நாட்டின் காலநிலை காரணமாக பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு.

நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வறண்ட காலநிலை காரணமாக, பல மாவட்டங்களில் 7,000ற்கும் அதிகமான மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் 2,295 குடும்பங்களைச் சேர்ந்த 7,258 பேர் குடிநீர் இல்லாமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக த தெரண ஊடகத்திற்கு இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய ஹேரத் தெரிவித்துள்ளார். அதன்படி, களுத்துறை மாவட்டத்தில் மதுகம பிரதேச செயலாளர் பிரிவிலும், இரத்தினபுரி மாவட்டத்தில் வெலிகெபொல, எஹெலியகொட, கலவான…

Read More

சிவனொளிபாத மலைப்பகுதியில் தீ பரவல்.

சிவனொளிபாத மலைப்பகுதியில் ஏற்பட்ட பாரிய தீ பரவலினால் சுமார் 30 ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளதாக வனப்பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நல்லத்தண்ணி வாழைமலைப் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி மாலை ஏற்பட்ட காட்டுத்தீ அதிக வெப்பமனா காலநிலையினால் சிவனொளிபாதமலை தொடர் வரை பரவியது. எனினும் பெரும் பூரேற்றத்துக்கு மத்தியில் விமானப்படைக்கு சொந்தமான விமானத்தின் உதவியுடன் காட்டுத் தீ கட்டுப்பட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக ஹட்டன் வனப்பாதுகாப்பு பிரிவு அதிகாரி வீ.ஜே. ருக்ஷான் தெரிவித்துள்ளார். மலையகத்தில் தொடர்ந்து கடும்…

Read More

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நாமலுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி நாளை (26.02.2025) ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காகவே குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Read More

ஜனாதிபதி ஊடகப் பிரிவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக பிரசன்ன பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவரிடம் கையளித்தார்.

Read More

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

எஞ்சியுள்ள அனைத்து கடவுச்சீட்டுக்களையும் ஒரு மாதத்திற்குள் வழங்கி, இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டுக்களை பெறுவதில் பொதுமக்களின் இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்கும் முதன்மை நோக்கத்துடன் 24 மணி நேரமும் கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள ஊழியர்களின் அர்ப்பணிப்புக்கு அவர் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

Read More

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் அபாயம்

தற்போதைய வறண்ட வானிலை நிலைமைகள் தொடர்ந்து நீடித்தால் மின்சாரக் கட்டணங்களை உயர்த்த வேண்டியிருக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பொறியியலாளர்களின் சந்திப்பில் நேற்று (23) பங்கேற்று உரையாற்றிய போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

Read More

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மதிப்பாய்வு திகதி அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மதிப்பாய்வு எதிர்வரும் 28 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என்று வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த 22 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதத்தில் பங்கேற்றுப் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார். ஆறாவது தவணையிலிருந்து $335 மில்லியனைப் பெற உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்

Read More

குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

சுமார் இரண்டு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (24) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரின் வசம் இருந்து கஞ்சா கலந்த 01 கிலோ 908 கிராம் குஷ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சந்தேகநபர் குஷ் போதைப்பொருளை ஒரு சிறிய பையில் சூட்சுமமாக பொதி…

Read More