உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…

கலாசூரி தேச நேத்ரு கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் அம்மா காலமானார்
இலங்கையின் இசை ஆளுமையும் ஊடக துறையில் நெடுங்காலமாக கோலோச்சிய கலாசூரி தேச நேத்ரு கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் அம்மா சற்று முன்னர் ஆஸ்திரேலியாவில் காலமாகிய செய்தியை அவர் மகன் சியாமலங்கன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். அவரால் கலைத்துறையில் இன்னுமோர் தளத்திற்குச்சென்றவர்கள் அதிகதிகம். கடந்த சில வருடங்களாக அவுஸ்ரேலியாவில் சுகவீனமுற்று இருந்தவேளையிலும் தனது மாணவர்கள் இலங்கையில் செய்யும் கச்சேரிகளை தொலைத்தொடர்பு மூலம் வழிநடத்தியவர். இவரின் இழப்பு ஈடு செய்யமுடியாத ஒன்றாககும். அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்.