஆண்டுதோறும் சுமார் பத்தாயிரம் பேர் மரணிக்கின்றனர். கடந்த 10வருடங்களில் இந்த நோயினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதோடு, சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் நாட்டில் இருப்பதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்களின் தொழிற்சங்கம் வெளியிட்ட தகவலில் வெளியிடப்பட்டுள்ளது. உடனடி சிகிச்சை பெறமுடியாத நாள்ப்பட்ட சிறுநீரக நோயாளர்களே இவ்வாறு மரணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அம்பாறை, பதுளை, மொணராகல், பொலனறுவை, அனுராதபுரம், குருணாகல் போன்ற…

Read More

அரச ஊழியர்களின் சம்பளம் வாய்ப்புள்ளது…!

நாளை(வெப்ரவரி 17) புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் சர்க்கப்படவுள்ளநிலையில் அரச ஊழியர்களின் ஊதிய உயர்வுகளையும் , புதிய நியமங்களையும் எதிர்பார்த்துள்ளதாக அரசஊழியர்களும், வேலையில்லா பட்டதாரிகளும் கூறுகின்றனர். எவ்வாறாயினும் இன்றைய இலங்கையில் பொருளாதாரத்தலம்பலின் மத்தியில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத்திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுரைக்கு அமைவாக அமையும் என நிதி அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Read More