அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…

கலாசூரி தேச நேத்ரு கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் அம்மா காலமானார்
இலங்கையின் இசை ஆளுமையும் ஊடக துறையில் நெடுங்காலமாக கோலோச்சிய கலாசூரி தேச நேத்ரு கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் அம்மா சற்று முன்னர் ஆஸ்திரேலியாவில் காலமாகிய செய்தியை அவர் மகன் சியாமலங்கன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். அவரால் கலைத்துறையில் இன்னுமோர் தளத்திற்குச்சென்றவர்கள் அதிகதிகம். கடந்த சில வருடங்களாக அவுஸ்ரேலியாவில் சுகவீனமுற்று இருந்தவேளையிலும் தனது மாணவர்கள் இலங்கையில் செய்யும் கச்சேரிகளை தொலைத்தொடர்பு மூலம் வழிநடத்தியவர். இவரின் இழப்பு ஈடு செய்யமுடியாத ஒன்றாககும். அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்.